விஜய் டீ.வி. நீயா நானாவின் இடஒதுக்கீடு..

you

பெரியார், டாக்டர் அம்பேத்கர் கருத்துகளை தொடர்ந்து இணையங்களில் சிறப்பாக எழுதி வருகிற, டாக்டர் அம்பேத்கர்-பெரியார் பற்றி அவதூறு செய்பவர்களோடு வலுவாக தர்க்கம் செய்து, அவர்களை அம்பலப்படுத்துகிற, தோழர். பிரபா அழகர் தன்னுடைய facebook ல் நேற்று விஜய் டீ.வியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சி பற்றி எழுதியதை ஆதரித்து நான் எழுதியது.

*

பல வருட நீயா நானா வரலாற்றில் எனக்கு தெரிஞ்சு இன்னைக்குதான் இடஒதுக்கீடு குறித்து பேசப்படுகிறது (அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொக்கையான வாத பிரதிவாதங்கள்), பின்ன எப்படி இடஒதுக்கீட்டை பற்றி சரியான புரிதல் இன்றைய இளைஞர்களுக்கு இல்லைன்னு அந்த நிகழ்ச்சியை நடத்துபவரால் குற்றம்சாட்டமுடிகிறது ..

பிரபா அழகர்

ஆமாம்.

விளக்கம் கொடுக்கிறவர்களிடமே அதற்கான தெளிவான விடை இல்லாதபோது…

மாணவர்கள் தங்கள் கல்வியைத் தவிர, மற்ற பொது விசயங்கள் எல்லாவற்றையும் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொள்கிறார்கள். ஊடகங்கள் உண்மையைத்தான் சொல்லும் என்கிற புரிதலோடு இருக்கிறா்கள்.

ஒட்டுமொத்த ஊடகங்களும் இடஒதுக்கீடு எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி, இஸ்லாமிய வெறுப்பு என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளோடு வடித்தோடு இயங்கும்போது, அவைகள் மூலமாக பொது விசயத்தை புரிந்து கொள்கிற இந்த இளைஞர்கள்; ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்னால்தான் அது ஆச்சர்யம்.

டிசம்பர் 24 (பெரியார் நினைவுநாள்) அன்று நீயா நானாவில் மாணவர்களுடன் எழுத்தளார்கள், பத்திரிகையாளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று டிசம்பர் 20ஆம் தேதி விஜய் டி.வியிலிருந்து ஒரு பெண் தோழர் பேசினார். (பெயர் நினைவில்லை)

‘எத்தனைபேர் கலந்து கொள்கிறார்கள் என்றேன்’ ’15 க்கு 15’ என்றார்.
‘30 பேர்கள் கருத்து சொல்கிற இடத்தில் நான் ஒரு நிமிடமோ இரண்டு நிமிடமோ கருத்து சொல்வதில் அந்தப் பிரச்சினையை சரியாக சொல்லிவிட முடியாது.
அதனால் கூடுதல் நேரங்கள் பேச வாய்ப்பிருக்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்’ என்று அழைத்தைமைக்காக அவருக்கு நன்றி சொல்லி கலந்துகொள்ளமுடியாததற்காக வருத்தம் தெரிவித்தேன்.

நானும் நேற்று ‘நீயா நானா’ பார்த்தேன். விளக்கம் சொன்னவர்கள் அந்த இளைஞர்களின் அறியாமையை அகற்ற, எளிதில் புரிந்துகொள்வது மாதிரி பேசியிருக்கலாம்…

குறிப்பாக இடஒதுக்கீடு பற்றியான எதிர்கருத்துகளுக்கு,

‘இந்தியாவில் இடஒதுக்கீடு 2000 ஆண்டுகளாக இருக்கிறது, அரசின் அனைத்து சலுகைகளும் பார்ப்பனர்களுக்கு பிறகு சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்று மனு என்பவர் சட்டம் செய்து வைத்தார்..
அதற்கு மாற்றாக இந்த நூற்றாண்டில் நீதிக்கட்சிகாரர்கள், பெரியார், டாக்டர் அம்பேத்கர் இவர்கள் கொண்டுவந்த, வலியுறுத்திய இடஒதுக்கிடு அதை தலைகீழாக திருப்பிப் போட்டதுதான்.

பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் கடைசியாக பார்ப்பனர்கள்…
இந்த இடஒதுக்கீடுக்கு 60 ஆண்டுகள்தான் ஆகிறது…
2000 ஆண்டுகள் ஆதிக்கத்தை 60 ஆண்டுகளில் எப்படி ஒழிக்க முடியும்?’ என்றும்..

மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்,
சமூக நீதி அரசியல், இடஒதுக்கீடு ஆதரவு  என்று அரசியல் செய்கிற ராமதாஸ் போன்றவர்களே அப்படி இருக்கும்போது இந்த மாணவன் கண்ணோட்டம் ஆச்சரியமில்லை…

‘மிக பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்ற சலுகையை அனுபவிக்கிற உங்கள் ஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்டவர்களும் பார்ப்பனர்களும் குற்றமாக சொல்கிறார்கள்….’ என்று கேட்டாவது அவருக்கு புரிய வைக்க முயற்சித்திருக்கலாம்…

என்னால் கடைசிவரை பார்க்க ‘முடியவில்லை’, அதற்குப் பிறகு விளக்கினார்களா தெரிவில்லை.

தொடர்புடையவை:

இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

2 thoughts on “விஜய் டீ.வி. நீயா நானாவின் இடஒதுக்கீடு..

  1. 700 varudam Muslim reservation ( including tax to Hindus) marandhu vitathaa? Adhaiyum sollierukalam

  2. 700 varudam Muslim reservation ( including tax to Hindus) marandhu vitathaa? Adhaiyum sollierukalam//

    அத சொல்ல மாட்டார் எழுதறது சொல்றது 90% பொய்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading