பழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்

http://upload.wikimedia.org/wikipedia/commons/5/58/White-label-blank.jpg

பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  பெரும் தீங்கிழைத்து  – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க,

தேவர்களுக்காக (பார்ப்பனர்களுக்காக) அசுர குல தலைவன் நரகா அசுரனை கொன்று, அநீதியை நிலைநாட்டிய தீயவன், உலகின் முதல் கூலிப்படைத் தலைவன் கண்ணனை பழிதீர்க்க, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று மாவீரன் நரகா அசுரன் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

108 thoughts on “பழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்

  1. //பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் தீங்கிழைத்து – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க//

    சில நேரம் சகோதரர் மதிமாறன் அவர்களின் தளத்தில் நகைச்சுவை பகுதி இல்லையோ, என்ற சந்தேகம் வராமல் இருக்க அவ்வோபோது சில சிறு கட்டுரைகளை அல்லது துணுக்குகளை பதிவு செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது என்பது போல தோன்றுகிறது.

    ஏதோ ராவணண் மிகவும் நேர்மையானவன் போலவும்,

    மக்களின் நன்மைக்கு பாடு பட்டவன் போலவும்,

    ராவணண் பெண்களின் மானத்தைக் காப்பவன் போலவும்,

    அவன் மீது ஒரு தவறும் இல்லாதது போலவும்,

    அப்படிப்பட்ட அப்பாவி ராவணனைப் படுகொலை செய்துவிட்டார்கள் என்பது போலவும் பதிவு இட்டு இருக்கிறார்கள்.

    தமிழர்களின் கலாச்சாரம் பெண்களுக்கு, மதிப்பும், பாதுகாப்பும், கொடுக்கும் கலாச்சாரம் ஆகும். பெண்களின் கற்பை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்த, வாழும் சமுதாயம் தமிழ் சமுதாயம் ஆகும்.

    பிறன் இல் விழையாமை குறித்து வள்ளுவர் ஒரு தனி அதிகாரமே வைத்து 10 குறள்கள் எழுதியுள்ளார்.

    இராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியா அல்லது வெறும் கதையா என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

    இராமாயணம் ஒரு நிஜமான நிகழ்வாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் அது வெறும் கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.

    இராமாயணம் உண்மை நிகழ்வாக இருந்திருக்கும் பட்சத்தில் இந்த பகுத்தாய்வை தருகிறோம்.

    இராமாயணம் அரசியல், சமூகம் என பல பரிமாணங்களை உடையது!

    தன் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றூம் கொள்கைக்கு ஆக, இராமன் காடு சென்றான்!

    இராமனோடு, சீதையும் தானாக வனம் சென்றார்!

    இந்திய வரலாற்றிலே, கண்ணகி,சீதை, சந்திரமதி போன்ற சில பெண்கள் உலகிற்கு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றுள்ளனர்!

    அது என்னவென்றால் “கற்பு என்பது கணவனோடு மட்டும் உறவு கொள்வது” -என்பது மட்டும் அல்ல!-

    ”கணவன் எந்த தாழ்ந்த நிலயை அடைந்தாலும், அவனை விட்டுக் கொடுக்காமல், விட்டு விலகாமல், அவன் துயரங்களில் பங்கு எடுத்து, அவன் மீண்டு வர ஒத்துலைப்பதுதான் கற்பு” என்பதுதான் கண்ணகி சீதை போன்ற பெண்கள் உலகிற்கு விட்டுச் சென்ற வரலாறு!

    அந்த அளவுக்கு கணவனுக்காக தன அத்தனை சுகங்களையும் விட்டு வந்த, காட்டு வாழ்க்கையின் பல்வேறு துயரங்களையும் தன் கணவனுக்காக தாங்கிக் கொண்ட ஒரு அப்பாவிப் பெண்ணை, ஏமாற்றி தூக்கி சென்றிருக்கிறான் இந்த இராவணன். அவனைப் பாராட்டவா முடியும்?

    ராமன் ராவண அசுரனை வஞ்சகமாக கொலை செய்தானாம்!

    இராவ‌ண‌ன் உத்த‌ம‌மான‌வ‌னாம்!!

    அவ‌ன் இன்னொருவ‌ர் ம‌னைவியைத் தூக்கிப் போவானாம். அந்த‌ அப்பாவி பெண்ணை விடுவிக்க‌க் கோரிக்கை வைக்க‌ப் ப‌ட்ட‌து அல்ல‌வா? அனும‌ன் கேட்ட‌ போதே விடுவித்து இருந்தால் எத‌ற்க்கு‌ப் ப‌டை எடுக்க‌ப் போகிறோம்?

    ஆகையால் த‌மிழ‌ர்க‌ளே, கோழைத் த‌ன‌முடைய‌ பொருக்கிப் ப‌ய‌ல்கள், பிற‌ன் ம‌னைவியை தூக்கிப் போக‌லாமாம்!

    அந்த‌ப் பெண்ணை விடுவிக்க‌ அவ‌ள் க‌ண‌வ‌ன் போரிட்டால் அவ‌ன் கொலைகார‌னாம்!

    இவர்க‌ள் தான் புதிய‌ வ‌ள்ளுவ‌ர்கள்!

    பிற‌ன்ம‌னை விழையாமை குறித்து ப‌த்துப் பாட‌ல்க‌ள் பாடிய‌ வ‌ள்ளுவ‌ரை ஏற‌ க‌ட்டி விட்டு, இவ‌ர்க‌ள் புதிய‌ கொள்கையுட‌ன் புற‌ப்ப‌ட்டுள்ளன‌ர்.

    என‌வே ந‌ண்ப‌ர்க‌ளே, உங்க‌ளில் யாராவ‌து, த‌ன்னுடைய‌‌ ம‌னைவி ப‌ல‌வ‌ந்த‌மாக‌ தூக்கிச் செல்ல‌ப் ப‌டுவ‌து த‌வ‌றில்லை என்று க‌ருதினால், அப்ப‌டி தூக்கிச் சென்ற‌ பொருக்கிப் ப‌ய‌லை ம‌ன்னிக்கும் ம‌ன‌நிலை உடைய‌வ‌ராக‌ இருந்தால், உங்க‌ளுக்கு த‌லைமை ஏற்று ந‌ட‌த்த‌ புதிய‌ புய‌ல்க‌ள் புற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌!

    ஆனால் நீங்க‌ள், “ஒருவ‌ன் ம‌னைவியை இன்னொருவ‌ன் தூக்கிச் செல்வ‌து த‌வறு, அதை ம‌ன்னிக்க‌ முடியாது” என்று கூறும் ப‌ழ‌மை வாதியாக‌ இருந்தால், உங்களுக்கு ப‌ழைய‌ வ‌ள்ளுவ‌ரை விட்டால் வேறு வ‌ழியில்லை.

    நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.

    நியாயம் எது என்று சிந்தியுங்கள்!

    நீங்கள் இராவணனுக்கு ஆதரவு அளித்தால், அவன் செய்த செயல்களை ஒத்துக் கொள்வதாகவே முடியும். நீங்கள், உங்கள்
    தாயாரிடம், தமக்கையிடம், பிற பெண்களிடம் ‘இராவணன் செய்தது சரிதான், இராவணனை ஆதரியுங்கள்’ என்று உங்களால் கூற முடியுமா? அவர்கள் உங்களுக்கு என்ன பதில் சொல்வார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

    இராமன் தமிழன் அல்ல. இராமன் உத்தர் பிரதேசத்தை சேர்ந்தவன் தான். ஆனால் அவன் ஆட்சியை விரிவு படுத்த தமிழ் நாட்டுக்கு வரவில்லை. தனக்கு வர வேண்டிய ஆட்சியை விட்டு விட்டான். த‌ன் ம‌னைவியை மீட்க‌த் தான் இல‌ங்கைக்கு சென்றான்.

    பிரச்சினை கொள்கை அடிப்படையில் தான்.

    “இராவ‌ண‌ன் செய்தது ச‌ரி. அழ‌கான‌ பெண்ணைப் பார்த்தால், வ‌லிமை உள்ள‌வ‌ன் அந்த‌ப் பெண்ணைத் தூக்கிச் செல்ல‌லாம். அந்த‌ப் பெண்ணின் க‌ணவ‌ன் கேட்டாலும், அவ‌ன் ம‌னைவியை திருப்பி கொடுக்க‌ வேண்டிய‌தில்லை” என்ப‌து ந‌ம‌து கொள்கையா?

    நாம் அழுத்தம் கொடுப்பது கொள்கைகளுக்காகத் தான்.

    துறவி போல வேடமிட்டு இராவணன் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றால், தமிழ்ப் பெண்கள் அவனைத் துடைப்பத்தால் அடித்து விரட்டுவார்கள்.

  2. அடடே திருச்சிக்கார சாமி……..

    இராவணனுக்கு ஒரு வரம் இருக்கிறது தெரியுமா?
    அது யாரோ உங்க ஆளுக குடுத்துதான் மாட்டிக்கிட்டான்க… அதாவது இராவணன் ஒரு பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் அவளை தொட்டால் அவன் தலைவெடித்துவிடுமாம்….

    இப்பச்சொல்லுங்கள் நம்மாளு புஜபலத்த பாத்து ஏங்கி ஏங்கி இந்த மாதிரி அங்க இல்லையேன்னும், வில்ல ஒடச்சாமட்டும் போதுமான்னு வெம்பி அவனோட ஓடுன பொம்மளங்க தான் அதிகமாம் அதையும் நான் சொல்லுல உங்க இதிகாச குப்பைகள் சொல்லுது…

    அப்ப சீத்தா பிராட்டிய தூக்கும்போது அவன் தலவெடிக்கலயே
    அப்படின்னா………

    இன்னும் எத்தன தடவதான் இந்த கேள்விய கேக்குறதோ போங்கப்பா புளிச்சிப்போச்சி….

  3. இந்திரனது வேலை என்ன என்று தெரியுமா திருச்சிகாரரே, வாலிக்கும் இராமனுக்கும் என்ன பகையாம் எதற்காக கொன்றானாம்.

    நரகாசூரன் உயிர்பிரியும் தருவாயில், கெட்டவனான எனது மறைவை தீபாவளியாக கொண்டாடுங்கள் என்று உணர்ந்து கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தீபாவளி கொண்டாடுவதாக சொல்கிறார்கள். அந்த அளவிற்கு மன்னித்துவிடுங்கள் என்று சொன்ன பிறகும். அவனது மறைவை இப்படி எல்லாம் கொண்டாட வெட்கமாக இருக்கிறது.

    தமிழ் கூறும் நல்லுரையில், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்துவிடல் என்று தான் சொன்னதே தவிர கொண்டாட சொல்லவில்லை.

    அந்த தமிழின் வழியில் வாழ்பவர்கள் நாம், இந்தியாவில் அடி குத்து கொல் என்ற வாசகம் எல்லாம் இருப்பது சங்கதத்தில் தான். ஆக இது சங்கதத்து கதைகளில் அவர்களின் முறைபடி கொண்டாடும் ஒரு முறை. அதை ஏற்காமல் இருப்பது தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை. அந்த கதையில் தமிழர்களையும், தமிழர்களது பண்பாடையும் சிறுமை படுத்தும்விதமாக நரகாசூரனை வடிவமைத்துள்ளார்கள்.

    மதி சொல்வது அந்த பண்பாட்டு சிதைவை எதிர்க்க சொல்கிறார். அடுத்தாளின் பெண்டாளை ஆள சொல்லவில்லை. மீண்டும் நன்றாக படியுங்கள் புரியும்.

    பனிமலர்.

  4. சகோதரர் கவிமதி அவர்களே,

    //அடடே திருச்சிக்கார சாமி……..//

    நான் சாமியோ, பூதமோ அல்ல. நான் சாதாரணமாணவன்தான். என்னை திருச்சிக்காரரே என்று அழைத்தாலே போதுமானது.

    //இப்பச்சொல்லுங்கள் நம்மாளு புஜபலத்த பாத்து ஏங்கி ஏங்கி இந்த மாதிரி அங்க இல்லையேன்னும், வில்ல ஒடச்சாமட்டும் போதுமான்னு வெம்பி அவனோட ஓடுன பொம்மளங்க தான் அதிகமாம் அதையும் நான் சொல்லுல உங்க இதிகாச குப்பைகள் சொல்லுது…//

    சகோதரர் கவிமதி அவர்களே, I think some gentle man, with twisted imagination has concocted a wrong concept to you.

    இராவணன் பல பெண்களைக் கவர்ந்து வந்து, அவர்களை பல வகையிலும் துன்புறுத்தியும், அழுத்தம் குடுத்தும், அவர்களின் மன உறுதியைக் குலைத்து அவர்கள் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு செய்தான் என்றே நான் படித்த நூல்களில் உள்ளது. இப்படி பெண்கள் “புஜ பல பராக்கிரமத்திற்கு” ஆசைப் பட்டு சம்மதித்தாக எனக்குத் தெரிந்த வரையில் எந்த இராமாயணத்திலும் இல்லை.

    சீதா இராமனின் மேல் மரியாதையும், அன்பும் உடையவராக இருந்தததற்கு முக்கிய காரணம்,

    சீதாவின் குணம் அப்படி, சீதா கணவனுக்கு முழு அர்ப்பணிப்பு குணம் உடையவராக இருந்தார் என்பதே.

    இராமனுக்குத் தான் 14 வருடம் காட்டுக்கு செல்ல வேண்டிய கட்டளை விதிக்கப் பட்டது.
    சீதையும் கூட செல்ல கட்டளையும் இல்லை.

    சீதை வர வேண்டாம் என்றே இராமனும் கூறினான்.

    சீதை தானே முன் வந்து , வற்புறுத்தி, என்ன கஷ்டமானாலும் உங்களுடன் பங்க்கேடுப்பேன் என்று காட்டின் கடின வாழ்க்கையை பொருட் படுத்தாமல் கூட சென்று இருக்கிறாள்.

    அரண்மனையில் பல அறைகள், மாடங்கள் வேலையாட்கள், வசதிகள் இதை எல்லாம் விட்டு விட்டு, காட்டிலே குடிசையிலே, பாம்புகள், பூரான்கள், பல விஷப் பூச்சிகள், கொடிய மிருகங்கள் இத்தனையும் தன்னுடைய கணவனுக்காகத் தாங்கிக் கொண்டு துன்பத்தை அன்பவித்தவர்,

    கணவனுக்காக அத்தனை இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு, தன் கணவனுடன் சேர்ந்து அவன் துன்பத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அன்பும், அறனும் உடைத்த அந்தப் பெண்,

    மன் மத ராஜா போன்று உங்களால் சித்தரிக்கப் படும், பொம்பளைகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதை தொழிலாக வைத்திருந்த, குடி கேடி இராவணனின் புஜ பலத்திற்கு மயங்கி விட்டது போல எழுதுவது, காழ்ப்புணார்ச்சியினால் கூறப்படும் பழியாகவே இருக்கும்.

    அதோடு பெண்கள் என்றாலே கெட்டவர்ககள், தவறாணவர்கள் என்று கருதுவோரும் உண்டு.

    என்னுடைய கல்லுூரி தோழன் ஒருவன், “எல்லா பொம்பளைங்க்க்ளும் கெட்டவங்க தாண்டா என்பான்”. உன் அம்மா , உன் தங்கை எப்படி என்று கேட்டல், “டே, கென, அவங்க்கலைப் பத்தி ஏன் பேசுற, அவங்க நல்லங்க” என்பான்!

    Regarding Ravan kidanapping, it is said that Raavan lifted the ground where seethaa was standing.

  5. எந்த இனமாவது அல்லது ஒரு நாகரீகமுள்ள கலாச்சாரம் ஒருத்தவன் செத்ததை கொண்டாடுமா. இது தான் பண்பா? அனுசரிப்பு போன்றவை இருந்தாலும் சரி கொண்டாடுறான். என்ன நாகரீகம் என்ன பண்பு என்ன கலாச்சாராம் சும்மா பின்றேல் போங்கோ நா நம்ப புண்ணிய பூமியில். அரம்பியிங்கோ அவா தீயவா அதுனாலதான் என்று ஷங்கர் பாணி கதையை…..

  6. ஐயா திருச்சிக்காரரே,

    நீங்க எந்த புத்தகத்தைப் படிச்சீங்களோ தெரியாது. கஷ்டப்பட்டாவது வால்மீகி ராமாயணத்த ஒரு தடவ படிச்சிட்டு வாங்க. முடிஞ்சா சமஸ்கிருதத்துல அதோட மூலப் படைப்பையே படிச்சிட்டு வாங்க. அதில ராவணன் செஞ்சதா சொன்ன அத்தனை அயோக்கியத்தனத்தையும் ராமனும் செஞ்சிருக்கதா எழுதிருக்காங்களாம். நான் சொல்லல “நெல்லைக் கண்ணன்” அப்படீன்னு ஒரு பழுத்த பழம் சொல்லிருக்கு. அத மாத்தி ராமன ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு இங்க படம் காட்டினது நம்ம கம்பன், சடையப்ப வள்ளல் பிரவேட் லிமிடெட் கம்பெனி தானாம்.

    ஏனய்யா, உங்கள் தங்கையை மூக்கறுத்து மார்பகத்தை அறுத்து மானபங்கப்படுத்தினா பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா? பதிலுக்கு மூக்கையும் முலையையும் அறுக்காம தரையோட பேத்துத் தூக்கிட்டுப் போன கண்னியத்தைப் பாராட்ட வேணாமா?

    இந்தியாவுல ராமயனத்த எழுதுனவன் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமா கதை சொல்லிருக்கான். ஆனா அத்தனை பேரும் ராமனக் கதாநாயகனா ஆஹா ஓஹோன்னு தூக்கி நிறுத்துனதுல ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைச்சவன் இல்லைன்னு காட்டிட்டானுங்க. ஒரு வேளை ராமனத் தூக்கி நிறுத்துறதுக்காக ராவணன் மேல ஏன் சேத்த வாறிப் பூசிருக்கக் கூடாது. அதுக்கும் சாத்தியம் இருக்குல்ல?

    அடுத்தவன் மனைவிய ஆசைப்படுறது அயோக்கியத்தனம்னு சொல்றீங்கள்ள. அப்படியே ராமாயணத்திலேந்து மகாபாரதத்துக்கு வாங்க. சக்தி வாய்ந்த ஒரு மாமரத்தில இருந்த மாங்கனிய அர்ஜுனன் அம்பால அடிச்சி கீழ விழ வைச்சானம். மறுபடி அந்த கனி மரத்தோட ஒட்டலைன்னா அத்தனை பேரும் சாபத்துக்கு ஆளாவாங்கன்னு ஒரு குரல் வானத்துல கேட்டுச்சாம். சரி என்ன பண்ணா பழம் மறுபடியும் மரத்துல ஒட்டும்னு கேட்டாங்களாம். வெளிய சொல்லத் தயங்குற ஒரு உண்மையை மரத்து முன்னாடி எல்லாரும் ஒன்னா நின்னு ஆளுக்கு ஒன்னா சொல்லனும்னு பதில் வந்துச்சாம். மத்தவங்க ஆளுக்கு ஒரு உண்மைய சொன்னாங்களாம். திரௌபதி சொல்லும்போது, இந்த அஞ்சு பேர மட்டும் நான் கணவனா நெனைக்கல, கர்னனைப் பாக்கும் போது இவரும் எனக்கு கனவரா இருந்திருக்கனுமேன்னு தான் தோணும்னு சொன்னாளாம். அந்த திரௌபதிக்கு திரௌபதி அம்மன்னு பேரு, நாடெல்லாம் கோயிலு. இன்னொருத்தி புருஷன் மேல ஆசப்பட்ட பொம்பளைக்குக் கோயில் கட்டுவீங்களாம், அதையே ஒரு ஆம்பள செஞ்சா அவன ஏன் பாராட்டுறேன்னு கேப்பீங்களாம்! சிரிப்புத்தான் வருது.

    அண்ணல் அம்பேத்கர் ராமனைக் காமெடிப் பீசாக்கி கதற கதற அடிச்சி ஓடவிட்டுட்டார். ராவணனக் கண்டிக்கிறத நிறுத்திட்டு முடிஞ்சா ராமனை அண்ணல் அம்பேத்கரிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். எங்களுக்காவது பொழுது போகும்.

  7. இராமாயணமும், மகாபாரதமும் உண்மையாக நடந்தவைகளா? இந்த கதைகளை குழந்தைகளுக்கு சொன்னால், ஏம்பா எப்படிப்பா புஷ்பக விமானம் பறந்துச்சு, அப்போ அந்த காலத்திலே பெட்ரோல் இருந்துச்சா.. 1903ல ரைட் பிரதர்ஸ்தான் முதல்ல விமானத்த கண்டுபிடிச்சாங்கன்னு கூகிள்ள போட்டிருக்க அது பொய்யான்னு சகட்டுமேனிக்கு கேட்குறாங்க. எத வச்சு இந்த கதையெல்லாம் உண்மைன்னு சொல்றாங்க…
    இந்த கதைங்கள வைச்சு விவாதிக்கறதே தப்பா? இல்ல…. கதைகளில்கூட இவன்க கெட்டவன்களேல்லாத்தையும் நாலாம் வர்ண காரங்களா படம் காட்டிருக்கிறாங்களே அதற்காக விவாதித்துதான் ஆக வேண்டும். கதைகளில் இந்த so called மேல் சாதிக்காரன்ங்க வில்லனா சித்தரிக்கப்படவில்லையே. அது ஏன்

    பிறன்மனை கவர்ந்தான் இராவணன் அதற்காக இராமன் அவனை கொன்றான் அது சரி.

    கோபியர்கள் குளிக்கும்போது அங்கு வந்த நம்ம பகவான் அவர்கள் கரையில் கழற்றிவைத்திருந்த ஆடைகளை எடுத்து செல்லும்போது.. கோபியர்கள் தங்களுடைய மார்பகங்களை இரு கைகளாளும் மூடிக்கொண்டு கிருஷ்னா எங்க ஆடைகளை கொடுத்துவிடுன்னு கதற,, நம்ம பகவான் என்ன அழகா சொல்றார் பாருங்கோ… ஏ பெண்களே உங்கள் இரு கைகளையும் உயர்த்தி என்னை கும்பிட்டபடியே நீரிலிருந்து வெளியே வந்தா உங்க துணியெல்லாத்தையும் கொடுத்துடறேன்னார். பகவான் என்னம்மா விளையாடறார்.. இந்த களவானித்தனத்த செஞ்சவன கடவுளா கும்பிடனுமா??

  8. கலந்துரையாடலில் பங்கு பெரும் சகோதரர்கள் கவி மதி, பனி மலர், விஜய கோபால சாமி, பென், நித்தில் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து கருத்தக்களை பரிமாற்றம் செய்து கொள்வோம்.

  9. இன்னும் எத்தனை நாள் தான் இதே கதைக்காக விவாதம் நடக்குமோ என்றே தோன்றுகிறது …..

  10. சகோதரர் பனி மலர் அவர்களே,

    //இந்திரனது வேலை என்ன என்று தெரியுமா திருச்சிகாரரே, வாலிக்கும் இராமனுக்கும் என்ன பகையாம் எதற்காக கொன்றானாம்//

    இந்திரனும் பிறரை வஞ்சித்து அவர் மனைவியை கவர்ந்து குடி கெடுக்கும் வேலையை செய்தவன் என்றே சொல்லப் பட்டு உள்ளது. எனவே இந்திரனையும் நான் எதிர்க்கிறேன். சந்திரனையும் நான் எதிர்க்கிறேன்.

    பிறன் மனைவியை விழைபவன், பலவந்தப் படுத்துபவன் கடவுள் ஆனாலும் அவனை எதிர்க்கிறேன்.

    பிறன் மனைவியை விழைபவன் இராமனாக இருந்தால், இராமனையும் எதிர்க்கிறேன்.

    வாலியைக் கொன்றது தவறா என்பது பற்றி விவாதிக்கலாம், எனக்கு அட்டியில்லை.

    ஆனால் இங்கெ கட்டுரையில், இராவணன் ஒரு அப்பாவி போலவும் , அவன் கொல்லப்பட்டது அநீதி போலவும், அதற்குப் பழி தீர்க்க வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளதாகையால், அது பற்றி முக்கியமாக விவாதிக்கிறோம்.

    இராவணனின் கொள்கையை , செயலை தமிழ் சமுதாயம் ஒத்துக் கொள்கிறதா?
    பணம் படைத்தவர்கள், அதிகாரம் உள்ளவர்கள், வலிமை உடையவர்கள் தாங்கள் விரும்பிய பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்வதை தமிழ் சமுதாயம் ஒத்துக் கொள்கிறதா?

    அப்படி தூக்கிச் சென்றவனிடம் இருந்து அந்தப் பெண்ணை மீட்க நடத்தப் பட்ட போரில் அந்த குடி கேடி காமுகன் இராவணன் இறந்தால், அவன் கொல்லப் பட்டது அநீதி போலவும், அதற்குப் பழி வாங்க வேண்டும் என்று பதிவிட்டால் அது தமிழ் பண்பாட்டை சிதைப்பது ஆகாதா?

    //தமிழ் கூறும் நல்லுரையில், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்துவிடல் என்று தான் சொன்னதே தவிர கொண்டாட சொல்லவில்லை//

    இன்னா செய்தாரை நாண நன்னயம் செய்வது என்றால் வாய்க்கால் தகராறு, வரப்பு தகராறு என்றால் விட்டுக் கொடுக்கலாம். நம்முடன் பனி புரிபவர் நம்முடன் மோதல் போக்கை கடைப் படித்த போதிலும், அவருக்கு ஏதாவது பிரச்சினை என்று வந்தால் நாம் அவருக்கு உதவி செய்யலாம்.
    ஆனால் ஒருவனின் மனைவியை தூக்கி சென்றால் அந்த நிலையில் அவனுக்கு என்ன நன்னயம் செய்ய முடியும்?
    நீங்களே கூறுங்கள்.

  11. //கலந்துரையாடலில் பங்கு பெரும் சகோதரர்கள் கவி மதி, பனி மலர், விஜய கோபால சாமி, பென், நித்தில் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து கருத்தக்களை பரிமாற்றம் செய்து கொள்வோம்.//

    அட என்னப்பா இது திருச்சிக்காரர் தீடீரென்று அந்தர் பெல்டி அடிக்கிறார் நம்ம ஆளுங்கெல்லாம் உசாரா இருங்கப்பா…. இருந்தலும் நம்ம பண்பாடு கருதி நன்றியை ஏற்றுக்கொள்வோம்.

    //இப்படி பெண்கள் “புஜ பல பராக்கிரமத்திற்கு” ஆசைப் பட்டு சம்மதித்தாக எனக்குத் தெரிந்த வரையில் எந்த இராமாயணத்திலும் இல்லை.//

    அப்ப நிறைய கட்டுக்கதை இராமாயணங்கள் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

    சகோதரரே உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லுகிறேன் மத்தவெங்கல்லாம் காதபொத்துங்கப்பா…

    பரதன் ஆயிரம் பெண்களுடன் குஜால்ல இருக்கும்போது பரதனின் மனைவி மாறுவேடம் போட்டு விபச்சாரிகளுடன் தங்கியதாக வரலாறு அப்படியும் அவளுக்கு அடங்காமல் பரதனிடம் கேட்கவே நம்மாள முடியாதுப்பான்னுட்டு குதிரையை ஏற்பாடு செய்திருக்கிறார் அதுதான் அசுவமேத யாகம்……

    பாவம் நீங்கள் வாசிப்பது எந்த இதிகாச புத்தகங்களோ தெரியவில்லை எல்லாத்தையும் எடிட் பண்ணிட்டு உங்க கையில குடுத்திருக்கிறார்கள் அத நம்பாதீங்க………..

  12. நண்பர் கவிமதி அவர்களே,

    நான் நன்றி தெரிவித்தது என்னுடைய கருத்துக்களை படித்து, அதன் மீதான கருத்துக்களை தெரிவித்ததற்கு. இதில் வியப்பான விடயம் என்ன என்று தெரியவில்லை.

    நீங்கள் பல புதிய கதைகளை இங்கெ வெளியிட்டு வருகிறீர்கள்.

    நான் மதிமாறனின் தளத்திலே நகைச் சுவை பகுதி இல்லாத குறை நீக்க சில கட்டுரைகளை வெளியிடுவது போல உள்ளதாக, தெரிவித்து இருந்தேன்.

    ஆனால் நீங்கள் சகோதரர் மதிமாறனின் தளத்திற்கு இன்னும் சில புதிய பகுதிகளை இணைப்பது போன்ற வகையிலே பதிவுகளை இடுகிறீர்கள். கிட்டத் தட்ட உங்களின் பதிவுகள் அனுபவக் கதைகள் ரேஞ்சுக்கு வந்து விட்டன.

    நான் இராமாயணக் காலத்திலேயே வாழ்ந்ததாக எனக்கு நினைவு இல்லை. நான் டைம் மிசினில் அமர்ந்து பின்னோக்கி சென்று வரலாற்றில் என்ன நடந்தது என்று பார்க்கவும் இல்லை.

    எனவே தான் நான் என் முதல் பதிவிலேயே

    //இராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியா அல்லது வெறும் கதையா என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

    இராமாயணம் ஒரு நிஜமான நிகழ்வாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் அது வெறும் கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன//

    என்று கூறி இருந்தேன்.

    நான் ஆராய்வது இப்படி சம்பவங்கள் நடை பெற்று இருந்தால் அதிலிருந்து, நாம் கற்றுக் கொண்டது என்ன,
    நம் மக்கள் எவ்வ்வகையான கொள்கைகளை ஆதரிப்பார்கள்,எவ்வகையான கொள்கைகளை எதிர்ப்பார்கள் என்பது பற்றிதான்.

    ஆனால் நீங்களோ, பரதனின் குதிரை பிரிவை நிர்வாகித்து வந்த மேலாளராகப் பணி புரிந்தவர் போல, அந்த அளவுக்கு அடித்து சொல்வது போல, அதிரடியாக கதைகளை கூறி வருகுறீர்கள்.

    உங்களுக்கு பதில் சொல்ல என்னால் இயலுமா என்பது சந்தேகமே. அந்தக் காலத்திலேயே வாழ்ந்த வாச்த்யாயனர் போன்றவர்கள தான் உங்களுக்கு ஈடு கொடுத்து நிற்க முடியும்.

    உங்களின் முன்னால், நீங்கள் வாதிக்கும் பொருளிலே நான் அதிக புலமை இல்லாதவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் இந்த குதிரை லாயக் கதைகளில் போட்டி போடும் திறன் எனக்கு இல்லை.

    நீங்க இதே ரேஞ்சில எழுதினால் மதிமாறனின் தளத்திற்கு இப்போது இருப்பதை விட இன்னும் பல மடங்கு அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்றே நினைக்கிறேன்.

    பகுத்தறிவிலே பல பாணிகள் உண்டு என்று சொல்வார்கள்.

    நீங்க கலக்குங்க பிரதர்.

  13. சகோதரர் விஜய கோபால சாமி அவர்களே,

    //ஐயா திருச்சிக்காரரே,

    நீங்க எந்த புத்தகத்தைப் படிச்சீங்களோ தெரியாது. கஷ்டப்பட்டாவது வால்மீகி ராமாயணத்த ஒரு தடவ படிச்சிட்டு வாங்க. முடிஞ்சா சமஸ்கிருதத்துல அதோட மூலப் படைப்பையே படிச்சிட்டு வாங்க. அதில ராவணன் செஞ்சதா சொன்ன அத்தனை அயோக்கியத்தனத்தையும் ராமனும் செஞ்சிருக்கதா எழுதிருக்காங்களாம். நான் சொல்லல “நெல்லைக் கண்ணன்” அப்படீன்னு ஒரு பழுத்த பழம் சொல்லிருக்கு. அத மாத்தி ராமன ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு இங்க படம் காட்டினது நம்ம கம்பன், சடையப்ப வள்ளல் பிரவேட் லிமிடெட் கம்பெனி தானாம்.//

    முந்தைய பதிவிலே நான் பதிவிட்டதை மீண்டும் குறிப்பிடுகிறேன்.

    பிறன் மனைவியை விழைபவன், பலவந்தப் படுத்துபவன் கடவுள் ஆனாலும் அவனை எதிர்க்கிறேன்.

    பிறன் மனைவியை விழைபவன் இராமனாக இருந்தால், இராமனையும் எதிர்க்கிறேன்.

    ஆனால் நீங்கள் குறிப்பிட்ட திருவாளர் நெல்லைக் கண்ணன் எந்த அடிப்படையில்- ராவணன் செஞ்சதா சொன்ன அத்தனை அயோக்கியத்தனத்தையும் ராமனும் செஞ்சிருக்கதா -என்று எழுதினார் என்று தெரியாது.

    அவர் குறிப்பிடுவது போல இராமன் வாழ்க்கையை ஜாலியாக , பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்தவனாக இருந்திருந்தால், அவன் எதற்கு இராச்சியத்தை விட்டு காட்டுக்கு செல்ல சம்மதிக்க வேண்டும்.

    இராமன் மக்களின் மனம் விரும்பும், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவனாக இருந்திருக்கிறான்.

    தசரதனே , இராமனை ஆட்சியைக் கைப்பற்றி ஆளுமாறு தூண்டியிருக்கிறான்.

    அரசாங்க இயந்திரத்தை இயக்குபவர்களோ, இராமனின் மேல் அபிமானம் உடையவர்களாக இருந்திருக்கின்றனர்.

    பரதனோ அந்த நேரம் நாட்டில் இல்லை.

    இலக்குவனோ, தானே முன் நின்று போர் செய்து இராமனை அரசன் ஆக்குவதாக சூளுரைக்கிறான்.

    இப்படியான சூழ்நிலையில் இராமன் தசரதனையும், கைகேயியையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அரசனாகி இருக்க வேண்டுமே- ஆட்சியை கையில் வைத்து இருந்தால் தானே, அதிகாரம், அரண்மனை, பணியாட்கள், அந்தப்புரம், அழகிகள் ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என்று இருந்திருக்க முடியும்?

    ஆனால் இராமனோ காட்டின் கடின வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதாக கூறி விட்டானே? உல்லாச வாழ்க்கையை வாழ்ந்திருந்தால், அந்த வாழ்க்கையை உதறி விட்டு காட்டு வாழ்க்கைக்கு யாரவது ஒத்துக் கொள்வார்களா?

    எனவே நீங்கள் குறிப்பிடும் திருவாளர் நெல்லைக் கண்ணன் அவர்கள் க‌ற்ப‌னைத் திற‌ன் அதிக‌ம் உடைய‌வ‌ராக‌, ப‌ல‌ விறுவிறுப்பான‌ கிளுகிளுப்பான‌ புனைவுக‌ளை விரைவில் எழுதும் ஆற்ற‌ல் பெற்ற‌வ‌ராக‌ இருக்க‌க் கூடும் என்றெ நான் க‌ருதுகிறேன்.

    இங்கே கூட‌ ந‌ம‌து ச‌கோத‌ர‌ர், அருமை ந‌ண்ப‌ர் க‌வி ம‌தி அவ‌ர்க‌ள் எப்ப‌டி அதிர‌டியாக‌ க‌ல‌க்குகிறார் என்று பார்க்கிரோம் அல்ல‌வா?

  14. ஐயா திருச்சிக்காரரே… இந்த பதிவர் நன்பர் மதிமாறனுக்கோ அல்லது பின்னூட்டமிட்ட ஏனைய நன்பர்களுக்கோ (என்னையும் சேர்த்து) இவைகள் வெறும் கட்டுகதைகள்தாம் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் கிடையாது. அவர்களால் அறுதியிட்டு கூறவும் முடியும். அந்தக் கட்டுக்கதைகளில் ஏன் கொடியவர்கள் அனைவரும் நாலாம் வர்ணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஏன் ஒரு பார்ப்பனரைக்கூட கொடியவனாக காட்டப்படவில்லை.
    பழிதீர்க்க வேண்டும் என்று எழுதியது இதற்காகவே தவிர பிறன்மனையாளை கவர்ந்தவனுக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல. இது எனது புரிதல்.

  15. சகோதரர் நித்தில் அவர்களே,

    //அந்தக் கட்டுக்கதைகளில் ஏன் கொடியவர்கள் அனைவரும் நாலாம் வர்ணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஏன் ஒரு பார்ப்பனரைக்கூட கொடியவனாக காட்டப்படவில்லை.இது எனது புரிதல்.//

    நீங்கள் தயவு செய்து இராமாயணம் , மகாபாரதம் இவற்றை முதலில் முழுமையாகப் படித்து புரிதல் செய்யுங்கள்.

    ஏனெனில் இந்தப் புராணங்களில் எதிலும் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் கொடியவர்களாக காட்டப் படவில்லை.

    Ravana was born to his father Brahmin sage known as Vishrava and his wife, the daitya princess Kaikesi. He was born in the Devagana gotra, as his grandfather, sage Pulastya, was one of the ten Prajapatis or mind-born sons of Brahma and one of the Saptarishis (Seven Great Sages Rishi) in the first Manvantara. Kaikesi’s father, Sumali (or Sumalaya), king of the Daityas, wished her to marry the most powerful being in the mortal world, so as to produce an exceptional heir. He rejected the kings of the world, as they were less powerful than him. Kaikesi searched among the sages, and finally chose Vishrava, the father of Kubera. Ravana was thus partly Daitya and partly Brahmin.

    இராவணன் ஒரு பார்ப்பனன். ராவணனின் தந்தை பார்ப்பன வம்சத்தை சேர்ந்த முனிவனான விஸ்ரவா எனப்படுபவன். இராவணின் தாயார் அரக்கர் குலத்தை சேர்ந்த கைகசீ என்பவள்.

    இராவணனின் தந்தை பார்ப்பனர் என்பதால், இராவணனும் பார்ப்பனனே ஆவான். நான்கு வேதங்களையும் கற்றும், வேதங்களை ஓதியும், பல தவங்களை செய்தும் வாழ்ந்த்தவன் இராவணன். இராவணனின் மகனான இந்திரஜித்தும் பல யாகங்கங்களை செய்து வந்தவன்.

    எனவே இராமாயணத்தில் எந்த இடத்திலும் தலித்துகள் கொடியவர்க்ள என்று கூறப் பட்டுள்ளதாக நமக்கு தெரிந்த அளவில் இல்லை.

    படகோட்டிகளின் தலைவனான குகனை இராமன் தன் சகோதரனாக உறவு பாராட்டியதாக உள்ளது. இராமயணத்தில் இராமருக்கு உதவியவர்கள் என்ற வகையிலே குகன் மிகவும் போற்றப் படுகிறார்.

    இதில் அரக்கர் என்பவர்கள் தலித்துகள் என்று தவறாக திரிக்கப் பட்டு வருகிறது. அரக்கர்கள் எல்லோரையும் அதட்டியும், மிரட்டித் துன்புறுத்தி அநீதி செய்து வாழ்ந்தவர்கள், பேட்டை ரவுடிகளை போல.

    ஆனால் தலித்துகளோ உழைத்து வாழ்ந்து வந்தவர்கள், அமைதியாக வாழ்ந்து வந்தவர்கள். தலித்துகள் என்பவர் வேறு, அரக்கர்கள் எனபது வேறு . அரக்கர்கள் மனித குலமே அல்ல, அவர்கள மனிதரை விட அதிகமான வலிமை உடையவர்களாக கூறப் பட்டுள்ளது.

    கிருட்டிணனின் கதையிலே கிருடினனால கொல்லப் பட்டவன், கிருடிணனின் சொந்த தாய் மாமனான கம்சனே. அவன் அரச வம்சத்தை சார்ந்தவன்.

    அதே போல திரவுபதியின் துகிலை உரிந்ததாக கூறப்படுபவர், பாண்டவர்களின் பங்காளிகளான , சொந்த பெரியப்பா மகன்களான துரியோதனனும் துச்சாதனனுமே.

    எனவே எந்த இடத்திலே தாழ்த்தப் பட்டவர்கள் கொடியவர்களாக சித்தரிக்கப் பட்டு உள்ளது? எனவே நீங்கள் எந்த அடிப்படையில் இதைக் கூறினீர்கள்?

    மேலும் புராணங்களோ, வரலாறோ அவை ஆட்சியில், அதிகாரத்திலே, உள்ளவர்களின் செயல்களைப் பதிவு செய்து வைப்பதாகவே உள்ளன.

    எனவே அரசர்கள், அரக்கர்கள் , தேவர்கள் என்று கூறப்படுபவர்கள் எல்லாம் ஆட்சி செய்பவர்களாக , வலிமை உடையவர்களாக , பல போர்களில் ஈடு பட்டதால் அவர்களைப் பற்றியே புராணங்கள் கூறுகின்றன.

    தலித்துகள் உட்பட பிற பிரிவினர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த பொது மக்களே யாதலால் அவர்களைப் பற்றிக் கொடுமையானவர்கள் என்று குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் கொடுமையானவர்கள் என்று குறிப்பிடப் படவும் இல்லை.

    பார்ப்பனர்களும் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்ததால், அவர்களிடமும் எந்த ஆட்சியும் இல்லாததால், பார்ப்பன வகுப்பை சேர்ந்த யாரும் இராமாயணத்தில் முக்கிய மான ஒருவராக குறிப்பிடப் படவில்லை- இராவணனைத் தவிர!

    நான் இங்கெ எழுத வந்தது புராணங்களுக்கு வக்காலத்து வாங்கி எழுத அல்ல. பிறன் மனை நோக்குபவர் குறித்து விளக்க வந்தது , இப்போது உங்களின் கேள்விக்கு விளக்கம் அளிக்கவே இவ்வளவும் எழுதினேன்.

  16. சகோதரர் விஜய கோபால சாமி அவர்களே,

    //ஏனய்யா, உங்கள் தங்கையை மூக்கறுத்து மார்பகத்தை அறுத்து மானபங்கப்படுத்தினா பாத்துக்கிட்டு சும்மா இருப்பீங்களா? பதிலுக்கு மூக்கையும் முலையையும் அறுக்காம தரையோட பேத்துத் தூக்கிட்டுப் போன கண்னியத்தைப் பாராட்ட வேணாமா?
    //

    நல்லது, நம்மைப் பொருத்த அளவிலே மனைவியைத் தவிர மற்ற எல்லாப் பெண்களுமே சகோதரியாகவோ, அன்னையாகவோ, கருதப் பட வேண்டியவர்கள் தான்.

    அந்த வகையிலே சூர்ப்பனகையாரும் நமது உடன் பிறவா சகோதரிதான்.

    சூர்ப்ப்னகையார் காடுகளில் அங்கேயும் இங்கேயும் திரிந்து வந்த போதினிலே இராமனைக் கண்டு மனதைப் பறி கொடுத்தது தவறு அல்ல. இராமனிடம் காதல் விண்ணப்பமும் அளித்தார். அதுவும் தவறு அல்ல.

    ஆனால் யாருடைய காதல் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளும் நிலையிலே இராமன் இல்லை. அதையும் அவன் அப்போதே சூர்ப்பனகையாரிடம் தெளிவாக விளக்கி விட்டான். தான் கொள்கைகளை முக்கியமாக கருதி வாழ்பவன் என்றும், அதனாலேயே இராச்சியத்தை விட்டு காட்டிலே வசிக்கவும் செய்பவன் என்றும், அந்த அளவுக்கு கொள்கையிலே உறுதியாக இருக்கும் போது, ஒரே மனைவி என்கிற கொள்கையிலும் பிடிப்புடன் உறுதியாக இருப்பதாக கூறி விட்டான்.

    ஆனால் இந்த கொள்கை விளக்கத்தை எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையிலே உடன் பிறவா சகோதரி சூர்ப்ப்னகையார் இல்லை விரும்பியது கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் விதியை நொந்து விட்டு இடத்தை விட்டு சென்று இருக்கலாம்.

    ஆனால் அவர் இராமனையோ, இலக்குவனையோ , சீதையையோ புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. சீதை அழகியாக இருப்பதால், இராமன் தன்னிடம் கவனம் செலுத்தவில்லை என்று நினைத்து விட்டார்.

    சீதை உயிருடனே இருந்தால் தானே இராமன் சீதையை நினைப்பான், சீதையை விண்ணுக்கு அனுப்பி விட்டால், இராமனுடன் தான் கொண்ட காதல் நிறைவேறும் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டார். சீதையைக் கொல்லப் பாய்ந்து இருக்கிறார்.

    நல்ல தனமாகக் கூறியும் கேட்கவில்லை. அதோடு சீதையைக் கொல்லவும் பாய்கிறார். எனவே அவரின் புயல் வேகப் பாய்ச்சலைக் கட்டுப் படுத்தவே, அவரின் மூக்கையும், காது மடல்களையும் அறுத்து, அவரின் வேகத்தை கட்டுப் படுத்த வேண்டிய நிலைக்கு இலக்குவன் தள்ளப் பட்டார்.

    நீங்கள் என்னவோ சூர்ப்பனகையார் ஒரு பாவமும் அறியாத சிறுமி போலவும், யூனி பாரம் அணிந்து பள்ளிக்கு சென்றது போலவும், இராமனும், இலக்குவனும் அவரை ஈவ் டீசிங் செய்து அவரின் மூக்கையும் காதையும் அறுத்து விட்டது போலவும், சித்தரிப்பது நியாயமா?

  17. //திரௌபதி சொல்லும்போது, இந்த அஞ்சு பேர மட்டும் நான் கணவனா நெனைக்கல, கர்னனைப் பாக்கும் போது இவரும் எனக்கு கனவரா இருந்திருக்கனுமேன்னு தான் தோணும்னு சொன்னாளாம். அந்த திரௌபதிக்கு திரௌபதி அம்மன்னு பேரு, நாடெல்லாம் கோயிலு. இன்னொருத்தி புருஷன் மேல ஆசப்பட்ட பொம்பளைக்குக் கோயில் கட்டுவீங்களாம், அதையே ஒரு ஆம்பள செஞ்சா அவன ஏன் பாராட்டுறேன்னு கேப்பீங்களாம்! //

    திரவுபதி யார் மேல் ஆசைப் பட்டாலோ , இல்லையோ எனக்கு தெரியாது. நான் திரவுபதி கோவிலைக் கட்டவும் இல்லை, நடத்தவும் இல்லை. ஆனால் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா, தீ மிதி என்று பெரிய பேச்சாக இருக்கும், நான் சிறுவனாக இருக்கும் போது வேடிக்கை பார்க்க போய் இருக்கிறேன்.

    திரவுபதி கர்ணன் மேல் ஆசைப் பட்டாளா , மனதுக்குள் ஆசைப் பட்டாளா , மாங்காயிடம் சொன்னாளா, மா மரத்திடம் சொன்னாளா என்பது எனக்குத் தெரியாது. அவள் ஒருவேளை ஆசைப் பட்டும் இருக்கலாம்.

    ஆனால் திரவுபதி கர்ணனை கடத்திச் செல்லவில்லை.

    கர்ணன் தன்னுடன் வாழ வேண்டும் என்று திரவுபதி அவனுக்கு எந்த வகையிள்ளன நெருக்குதல் கொடுக்கவோ, பலவந்தம் செய்யவோ இல்லை.

    இப்படி சம்பந்தம் இல்லாத தரவுகளை எடுத்துக் காட்டி, அயோக்கியனும் , குடி கேடியுமாகிய இராவணனை ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை!

    நான் இராவணனை எதிர்ப்பது சமூக நன்மைக்காக!

    நான் இராவணனை எதிர்ப்பது கொள்கையின் அடிப் படையில் தான்.

    சீதையை இராவணன் கவர்ந்து சென்ற போது, தோள் வலிமையும் , வில் வலிமையும் உடைய இராமன் பல வானரங்களின் துணையோடு மிகவும் சிரமப் பட்டு மீட்டான்.

    இன்றைக்கு நமது தாய் திரு நாட்டிலே யார் ஆட்ச்யில் இருந்தாலும் கர்ப்பழிப்பு, கொலை சர்வ சாதரண நிகழ்வாகி விட்டது.

    ஒரு சாதரண மனிதனின் மனைவியைக் கடத்திப் போனால் அவனால் மீட்க முடியுமா? அவனின் மனைவியைக் கொன்று, அந்த கொலைக் கேசையும் கணவன் மேலே போட்டாலும் ஒன்றும் செய்ய இயலாது.

    பண பலமும் அதிகார பலமும் உடைய குட்டி ராவணன்கள் நாட்டிலே இங்கேயும் அங்கேயும் உலாவி வருகின்றனர்.

    நம்முடைய சமூக்கத்தைப் பற்றியாவது நினையுங்கள். கடவுளாக யாரையும் நினைக்க வேண்டியதில்லை. கடவுள் என்று யாரையும் நானும் இது வரை பார்த்தது இல்லை.

    கடவுளை மறப்பது தவறல்ல. ஆனால் மனிதனை மறந்து விடாதீர்கள். கடவுளை மற. மனிதனை நினை.

  18. ஏகலைவன் கட்டைவிரலை தட்சணையாக கேட்ட துரோணாச்சாரியரின் கழுத்தை வெட்டி இருக்க வேண்டும் ஏகலைவன். அவன் அப்பாவியாக இருந்தான். ஏமாற்றி விட்டார்கள் பார்ப்பனர்கள்.

  19. //சுந்தரம் (04:06:27) :

    ஏகலைவன் கட்டைவிரலை தட்சணையாக கேட்ட துரோணாச்சாரியரின் கழுத்தை வெட்டி இருக்க வேண்டும் ஏகலைவன். அவன் அப்பாவியாக இருந்தான். ஏமாற்றி விட்டார்கள் பார்ப்பனர்கள்.//

    ஏகலைவன் விடயத்தில் துரோணர் செய்தது அநீதி, அசிங்கம்.

    ஏகலைவன் தூரத்தில் இருந்து பார்த்தே அர்ச்சுனனை விட சிறந்த வில் வீரன் ஆகி விட்டான்.

    எப்போது அர்ச்சுனன் ஏகலைவன் இவ்வளவு கற்று விட்டானே என்று அழுதானோ,

    அப்போதே ஏகலைவன் முதலாம் வில் வீரன் என்பதும், அர்ச்சுனன இரண்டாம் நிலை வில் வீரன் எனபதும் தெளிவாகி விட்டது.

    துரோணர் அர்ச்சுனன் மேல் அவ்வளவு பிரியம் வைத்து இருந்தால், ஏகலைவனிடம், “அர்ச்சுனனுக்கு எதிராக என்றும் போர் புரிய மாட்டேன்” என்றும், “எப்போதும் அர்ச்சுனன் இருக்கும் படை பிரிவிலேயே, பாண்டவர் சார்பாகவே போர் புரிவேன்” என்றும் உறுதி மொழி வாங்கி இருக்கலாம்.

    அர்ச்சுனனைப் போல கர்ணன் தரையில் தேரை தள்ளும் போது அம்பு விடாமல், நேராகவே போர் புரிந்து கர்ணனை வென்று குடுத்திருப்பன் ஏகலைவன்.

    கற்க ஆர்வமும், முனைப்பும், அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் உடையவர்கள் யாரக இருந்தாலும் அவர்களுக்கு கற்க வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிறேன்.

  20. yennai patri ,

    நான் சாதியத்தை உண்மையில் வெறுப்பவன். என்னை விட பார்ப்பன் மேல் சாதி என்பதற்க்காக அவன் பூணூலை இழுத்து விளையாடுவதையே வேலையாக கொண்டவன் இல்லை. என் குடும்பன் , என் வேலை , நான் இருக்கும் சமூகத்தின் மேல் அக்கறை உள்ளவன்.

    karuththu,

    “பார்ப்பான்” அடிமை படுத்தினான். — சரி … ஒத்துக்கலாம் . இவர்கள் வன்முறை செய்ததா வரலாறோ புவியலோ இல்லை.

    “அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் வந்ததாக கூறி கொள்பவர்கள் —- தான் அடிமையா இருந்தோம் …. தான் அடிமையா இருந்தோம் ….. ன்னு இப்ப இருக்குற நல்ல சமுதாயத்தைச் சீரழிக்கும் வகையில் அடியாள் தனம் பண்றது, கீழ் தரமான செயல்களில் செயல்படுவது, நமக்கு பயந்து மற்றவர்கள் அடங்கி நடக்க ரவுடீசம் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். சுருக்கமா சொல்லணும்னா “அடியாள்” “கட்ட பஞ்சாயத்து ” வேல. நான் சொல்லுவது வேலையில்லாத ( படிக்காத ன்னு சொல்ல மாட்டேன் எவ்ளோ கோட்டா குடுத்தாலும் BA MA வையே இன்னமும் படிக்கும் நபர்கள் நிறைய ) அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் வந்தத சொல்லி கொள்ளுபவர்கள்.

    காமன் மேனுக்கு யார் மேல் வெறுப்பு வரும் ? உண்மையான ” அடியாள் ” யார் ? அப்ப ராமன் அடியாள் னா , இப்ப “அடியாள் ” அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் வந்ததாக கூறி கொள்பவர்களா ?

    அம்பேத்கர், தந்தை பெரியார் உசுரோடு இருந்தா … அடுத்த நிமிடமே சூசைட் பண்ணி கொள்வார்கள்.

  21. காலம் பூராவும் பழி தீர்க்க துடித்தே தமிழன் அழிந்து போனான்.
    இனியாவது நாம் வாழவும் , அடுத்தவரை வாழ வைக்கவும் முயல்வோம். அது தமிழர் மட்டுமல்ல , தமிழும் வாழ வழி செய்யும்.

  22. இந்த கட்டுகதைகளெல்லாத்தையும் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லக் கேட்டும் பின்நாளில் படித்தும்தான் நானும் (எல்லோரையும் போல) வளர்ந்தேன். என்ன இப்ப உள்ள
    குழந்தைங்க மாதிரி அப்ப கேள்வி கேட்க தெரியல.

    இராவணனின் தந்தை ஒரு பிராமணன் ஆகவே இராவணனும் பிராமணன் என்பது திருச்சிகார ரின் வாதம். அவன் பிராமணனாக இருந்தபடியால் நான்கு வேதங்களையும் மற்றும் உபநிஷத்துக்களையும் கற்று தேர்ச்சி பெற்றான். அது மட்டுமல்ல அவனின் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபின் இலங்கை மிகவும் சுபிட்சமும் அடைந்த தாம். சிறந்த சிவ பக்தனான இராவணன் வீனை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவனாம். ஆனால் அவனது உடம்பில் ஓடுவது பிராமணன் அல்லாத அசுரகுல இரத்தமுமாயிற்றே. ஆகவே அவனுடைய மற்றொறு முகம் மிருகத்தனமாகவும் கீழ்தரமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. பல பெண்களை பலவந்தமாக மணமுடித்தான். வேதவதியை மானபங்க படுத்தினான். மாற்றான் மனைவியை கவர்ந்து வந்தான். தன்னுடைய சகோதரனின் மருமகளாகவிருந்த ரம்பையிடம் தகாத முறையில் நடந்து கொண்டான் இன்னும் பிற.

    இதே இராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனான குபேரன் (அதாங்க நம்ம ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவர்) பிரம்மாவின் அருளோடு உலகின் உள்ள சொத்துக்களுக்கு அதிபதியாகின்றான். புஷ்பக விமானத்தின் உரிமையாளரான இவனிடமிருந்துதான் இலங்கையை இராவணன் பலவந்தமாக பிடுங்கிகொண்டானாம். அவ்வளவு நல்லவராம் இந்த குபேரன் (100% பிராமணன்)

    நான் முந்தைய பின்னூட்டங்களிலே சொன்னதுபோல பிராமணர்கள யோக்கியசீலர்களாகவும் மற்ற வகுப்பினர அயோக்கியதனம் செஞ்சவர்களாகவும் சித்தரித்தது ஏன்.

    கம்சனும் சரி பாண்டவ, கௌரவர்களும் பிராமணர்கள் இல்லையென்பதும் ஷத்திரிய வர்ணத்த சேர்ந்தவங்கன்னும் தெரிந்த விஷயம்தான். இப்ப நாலு வர்ணங்க குறைந்து பிராமணன் அல்லது சூத்திரன் என்ற இரு பிரிவாகத்தானே நடைமுறையில் உள்ளது.

  23. ஆம் , பழி தீர்ப்போம். அம்பேத்கர் பெரியார் வழியில் சென்று கடைசியாக மதம் மாறுவோம் அல்ல கிழவனாக போனவுடன் சொத்தினைக் காப்பாற்ற சிறு பெண்ணாய் பார்த்து பழி தீர்ப்போம்.

  24. oilyalla poi pozhapa paruda ,summa pesikittu irruka , unnala yarayum onnum pudunga puidyathu

  25. Hello Mr. Tirichy
    As you believe Raman is a god, if it is really so then why he has காழ்ப்புணார்ச்சி on Dravidian. why Ravan has to be created in Dravidian race and describe as dracula, And Raman was born in Aryan Race describing godly nature of him. I do not know about you, but if you come in Dravidian race, are you ready to accept that you are ancestors are devils and demons. as you ask many people in your replies, I ask you including your sisters, mother etc.,

  26. My previous reply was very direct to you that Ramayanam was written with vengeance against non bramins in general and particularly against Dravidians. Ok for the later adjustment when you say Ravan was born for Bramin father. but what a wicked meaning because of mix he has got demon blood. come on sir all your crooked things will soon come to an end not by war only by education and awareness.

  27. நான் பிராமண வகுப்பை சேர்ந்த சகோதரகளை கேட்டுக் கொள்வது என்ன என்றால், நீங்கள் பொருப்போடும், கண்ணியமாகவும் எழுத வேண்டும்.

    வெறுமனே அலப்பறை செய்வதால் பலன் இல்லை.

    பெரியார் கூறியதில் பிராமணர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, திருத்திக் கொள்ள வேண்டியது, அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது.

    பெரியாரை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், உண்மையில் எல்லோரையும் விட பிராமணர்கள் தான் அதிக பலன் அடைய முடியும்.

    பெரியாரின் அறிவுரைகளில் பல பிராமணர்களையும், இந்து மதத்தையும் சாடுவது போல தோன்றினாலும், அவை உண்மையில் திருத்திக் கொள்ள கூறப் பட்டவையே. பெரியாரை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

    அவருடைய கருத்துகளில் எது உபயோகமானதோ அவற்றை எடுத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.

  28. As some people say Tamils destroy themselves. Please do not feel down as a Tamil. Comparing to many other community we are really most successful community in the world. even if you say about Sri lankan situation i would surely say they were very successful to let the world know about their plight. even now many ethnic like karen community in Burma and many other people I can say facing ethnic cleansing in their own country in all part of the world are still going unnoticed and unattended by the world community.

  29. இந்த கற்பனை கதைகள் எல்லாமே திராவிடர்களை இழிவாக சித்தரிக்க, பெண் மோகம் கொண்டவர்களாக காட்ட புனைய பதவிகள் என்பதில் மாற்றுகருத்து இல்லை. அதனால் கற்பனையாக ராமன் உருவாக்கபடாலும் அதை அழிக்க வேண்டியது எதிர்க்க வேண்டியது நமது இழிவை போக்க கடமையாகும்.அதைத்தான் மதிமாறன் இங்கு சொல்கிறார். இதில் திருசிகாரரின் கோபம் வெளிப்படையாக தெரிந்தது, பேரரசன் ராவணனை பாராடியதர்காக அல்ல ராமனை திட்டியதற்காக. அப்போ தமிழ் அரசன் ராவணன் மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி தமிழர்களை இழிபடுத்த உருவாக்கப்பட்ட இந்த பொய்கள் மீதும் அதற்கு தலைவனாக சித்தரிக்கப்பட்ட ராமன் மீதும் தமிழர்களுக்கு எவளவு கோபம் வரும்..?

  30. ஹிந்து மத பண்டிகைகளுக்கு எதிரான இது போன்ற பதிவுகளை சில நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன். எனக்கு பெரும் பயம் – எங்கே இதுபோன்ற பதிவுகளை படித்து மக்கள் எல்லோரும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை எல்லாம் கொண்டாடாமல் இருந்துவிடுவார்களோ என்று (ஹா….ஹா) . தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை கணபதி சில்க்ஸ், ஸ்ரீதேவி, சென்னை சில்க்ஸ், பட்டாசு கடைகள், பலகார கடைகள் எங்கும் எள் போட்டால் எண்ணை எடுக்கலாம் போன்ற கூட்டம். என்னத்த புரட்சி பண்ணி, என்னத்த மக்களை திருத்தி? மனதை தொட்டு சொல்லுங்கள் – இது போன்ற பதிவுகளை இடும் நண்பர்கள் (ஹிந்துகளாக இருக்கும் பட்சத்தில்) எந்த ஹிந்து மத பண்டிகையையும் கொண்டாடுவதில்லை?

  31. சகோதரர் matt அவர்கள் நான் எழுதியவற்றை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும்,

    //இந்திரனும் பிறரை வஞ்சித்து அவர் மனைவியை கவர்ந்து குடி கெடுக்கும் வேலையை செய்தவன் என்றே சொல்லப் பட்டு உள்ளது. எனவே இந்திரனையும் நான் எதிர்க்கிறேன். சந்திரனையும் நான் எதிர்க்கிறேன்.

    பிறன் மனைவியை விழைபவன், பலவந்தப் படுத்துபவன் கடவுள் ஆனாலும் அவனை எதிர்க்கிறேன்.

    பிறன் மனைவியை விழைபவன் இராமனாக இருந்தால், இராமனையும் எதிர்க்கிறேன்.//

    புராணங்களை ஆதரிக்கவோ, பிரச்சாரம் செய்யவோ நான் இங்கே எழுதவில்லை.

    ஆனால் புராணங்களை எதிர்க்க வேண்டும் என்கிற காரணத்துக்காக பல நண்பர்கள் இங்கே, பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவது ஒன்றும் பெரிய தவறல்ல என்ற வகையிலே அறிந்தோ, அறியாமலோ, கருத்துக்களை பதிவு செய்து விட்டனர்.

    தமிழ் பேரரசர்கள் என்றால், சிபிச் சோழன், கரிகால் சோழன், பாரி, ஓரி, அதியமான்,இரும்பொறை, செங்குட்டுவன், இராச இராசன், இராசேந்திரன் சோழன், ஜடாவர்ம சுந்தர பாண்டியன், கட்டபொம்மன் ….இப்படிப் பட்டவர்களைப் பற்றி எழுதுங்கள், நானும் மகிழ்ச்ச்யுடன் சேர்ந்து வாழ்த்தி விட்டுப் போகிறேன்.

    இராவணன் எந்த வகையில் தமிழன் என்று தெரியவில்லை. ஒரு வேலை அவன் தமிழனாக இருந்தாலும் அவனை எப்படி தமிழ் சமூகம் ஆதரிக்கும்?

    எட்டப்பனை தமிழ் சமூகம் ஆதரிக்கிறதா?

    இராமன் எனக்கு உறவினன் இல்லை.

    இன்னும் சொல்லப் போனால் ஒருவேளை இராவணன் கூட உறவினன் ஆக இருக்கலாம். இராவணனோ, இராவணனைப் போன்றவர்களோ என் உறவினனாக இருந்தாலும், என் மகனாகவே இருந்தாலும்,

    அவர் பிறன் மனைவியைத் தூக்கிச் சென்றாலோ, மக்களைக் கொடுமைப் படுத்தி சர்வாதிகாரம் செய்தாலோ அவரை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திலேயே நான் இருக்கிறேன்.

    ஒருவர் நியாயமானவராக இருந்தால் அவரை நம்பி வீட்டை ஒப்படைக்கலாம். ஒருவர் நெருங்கிய உறவினர் ஆக இருந்தாலும் அவர் தீய ஒழுக்கம் உடையவர் என்று நன்கு தெரிந்தால், அவரை நம்பி விட்டு விட்டுப் போனால் ஆபத்து தான்.

    நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு நண்பர் அவர் அவ்வளவு சிறந்த ஒழுக்கம் உடையவர் அல்ல – அவர் சில வருடங்கள கழித்து கல்லூரியில் படிக்கும் போது என் விடுதி அறைக்கு வந்தார். கூடப் படித்தவர் என்ற முறையிலே , அவருக்கு காபி, பிஸ்கட் எல்லாம் குடுத்து பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு மணி நேரம் தான் இருந்தார். ஆனால் அவர் சென்ற பிறகு என் நண்பனின் கால்குலேட்டரைக் காணவில்லை.

    எனவே நல்லவராக இருந்தால் அவர் பின்லாந்து காரராக இருந்தாலும் நம்பலாம். தீய ஒழுக்கம் உடையவன் மாமனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் அவனை ஆதரித்தால் நமக்கு தான் ஆபத்து.

    நீங்கள் இந்து மதத்தை திட்டுவது, வட இந்தியர்களை திட்டுவது, இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பது … இவை போன்றவை எல்லாம் வேறு விடயங்கள்.

    நான் கூட இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்க்கிறேன். இந்து மதத்தைக் குறை சொல்லுங்கள். நான் கூட அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுகிறேன். இந்து மதம் பற்றியான விமரிசனம் சரியாக இருக்கும் போது அதை ஆதரிக்கிறேன், வெறும் காழ்ப்புனர்ச்ச்யோடு எழுதப் பட்டிருந்தால் அதை தெளிவு படுத்துகிறேன்.

    ஆனால் இராவணனை ஆதரிக்கிறேன் என்றால், அது பெண்களுக்கு எதிரான கொடுமையை ஆதரிப்பதாகும். அது சமூகத்துக்கு செய்யும் கொடுமை. இராவணனின் செயல்களை ஆதரிப்பது, நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு.

    இராவணனோ, அவனைப் போன்றவர்களோ, நமக்கு இங்கெ செல்வாக்கு இருக்கிறது என்று மகிழ்ந்து இங்கெ வந்தால், ஆப்பசைத்த குரங்கின் நிலையை நாம் அடைவோம்.

    துறவி போல வேடமிட்டு இராவணன் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றால், தமிழ்ப் பெண்கள் அவனைத் துடைப்பத்தால் அடித்து விரட்டுவார்கள்- அவன் பச்சைத் தமிழனாக இருந்தாலும் சரி, ஆரஞ்சுக் கலர் தமிழனாக இருந்தாலும் சரி- தமிழ்ப் பெண்கள் அவனைத் துடைப்பத்தால் அடித்து விரட்டுவார்கள்!

  32. இராவணன் எந்த வகையில் தமிழ் அரசன் என்று தெரியவில்லை.

    ராசா பக்ஷே கூட தமிழ் மொழியில் நன்கு பேசுவதாக கூறுகிறார்கள்.

    இப்போது பொன்னாடை எல்லாம் போர்த்தப் படுகிற வேகத்தையும், கைக் குலுக்குவதையும், சிரித்து மகிழ்வதையும்,குழைவதையும், குனிந்து வணக்குகிற முறையையும் பார்த்தால்,

    விரைவிலேயே ராஜ பக்சேவும் சிறந்த தமிழ் பேரரசனாக சித்தரிக்கப் பட்டாலும் ஆச்சரியமில்லை.

  33. “இராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் முழுக்க முழுக்க கட்டுக் கதைகள், அவை போன்ற சம்பவங்கள் நடை பெறவேயில்லை” என்று நிரூபிக்க முடியாது. பகுத்தறிவின் அடிப்படையில் யாரும் இப்படிக் கூற முடியாது.

    ஏனெனில் இப்போது இங்கெ எழுதும் யாராவது 20,000 வருடங்களுக்கு முன்பிரிந்தே வாழ்ந்து வந்தோமா?

    அல்லது டைம் மிசினில் உட்கார்ந்து கடந்து காலத்துக்கு சென்று பார்க்கும் வசதி இருந்தால் அதிலே பயணித்து சென்று பார்த்து வந்தோமா?

    அவை உண்மையில் நடை பெற்ற சமபவங்கலைன் அடிப் படையில் எழுதப் பட்டவையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

    அதே நேரம் அவை கட்டுக் கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    எப்படி அவை நடை பெறவில்லை என்று நிரூபிக்க முடியாதோ, அதைப் போலவே அவை நிச்சயம் நடந்த நிகழ்வுகள் என்பதையும் நிரூபிக்க முடியாது.

    வரலாறு என்பதே அந்தந்த காலங்களில் எழுதப் பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சி இவற்றை வைத்து உருவகப் படுத்தப் படுவதுதான்.

    “எனவே எனக்கு இந்த புராணங்களைப் பிடிக்கவில்லை, அவற்றை நினைத்தாலே எனக்கு வெறுப்பு , எனவே அவை கட்டுக் கதை, கட்டுக் கதை, கட்டுக் கதை என்று அடித்துக் கூறுகிறேன்,
    எனவே எல்லோரும் அவற்றை கட்டுக் கதை என்று சொல்லுங்கள், சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று வேண்டுமானால் கூறலாமே தவிர,

    பகுத்தறிவு அடிப்படையில் இந்த புராணங்கள் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையாக வைத்து எழுதப் பட்டவை அல்ல என்று நிரூபிக்கப் பட முடியாது.

    மேலும் எந்தப் புராணத்திலும் தமிழ்ர்களுக்கு எதிராகவோ, பொது மக்களை சிறுமைப் படுத்தியோ எழுதப் படவில்லை.

    அதனால் இராவணன் போன்றவர்களை “தமிழர்” ஆக்கி “இவ்வாறாக தமிழரைக் குறை சொன்னார்கள்” , என்று சொல்வது போல உள்ளது.

    அப்போது துரியோதணனும் தமிழனா? துச்சாதனும் தமிழனா? தமிழரான துரியோதனன், துச்சாதனன் இவர்கள மீது பொய்க் குற்றச் சாட்டுகளை சுமத்தினார்கள் என்று கோவம் வர வில்லையா?

    வட இந்தியர்கள் தங்களையே குற்றம் சாட்டிக் கொண்டது ஏன்?

    மகாபாரதத்திலே தமிழர் மீது ஏன் பொய்க் குற்றச் சாட்டுகளை சுமத்தவில்லை?

  34. Rama…. Rama….

    There is a malicious mail circulating with Big lies about Ramayana and the Sand Bridge of PALK Straight. We would like to confront the foolish belief behind the story with some simple questions.

    #1) could somebody ask those forwarding the mail to tell what was there in the Ocean some 17 lakh years before?

    There was no ocean at all between Tamilnadu and Srilanka even some 10000 years before. Srilanka and India were connected by land and later the sea submerged the land. And as per the NASA the sand structure is naturally made not man made.

    #2) Why Rama has built a bridge when it was well connected by land at that time?

    Is he a Fool?

    #3) why did he build an 800 Miles length bridge to cover just 18 miles distance?(as per Valmiki Ramayanam)

    Is it not ridiculous? May be he started building it from Hyderabad
    or may be he built it to reach Andaman Island, Sure it is not
    towards Srilanka.

    #4) If he really built a bridge for crossing PALK Straight, then he must have built so many bridges to cross Mahanadhi, godhavari, krishna, Penna, Palar, Cauvery.. (Crossing his route towards Rameshvaram…) Where are they now? If somebody says they have been
    destroyed…then how Rama could be claimed as a god?

    #5) Is really Ramayanam happened some 17 Lakh years before?

    The known history of Civilization dates backs to only 7000 to 5000 years. If we have to believe the below story, that is 17 lakhs years before Rama has build a bridge and waged War. Then we could comfortably conclude it is Rama himself a half Monkey that is he never belongs to a civilized society… and they are nude too… It is even ridiculous to know Rama and Seeta crossed the Land using a stupid idea called an over-bridge without Wearing dress.

    There are many references against Buddhism appear in Valmiki’s Ramayana. So do we conclude Buddhism also 17 Lakhs years old?

    The present form (Valmiki) of Ramayana is no more than 2000 years old. And Rama as a character can never exists before 5000 years.

    Those who destructed Babri Masjid told that Rama was there during 700BC, but now suddenly it become 17.5 lakhs years ago. I don’t understand this sudden swift. May be tomorrow they will come and say that our Toilet was once used by Rama some 50 years before.

    Because it is all in Belief, Correct??? it is holy if it is belief. It doesn’t matter even if it kills human. It is bullshit, actually… Or Holyshit for somebody…

    #6) when Rama and Lakshman fell unconscious Hanuman brought a big Medicinal Mountain to Lanka. The pieces of the mountain fell all over India and it was also fallen in Kanyakumari which is known as Maaruththumalai.

    Is it not ridiculous to go via Kanyakumari when the route to Srilanka located somewhere (North to Ramnad) away from there?

    May be tomorrow any projects come in that mountain the Saffron Monkey group would say the mountain is holy.

    #7) How come Rama’s bridge was floating then and now it is
    submerged?

    #8) is it possible to follow the customs of Ramayana in today’s life?

    Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man. If we have to follow Ramayana customs today then we have to give the same punishment to one Woman. Her name is Umabharathi, who is a Suthra girl proposed Brahman Man Govindacharya. (http://www.tribuneindia.com/2000/20001010/nation.htm#10)

    #9) if somebody believes that Ramayan is an historical event, we can compare other kings with king RAM.

    Karikalan’s achievement is kallanai.

    Alexander – Greek impact to all civilizations thro his
    invasion.

    RajaRajan’s achievement is Big Temple.

    King Ashoka’s achievement – Saranath stupi, preaching
    Buddhism across the world.

    Agbar’s achievement – modern revenue department

    Rama just lost his wife, fought for her chastity and did nothing to people, where as the great kings of our past did lots of good things to the people.

    Rama’s achievements (Crimes) include:

    · Suspected his Wife Seedha and insulted her in front of everybody with ugliest words we could find in dictionaries. He asked her to prove her chastity. (It is the first SATI case). He even suspected Lakshman, Bharadhan, and Hanuman etc.

    · Killed Sampookan only because he is a Suthra, who tried to worship god directly, which is against Brahmanism.

    · Killed many innocents (tribal people) only because they are against Varnasrama dharma and only because they are against their land being used for Brahmanic rituals.

    · Lakshman killed Dadagai’s son. Raman solace Lakshman that he killed a Suthra so no need to worry.

    · Before building the bridge he destroyed a Village at the request of Sea king, because untouchable (Panjamas) people of the village have used a common Well in that village.

    · Rama himself and by other characters been projected as a Diehard protector of Varnasrama Dharma. The whole text of Valmiki Ramayana is a proof for this. And Ramayana is the literary symbol of re-establishment of the caste society. All other personal characters of him are common to any praised historic beings.

    · Killed Vali and Dadagai in a most cowardly manner.

    · Lakshman cruelly cut Soorpanagai’s nose and breast when she
    expressed her love. It is definitely inhuman act.

    · He insulted and chafed old woman kooni. This is surely not a Noble character to embrace.

    We cannot consider one as a God only because he is good for his friends, brothers and he is loyal to his father. And when he is anti people, Anti women and pro caste, Pro Sati society, we should actually cast him away from our Society. Rama actually deserves this and that is one of the ways to redeem our old pride of casteless society. He is not a model to be followed.

    #10) Rama committed suicide. It is even disgraceful and sure it is not a noble character to embrace.

    Rama never felt guilty when he tortured Seeta. But he only bereaved for his brother’s demise and committed suicide. Did he really love his wife? Did he really put faith on his half-in-life, Seeta?

    When he was roaming around forest after Seeta was missing, He bereaved with lustful memories of Seeta. He worried about he is missing the pleasures of Seeta and he worried about Seeta changes his love towards Ravana. He even says “if he were in Ayodya he may not worry about Seeta is missing, because there are alternatives for pleasure available.” It is only the pleasure of flesh that defines Seeta to him. That is why didn’t bereave for her. Instead he bereaved for his brother, where true love bond them. Is this a right attitude to follow in today’s society?

    #11) as per a famous folklore version of Ramayana, Lakshman’s wife
    Urmila died during her long-sleep. Urmila went into a trance and fell unconscious when Laxman was serving his brother Rama in the forest. When Lakshman came back to Ayodya he searched for his wife and found only her Skeleton remains in her bed. Lakshman’s concern about his wife was mentioned nowhere in the Ramayana. Like his brother Rama, Lakshman also considered his wife just as an object.

    Last but not the least question: Those who are protesting against breaking the Sand Bridge are the ones who gave rebirth to this project (During the BJP government this project again came in to picture. Before BJP it is the British rulers who thought about this project). Why did they do that? When they rule, is Rama not a God to them? When they rule, is Ramayana not a true story to them?

    “paritranaya sadhunam

    vinasaya ca duskrtam

    dharma-samsthapanarthaya

    sambhavami yuge yuge”

    “Whenever Adharma rules the world I will born and annihilate”

    Is Rama a God?

    Rama born to annihilate the casteless society and to reestablish the Varnasrama caste society, That is to say he born to reestablish the Dharma of Brahmanism. We will reject this anti people demon called Rama and strive for the reestablishment of Adharma – ie, casteless society.

    Please pass this to those whom you have forwarded the below message (the below is a conspiracy to gain the public support for an utterly foolish, malicious Claim).

    It may not open the Spiritual gate of the World instead it will again and again prove to the world that India is the land of Half naked Snake adorning Fakirs and Fools.

    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    WE ALL INDIANS KNOW THAT THERE IS VARADI (
    Bridge) BETWEEN INDIA
    AND SRILANKA WHICH WAS CONSTRUCTED BY ” VANARA SENA ” IN TRETA
    YUGA. BUT NOW NASA PEOPLE FIND IT THAT IT IS THERE AND THEY NAMED IT AS “ADAM
    BRIDGE”.

    IS IT CORRECT TO CALL the ancient Bridge WITH THAT new and Alien Name???? THINK
    OF IT.

    Will
    they ever accept if we change the name of the “London Bridge”
    as “Laxman Jhoola”? !!!?

    SO, NOW, WE WILL SPREAD THE TRUTH ALL OVER THE WORLD. DO
    YOUR CONTRIBUTION, SEND THIS TO EVERYBODY.

    NASA SHUTTLE IMAGES
    OF A MYSTERIOUS ANCIENT BRIDGE BETWEEN INDIA AND SRILANKA

    Courtesy : NASA Digital Image Collection

    The recently discovered bridge currently
    named as Adam’s Bridge made of chain of shoals, c.18 mi (30 km) long, in the Palk
    Strait between India and Sri Lanka, reveals a mystery behind it. The bridge’s
    unique curvature and composition by age reveals that it is man made. The
    legends as well as Archeological studies reveal that the first signs of human
    inhabitants in Sri Lanka date back to the a primitive age, about 17,50,000
    years ago and the bridge’s age is also almost equivalent. This information is a
    crucial aspect for an insight into the mysterious legend called Ramayana, which
    was supposed to have taken place in tretha yuga (more than 17,00,000 years
    ago). In this epic, there is a mentioning about a bridge, which was built
    between Rameshwaram (India)
    and Srilankan coast under the supervision of a dynamic and invincible figure
    called Rama who is supposed to be the incarnation of the supreme. This
    information may not be of much importance ! t o the archeologist s who are
    interested in exploring the origins of man, but it is sure to open the
    spiritual gates of the people of the world to have come to know an ancient
    history linked to the Indian mythology.

    SO , NOW , WE WILL SPREAD THE TRUTH ALL OVER THE WORLD.
    DO YOUR CONTRIBUTION, SEND THIS TO EVERYB

    (Courtesy: My mail Box)

  35. ராவணன் இலங்கையை ஆண்டவன் என்றால் அவன் தமிழாக இல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும். புராண,இதிகாசங்களில் பொதுவாக அசுரர்கள் என்றும் அரக்கர்கள் என்றும் சொல்லப்பட்டவர்கள் தமிழர்களே! வடஇந்தியர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டு கொண்டதையும் எழுதி வைத்துள்ளனர். நம்மை கேவல படுத்த புனைய பட்ட கதைகளை எதிர்க்க முதலில் பார்ப்பனிய மாயையில் இருந்து வெளிவர வேண்டும்.அல்லது தமிழ் நாட்டை ஆகிரமிதிருக்க வேண்டும் அதை இப்படி திரித்து தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள இந்த கதையை எழுதியிருக்க வேண்டும்.ராஜபக்சே சொலாத கதையா அது போலதான் . ராவணன் இங்கிருந்து போயி ராமன் மனைவிய கடத்துராரா ..?சும்மா நம்மை கேவல படுத்த பார்ப்பான் எழுதுன கதைதான் இது,அதை இங்க உள்ள கம்பன் என்கிற கழிசடை ரீமேக் பண்ணுச்சு இன்னும் கொஞ்சம் ரீல்களை சேர்த்து.

  36. சகோதரர் கலகக்காரன் அவர்களே,

    //There was no ocean at all between Tamilnadu and Srilanka even some 10000 years before. Srilanka and India were connected by land and later the sea submerged the land. And as per the NASA the sand structure is naturally made not man made.//

    இதை எப்படி நீங்கள் உறுதியாகச் சொல்லுகிறீர்கள்? 10,000 வருடம் முன்பு நீங்கள் பிரிக்கப் படாத நிலப் பகுதி மூலம் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு நடந்து சென்று இருக்கிறீர்களா? (நாம் இப்படிக் கேட்பதால் நீங்கள் அதிர்ச்சி அடையக் கூடாது. உண்மைக்கான ஆராய்ச்சிக்கு, இந்த கேள்வி ஒரு வழி என்பதால் கேட்கிறோம்)

    இந்த 10,000 வருடம் முன்பு இலங்கையும்-இந்தியாவும் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கவில்லை என்பதெல்லாம் ஒரு அனுமானம் தான், யூகம்தான்.

    நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிகளை, என்னால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எத்தனை முறை வேண்டுமானாலும் நிரூபித்துக் காட்ட முடியும்! என்னால் மட்டும் அல்ல பலரும் அதை நிரூபிக்க தயாராக உள்ளனர்.

    10,000 வருடம் முன்பு இலங்கையும்-இந்தியாவும் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கவில்லை என்பதை உங்களால் நிரூபித்துக் காட்ட முடியுமா? அந்த அறிங்கர் சொன்னார், இந்த பேராசிரியர் சொன்னார், இப்ப‌டி ந‌ட‌ந்திருக்க‌ வாய்ப்புக‌ள் உள்ளன‌ என்று கூறலாமே தவிர தெளிவான நிரூபணம் தர முடியுமா?

    டைம் மிசினில் அம‌ர்ந்து பின்னொக்கிப் ப‌ய‌ண‌ம் செய்து, ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ஏல்லாவ‌ற்றையும் பார்த்து வ‌ர‌ முடியுமானால், அப்போது நீங்கள் இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப் பரப்பாக இருந்ததைப் பார்த்து விட்டு கூறினால், நீங்கள் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொண்டு உங்களைப் பாராட்டுவார்கள்.

    இந்தியா நிலப் பகுதியும் இலங்கை நிலப் பகுதியும் ஒன்றாக இருந்தது என்றால், பிறகு எப்படி அந்தப் பகுதியிலே கடல் உருவாகியது?

    கடலில் எல்லா நிலப் பகுதியும் மூழ்கி விட்டது என்றால்,
    அது எப்படி ஒரே ஒரு மிகச் சிறிய பகுதி மட்டும், ஒரு கோடு போல மற்ற எல்லா இடங்களையும் விட, தனியாக இணைப்பு போல விட்டு விட்டதா?

    அது ஒரு மலை போன்ற பகுதி என்றால், மலை உயரமாக இருக்கும் அதனால் மூழ்கவில்லை எனலாம். ஆனால் மலை எப்படி மிக சிறிய கோடு போல இருக்கும்?

    கடல் மண்ணை கொஞ்சம் மாக கொட்டி விட்டு போனது என்றால், அது எப்படி சுவர் போல கட்டி விட்டுப் போகும்?

    இந்தியப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தது, அதனால் இலங்கை பிரிந்தது என்றால், இந்திய நிலப் பகுதி முழுவதும் நகர்ந்து போகும் போது, அது வரையில் ஒரே நிலப் பகுதியாக இருந்த இலங்கையும் சேர்ந்து நகராமல் தனியே நின்று விட்டது ஏன்?

    அந்த நேரத்தில் மேலே இருந்து ஏதாவது கடவுள், இலங்கையை காலால் அழுத்தி அதை நகர விடாமல் தடுத்து விட்டாரா?

    ஒரு நிலப் பரப்பு அவ்வளவு பெரிய நிலப் பரப்பு பிரிந்து போகும் அளவுக்கு விசை இருந்தது என்றால்,எப்படி அவ்வளவு குறுகலாக ஒரே ஒரு சிறிய பகுதி மட்டும் கச்சிதமாக கோடு போல இணைப்பை விட்டுச் சென்றது?

    இந்தப் பாலத்தில் அகழ்வாரைய்ச்சி நடத்தி பாலத்தின் , நீல, அகல, உயர பரிமாணங்கள், Contour Chart எடுத்தால் தெரிந்து விடும்! அகழ்வாரைச்சி செய்ய நீதி மன்றங்கள் அரசுக்கு வலியுறுத்தியும், மைய அரசு அந்த ஆராய்ச்சியில் இறங்க மனமில்லாமல் இருக்கிறது.

    இதை வெறும் மணல் திட்டுகளாகவே முடிவு கட்டுவது – எப்படியாவது இது பாலம் இல்லை, என்று எப்படியாவது காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே அப்படி செய்ய முடியும்.

    எனக்கு எந்தக் கட்டாயமும் இல்லை.

    எது உண்மையானாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயார்.
    சாட்டிலைட் அளிக்கும் படங்களை கூகிள் எர்த்தில் காணலாம். இயற்ககை எப்படி அவ்வளவு நேர்த்தியாக ஒரு கோட்டில் முறையாக பாலம் போல அமைப்பை உருவாக்கும் என்பது ஆச்சரியமே. ஆராய்ச்சி செய்வது அவசியமே!

    நான் அறிவியல் ரீதியிலே, பகுத்தறிவு முறையிலே ஆராய்ச்சி செய்ய ஆதரிக்கிறேன்.

    சிந்து சமவெளியை ஆராய்ச்சி செய்தது போல,

    கடலில் இறங்கி இந்த கோடு போல அமைத்திருக்கும் பகுதி

    கடலுக்கு கீழே எப்படி உள்ளது,

    மேலே அதன் அகலம் என்ன,

    கீழே அதன் அகலம் என்ன,

    கடலுக்கு அடியிலே அதன் சுவர் பகுதி எப்படி அமைந்து உள்ளது?

    இந்த விவரங்களை எல்லாம் திரட்டுங்கள் என்று தைரியமாக , வெளிப்படையாக சொல்கிறேன்.

    புராணங்கள் கூறுவதை அப்படியே நம்ப வேண்டும் என்று செயல் படுபவன் நான் அல்ல. அப்படி இராமயணப் புராணத்தை நம்ப வேண்டியது கட்டாயம் இல்லை என்ற நிலையிலே,

    நீங்கள் கூறும் “10,000 வருடம் முன்பு இந்திய இலங்கை ஒரே நிலப் பகுதி” புராணத்தை மட்டும் நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்ப்பது சரியா?

  37. சகோதரர் matt அவர்களே,

    இராவணன் தமிழான் என்றால் எதற்கு அவன் இலங்கையிலே வாழ்ந்தான்? இராவணன் ஏன் உரையூரையோ ம‌துரையையோ தலை ந‌க‌ராக‌ கொண்டு ஆட்சி செய்ய‌வில்லை?

    அப்ப தமிழ்நாட்டிலே தமிழர்கள் முத‌லில் வ‌சிக்க‌வில்லையா? த‌மிழ் நாடு ஆதி த‌மில‌ரின் தாய‌க‌ம் அல்ல‌வா? இல‌ங்கை தான் ந‌மது தாய‌க‌மா?

    அப்படியானால் இத்த‌னை த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ள் த‌மிழ் நாட்டு ப‌குதியில் தானெ உருவான‌து?

    ச‌ங்க‌ம் வைத்தது கொழும்பிலா, ம‌துரையிலா?

    புராண‌ இதிகாசங்கள் உண்மையா என்பது ஒரு விடயம், ஆனால் சகோதரர் matt அவர்களே, தமிழர்களை அரக்கர்கள் என்று சொல்வது தமிழ்ர்களுக்கு இழைக்கப் படும் அநீதி யாகும்.

    அரக்கர்கள் என்பவர்கள், அடுத்தவர்களின் பொருளை தங்களின் வலிமையால அபகரிப்பவர்கள்.

    அரக்கர்கள் என்பவர்கள், தங்கள் வலிமையால அடுத்தவர்களைக் கொடுமை செய்பவர்கள்.

    அரக்கர்கள் எந்தவித நீதியும் நேர்மையும் பார்க்காமல், மனசாட்சி இல்லாமல் அடுத்தவன் மனைவி உட்பட எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்பவர்கள்.

    ஆனால் தமிழர்கள் நியாயமானவர்கள், உழைத்துப் பிழைப்பவர்கள். பிறருக்கு தீங்கு செய்ய நினையாதவர்கள், மிகப் பண்டைய மொழி, இலக்கியம், நாகரீகம், பண்பாடு காத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

    புராணங்களில் எங்கும் தமிழ்ர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப் படவே இல்லை.

    வட இந்தியர்கள், மட்டும் பார்ப்பனர்களின் கையிலே இருந்து ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக காங்கிரெஸ், காந்தி, இராசாசி ஆகியோரை எதிர்க்க இப்படி பிராச்சாரம் செய்து வந்தார்கள்.

    யாருமே த‌மிழ‌ர்க‌ளை அர‌க்க‌ர்க‌ள் என்று கூற‌வில்லை.

    த‌மிழ‌ர்க‌ளாகிய‌ நாமே, ந‌ம்மை அர‌க்க‌ர்க‌ள்என்று சொல்லிக் கொள்ளுவ‌து ச‌ரியில்லை. அது ந‌ம‌து முன்னோருக்கு நாம் இழைக்கும் அநீதி. ‌

    த‌மில் நாட்டிலே இப்பொது சில‌ர், பொது ம‌க்களை மிர‌ட்டி அவ‌ர்க‌ள் நில‌ங்களை குறைந்த‌ விலைக்கு விற்க‌ க‌ட்டாய‌ப் ப‌டுத்திய‌தாக‌ செய்திக‌ள் வ‌ந்த‌ன‌. அவ‌ர்களைப் போல‌, வூரை அடித்து உலையில் போடுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும், அர‌க்க‌ர்க‌ள் என்று நீங்க‌ள் கூறினால் நான் ஆட்செபிக்க‌ மாட்டென்.

  38. ஆனால் தமிழர்கள் நியாயமானவர்கள், உழைத்துப் பிழைப்பவர்கள். பிறருக்கு தீங்கு செய்ய நினையாதவர்கள், மிகப் பண்டைய மொழி, இலக்கியம், நாகரீகம், பண்பாடு காத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

    புராணங்களில் எங்கும் தமிழ்ர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப் படவே இல்லை.

    வட இந்தியர்கள், ம‌ற்றும் பார்ப்பனர்களின் கையிலே இருந்து ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக காங்கிரெஸ், காந்தி, இராசாசி ஆகியோரை எதிர்க்க இப்படி பிராச்சாரம் செய்து வந்தார்கள்.

  39. //ராவணன் இங்கிருந்து போயி ராமன் மனைவிய கடத்துராரா ..?சும்மா நம்மை கேவல படுத்த பார்ப்பான் எழுதுன கதைதான் இது//

    இராவ‌ணன், ராம‌ன் ம‌னைவியை க‌வ‌ர்ந்து வ‌ராத‌ ப‌ட்ச‌த்திலெ நான் இராவ‌ண‌னை எதிர்க்க‌வில்லை.

    இராம‌ய‌ண‌ம் , ம‌ஹாபார‌த‌ம் இவை எல்லாம், உண்மையா க‌ட்டுக் க‌தையா என்ற‌ ஆராய்ச்சியை தொட‌ர்ந்து ந‌ட‌த்துவார்க‌ள். ந‌ட‌த்த‌ட்டும்.

    இராவ‌ணன், த‌மிழ‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, இல்லாவிட்டாலும் ச‌ரி, ராம‌ன் ம‌னைவியை க‌வ‌ர்ந்து வ‌ராத‌ ப‌ட்ச‌த்திலெ நான் இராவ‌ண‌னை எதிர்க்க‌வில்லை.

    ஆனால் இங்கே ப‌ல ந‌ண்ப‌ர்க‌ள்,இராவ‌ணன் அப்ப‌டி ராம‌ன் ம‌னைவியை க் க‌வ‌ர்ந்தால் என்ன‌, க‌வ‌ர‌ட்டுமே ஒன்னும் பெரிய‌ த‌ப்பில்லை என்கிற‌ ரீதியிலே ப‌திவிட்டு உள்ள‌ன‌ர்.

    இது குறித்து உங்க‌ள் க‌ருத்து என்ன‌? இது த‌மிழ் ப‌ண்பாட்டுக்கு ஒப்புத‌லா? இப்பொது உள்ள‌ த‌மிழ் ச‌முதாய‌த்துக்கு, இந்த‌ விட‌ய‌த்தில் உங்களின் தெளிவான‌ அறிவ‌ரை என்ன‌?

    இராம‌ன் ம‌னைவியை ம‌ட்டும் அல்ல‌, வேறு யார் ம‌னைவியையும், யாரும் க‌வ‌ர்ந்தாலும், அவ‌ரை இன‌, மொழி, ம‌த‌, சாதி வ‌ட்ட‌ வேறுபாடின்றி நான் எதிர்க்கிரென்.

    இராவ‌ணன், யார் ம‌னைவியையும் க‌வ‌ர்ந்து வ‌ராத‌ ப‌ட்ச‌த்திலெ நான் இராவ‌ண‌னை எதிர்க்க‌வில்லை.

  40. சகோதரர் matt அவர்களே,

    //ராவணன் இங்கிருந்து போயி ராமன் மனைவிய கடத்துராரா ..?சும்மா நம்மை கேவல படுத்த பார்ப்பான் எழுதுன கதைதான் இது//

    இராவ‌ணன், ராம‌ன் ம‌னைவியை க‌வ‌ர்ந்து வ‌ராத‌ ப‌ட்ச‌த்திலெ நான் இராவ‌ண‌னை எதிர்க்க‌வில்லை.

    இராம‌ய‌ண‌ம் , ம‌ஹாபார‌த‌ம் இவை எல்லாம், உண்மையா க‌ட்டுக் க‌தையா என்ற‌ ஆராய்ச்சியை தொட‌ர்ந்து ந‌ட‌த்துவார்க‌ள். ந‌ட‌த்த‌ட்டும்.

    இராவ‌ணன், த‌மிழ‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, இல்லாவிட்டாலும் ச‌ரி, ராம‌ன் ம‌னைவியை க‌வ‌ர்ந்து வ‌ராத‌ ப‌ட்ச‌த்திலெ நான் இராவ‌ண‌னை எதிர்க்க‌வில்லை.

    ஆனால் இங்கே ப‌ல ந‌ண்ப‌ர்க‌ள்,இராவ‌ணன் அப்ப‌டி ராம‌ன் ம‌னைவியைக் க‌வ‌ர்ந்தால் என்ன‌, க‌வ‌ர‌ட்டுமே, ஒன்னும் பெரிய‌ த‌ப்பில்லை என்கிற‌ ரீதியிலே ப‌திவிட்டு உள்ள‌ன‌ர்.

    இது குறித்து உங்க‌ள் க‌ருத்து என்ன‌? இது த‌மிழ் ப‌ண்பாட்டுக்கு ஒப்புத‌லா? இப்பொது உள்ள‌ த‌மிழ் ச‌முதாய‌த்துக்கு, இந்த‌ விட‌ய‌த்தில் உங்களின் தெளிவான‌ அறிவ‌ரை என்ன‌?

    இராம‌ன் ம‌னைவியை ம‌ட்டும் அல்ல‌, வேறு யார் ம‌னைவியையும், யாரும் க‌வ‌ர்ந்தாலும், அவ‌ரை இன‌, மொழி, ம‌த‌, சாதி வ‌ட்ட‌ வேறுபாடின்றி நான் எதிர்க்கிரென்.

    இராவ‌ணன், யார் ம‌னைவியையும் க‌வ‌ர்ந்து வ‌ராத‌ ப‌ட்ச‌த்திலெ நான் இராவ‌ண‌னை எதிர்க்க‌வில்லை.

  41. சிங்களன் தோத்தான் உங்களிடம் ! சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது இலங்கையிலா மதுரையிலா ? சோ சுப்ரமணிய சாமியின் கொழுப்புதான் தெரியுது உங்கள் வார்த்தைகளில் ! 10000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக இருந்ததை நீ பார்த்தாயா எப்படி ஏற்று கொள்ள வேண்டும் என்கிறீர் ,இதில் உங்கள் வார்த்தைகளில் தெரிவது இருததற்கான வாய்புகளை விட ஒன்றாக இல்லாத வாய்புகள் தான் அதிகம் என்று சொல்லவருவது. ஆனால் அது எப்படி இயற்கை மணல்திட்டு ஒரே சீராக உள்ளது என்று சொல்லும் போது அது ராமன் கட்டியதாக இருக்க நிறைய வாய்ப்பு காட்டுவது! பலே ! இதற்கு பேர்தான் பார்பன தந்திரம்! ஆராய்ச்சி நடத்தபடும் , நடத்தட்டும் ,கேள்வி கேட்போம் ,ராவணன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் நான் எதிக்கவில்லை இதெலாம் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி வாங்கி வழக்கை தள்ளி போட்டுகொண்டு தன் பிழைப்புக்கு வழி தேடுவதை போல !பார்ப்பார்கள் இதைத்தானே மக்களிடம் பக்தி குறைந்தால் நூறு தடவ கோவிலை சுத்துனா நினைத்து நடக்கும் என்று கிளப்பிவிடுவது . பூணூல் போட்டுக்கிட்டு ,ராமன கடவுளா ஏத்துகிட்டு பகுத்தறிவோட அணுகுவோம் நானும் பகுத்தறிவுவாதிதான்(வடிவேலு போல நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ) சிந்திச்சா இப்படிதான் யோசிக்கதொனும் !

  42. திருச்சிக்காரன் அவர்களே,

    ///ஆம் , பழி தீர்ப்போம். அம்பேத்கர் பெரியார் வழியில் சென்று கடைசியாக மதம் மாறுவோம் அல்ல கிழவனாக போனவுடன் சொத்தினைக் காப்பாற்ற சிறு பெண்ணாய் பார்த்து பழி தீர்ப்போம்.///

    ஆட்டோ சங்கர் என்பவர் இப்படி கீழ்த் தரமானவரராக இருக்கிறார். இவரைப் பற்றி நீங்கள் ஏன் ஒன்னும் சொல்லவில்லை.

  43. Dear Brother SSK,

    //ssk (14:12:11) :

    திருச்சிக்காரன் அவர்களே,

    ஆட்டோ சங்கர் என்பவர் இப்படி கீழ்த் தரமானவரராக இருக்கிறார். இவரைப் பற்றி நீங்கள் ஏன் ஒன்னும் சொல்லவில்லை.//

    //ஆட்டோ சங்கர் (12:59:36) :

    ஆம் , பழி தீர்ப்போம். அம்பேத்கர் பெரியார் வழியில் சென்று கடைசியாக மதம் மாறுவோம் அல்ல கிழவனாக போனவுடன் சொத்தினைக் காப்பாற்ற சிறு பெண்ணாய் பார்த்து பழி தீர்ப்போம்.//

    //திருச்சிக் காரன் (15:59:21) :

    நான் பிராமண வகுப்பை சேர்ந்த சகோதரகளை கேட்டுக் கொள்வது என்ன என்றால், நீங்கள் பொருப்போடும், கண்ணியமாகவும் எழுத வேண்டும்.

    வெறுமனே அலப்பறை செய்வதால் பலன் இல்லை.

    பெரியார் கூறியதில் பிராமணர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, திருத்திக் கொள்ள வேண்டியது, அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது.

    பெரியாரை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், உண்மையில் எல்லோரையும் விட பிராமணர்கள் தான் அதிக பலன் அடைய முடியும்.

    பெரியாரின் அறிவுரைகளில் பல பிராமணர்களையும், இந்து மதத்தையும் சாடுவது போல தோன்றினாலும், அவை உண்மையில் திருத்திக் கொள்ள கூறப் பட்டவையே. பெரியாரை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

    அவருடைய கருத்துகளில் எது உபயோகமானதோ அவற்றை எடுத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.//

  44. Dear

    //ராவணன் இலங்கையை ஆண்டவன் என்றால் அவன் தமிழாக இல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும். //

    //இராவணன் தமிழான் என்றால் எதற்கு அவன் இலங்கையிலே வாழ்ந்தான்? இராவணன் ஏன் உரையூரையோ ம‌துரையையோ தலை ந‌க‌ராக‌ கொண்டு ஆட்சி செய்ய‌வில்லை?அப்ப தமிழ்நாட்டிலே தமிழர்கள் முத‌லில் வ‌சிக்க‌வில்லையா? த‌மிழ் நாடு ஆதி த‌மில‌ரின் தாய‌க‌ம் அல்ல‌வா? இல‌ங்கை தான் ந‌மது தாய‌க‌மா?

    அப்படியானால் இத்த‌னை த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ள் த‌மிழ் நாட்டு ப‌குதியில் தானெ உருவான‌து?

    ச‌ங்க‌ம் வைத்தது கொழும்பிலா, ம‌துரையிலா? //

    இதில் நான் கேட்டதில் என்ன தவறு? அங்கம், வங்கம், கலிங்கம், கடாரம் எல்லாம் தன் குடையின் கீழ் கொண்டு வந்த இராசேந்திர சோழான் கூட தமிழ் நாட்டை விட்டு வேறு நாடு போய் அங்கே உட்கார்ந்து ஆளவில்லை. எந்த தமிழ் பேரரசனும் தமிழ் நாட்டை விட்டு போகவில்லை.

    இராவணன் ஒருவன் மட்டும் இலங்கையில் தலை நகர் வைத்து ஆட்சி செய்த இருக்கிறான் .

    அப்போது இராவணன் சோழனா, பாண்டியனா, சேரனா?

    உங்களைத் திருப்தி படுத்தவேண்டும் என்பதற்க்காக இராவணன் தமிழ் பேரரசன் என்று ஒத்துக் கொள்ள வேண்டுமா?

    //ராவணன் இங்கிருந்து போயி ராமன் மனைவிய கடத்துராரா ..?//

    //ராவணன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் நான் எதிக்கவில்லை இதெலாம் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி வாங்கி வழக்கை தள்ளி போட்டுகொண்டு தன் பிழைப்புக்கு வழி தேடுவதை போல//

    இராவணன் பிறன் மனை விழையாமல் இருந்திருந்தால் அவரை எதிர்க்கவில்லை, என்றால் அதுவும் தவறா?

    //பூணூல் போட்டுக்கிட்டு ,//

    இதை நான் ஏற்கனவே விளக்கி விட்டேன்.

    //ராமன கடவுளா ஏத்துகிட்டு //

    நான் எந்தக் கடவுளையும் இது வரை பார்க்கவில்லை பார்க்காத நிலையில் நான் அதற்க்கு சாட்சி கொடுக்கவில்லை.

    முதலில் இராமன் என்று ஒரு மனிதன் இருந்தானா என்பதை ஆராய்வோம் என்றால்,

    இராமர் என்று ஒருவர் வாழ்ந்தது உண்மையா, இந்த இராமாயணம் என்ற நூல் உண்மை சம்பவமா, என்பதை அறிய தரும் வகையிலே ஆராய்ச்சிகள் செய்யலாம் என்றால்,

    ஒன்றுமே செய்யாமல் அது பொய், கட்டுக் கதை என்று கூறியே ஆக வேண்டும் என்றால் அது பகுத்தறிவா?

    இல்லை நாட்டமை நடத்தும் கட்டை பஞ்சாயத்தா?

    //பார்ப்பார்கள் இதைத்தானே மக்களிடம் பக்தி குறைந்தால் நூறு தடவ கோவிலை சுத்துனா நினைத்து நடக்கும் என்று கிளப்பிவிடுவது//
    ஆயிரம் முறை சுத்தினாலும் AIDS வந்தவனைக் காக்க முடியுமா?

    பகுத்தறிவு என்றால் எல்லாவற்றையும் மறுப்பது, இல்லை என்று சாதிப்பது, நடக்கவேயில்லை என்று அடித்துச் சொல்வது அதை எல்லோரும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது – இதெல்லாம் தான் பகுத்தறிவா?

    பகுத்தறிவாளர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பும், நிதானமும், எச்சரிக்கையும் அவசியமாகும்.

    ஒவ்வொரு வார்த்தையையும் பகுத்தறிவாளன் மிகவும் யோசித்தே, பலமுறை சிந்த்திதே கூற வேண்டிய நிலை உள்ளது.

    ஏனெனில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல் படுபவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன வேண்டுமானாலும் கூறலாம். முழ‌ம் முழ‌மாக‌ காதில் பூ சுத்தல‌ம்! கேட்டால் “எனக்கு நம்பிக்கை இருக்கிறது”, என்பார்கள்,
    “நான் சாட்சி குடுக்கிறேன்”, என்பார்கள். நேரிலே பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல அவ்வளவு உறுதியாக சொல்வார்கள்.

    ஆனால் பகுத்தறிவு வாதி நேர்மையானவன். அவன் தன்னால் முடிந்த வரைக்கும் உண்மையைத் தேடுவான். தெரிந்த வரையில் கண்டதைக் கூறுவான்.

    “கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து.

    எனவே பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை.

    அதே நெர‌ம் க‌ட‌வுள் இல்லை, கடவுள் இல்ல‌வே இல்லை என்று கூறும் க‌ருத்து சுத‌ந்திர‌ம் எல்லொருக்கும் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும். பார்க்காத‌ க‌ட‌வுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத‌ க‌ட‌வுளை பார்க்க‌வில்லை என்று கூற‌ அனும‌தி இல்லையா? இதைக் கூறினால் தண்ட‌ன.!

    பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை. நாம் ந‌ம்பிக்கை வாதிகளை விட‌ நேர்மையாக‌ இருப்பொம்.

  45. ssk,

    உண்மை கசக்கிறதா ?

  46. இங்கே இராமாயணம் பற்றியும்,இராமர் பாலம் பற்றியும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
    .இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் இராமாயண இதிகாச ஆதார ஸ்தலங்கள்,சின்னங்கள்,கோவில்கள் பல உள்ளன.
    சேதுக்கரை,திருப்புலாணி,வாலிநோக்கம்,மற்றும்
    இராமேஸ்வரத்தில் ,இராமர் பாதம்,கந்தமான பர்வதம்,வில்லுண்டி தீர்த்தம்,லக்ஷ்மண தீர்த்தம்,ஜடாயு தீர்த்தம்,சுக்ரீவர் தீர்த்தம்,இராமநாதசுவாமி கோவில்,கோதண்டராமர் கோவில்,தனுஸ்கோடி போன்ற இராமாயண இதிகாச தொடர்புடைய ஸ்தலங்கள் உள்ளன.
    இந்துக்களுக்கு காசி, இராமேஸ்வரமும்,தனுஸ்கோடியும் மிக முக்கியமான புண்ணிய ஸ்தலங்களாகும்.இராமேஸ்வரத்திலாவது பல இதிகாச சின்னகள் உள்ளன.ஆனால் தனுஸ்கோடிக்கு இராமர் வந்து அங்கிருந்து இலங்கைக்கு பாலம் அமைத்து சென்ற ஒரு காரணத்தாலேயே தனுஸ்கோடி புண்ணிய ஸ்தலமாக இந்துக்களால் பன்னெடுங்காலமாக வழிபட்டு வரப்படுகிறது.
    இந்துக்கள் முதலில் தனுஸ்கோடிக்கு வந்து கடலில் புனித நீராடி பின் இராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி இராமநாதசுவாமி யை தரிசிக்க செல்வர்.1964 புயலுக்கு பின் தனுஸ்கோடி ஊர் அழிந்த காரணத்தால் தற்போது அங்கு சிலர் மட்டுமே செல்கின்றனர்.இந்த தனுஸ்கோடியில் இருந்து தான் இலங்கைக்கு இராமர் பாலம் அமைத்தார் என்று இராமாயணம் சொல்லுகிறது.
    உங்களில் சிலர் (இந்த இராமர் பாலத்தை) தனுஸ் கோடியிலிருந்து இலங்கைக்கு ஒரு கோடு போல மணல் திட்டுக்களால் உருவான ஒரு அமைப்பை Google Earth தில் பார்த்திருப்பீர்கள்.
    என்னுடைய கேள்வி இதுதான்.
    இவை இயற்கையாக உருவான மணல் திட்டுக்கள் என்றால் ஏன் இராமாயண இதிகாசத்தில் சொல்லப்பட்ட இராமர் பாலம் உருவாக்கிய பகுதியான தனுஸ் கோடிக்கும் இலங்கைக்கும் இடையே உருவாக வேண்டும்.?ஏன் கோடியன்கரை யிலிருந்தோ,ஏன் நாகப்பட்டினத்திளிருந்தோ,ஏன் தூத்துக்குடி -யில்லிருந்தோ ,ஏன் நாகர்கோவில் லிருந்தோ ,ஏன் இராமனாதபுரதிளிருந்தோ உருவாகவில்லை?.
    இவை இயற்கையாக உருவான மணல் திட்டுக்கள் என்றால் ஏன் நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்கள் போல் வரிசையாக இருக்க வேண்டும்?. ஏன் சிதறிய முத்துக்கள் போல் இருக்க கூடாது.?
    உலகில் வேறு எங்கும் இது போல் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட பாலம் போல இதிகாச சான்று உள்ள இடத்தில் அமையவில்லை.
    உலகில் வேறு எங்கு இது போல் நேர்த்தியான பாலம் போல் உள்ளது என்று கூறுங்கள்.நாம் Google Earth மூலம் ஆராயலாம்.
    -தனபால்.

  47. திருசிகாரரே, சோழர்களுக்கு முன்னால் ஆண்ட மன்னனாக கூட இருக்கலாம் , என்னை திருப்தி படுத்த நீங்கள் சொல்ல தேவை இல்லை.இதில் நாங்கள் யாரும் ராவணன் தமிழர்களின் இணை இல்லாத அரசன் என்று சொல்லவரவில்லை, ராமன் என்கிற கழிசடையின் பேரை நிலைக்க செய்ய அவனை கடவு்ளாக வழிபட உங்கள் மோடி மஸ்தான் கோஸ்டி கட்டிய கதையை தான் கண்டிக்கிறோம் ஆயிரம் முறை சுத்தினாலும் AIDS வந்தவனைக் காக்க முடியுமா?- இந்த கேள்விய என்கிட்ட ஏன் கேக்குறீங்க உங்கள் கும்பலிடமே கேளுங்கள்,
    //நாம் ந‌ம்பிக்கை வாதிகளை விட‌ நேர்மையாக‌ இருப்பொம்.//
    இதுதான் நகைசுவையின் உச்சம் ..நீங்க யாரு நம்பிக்கைவாதி இல்லையா ? அது என்ன நாம் என்று எங்களையும் சேர்த்துகிறீங்க…நாங்க உங்களவா இல்ல !

    தனபால்,
    நிலவில் அல்லாஹ் என்கிற வார்த்தை அரபு மொழியில் எழிதியதை போல் உள்ளது, இஸ்லாமை ஏற்று கொள்வீர்கள ..? உங்கள் கேள்வியெல்லாம் ஒரு கேள்வியே அல்ல . தந்தை பெரியார் சொன்னது உங்களை போன்ற ஆளுங்களுக்கு தான்..மத நூல்களிலும் புராணங்களையும் கொண்டு அதில் அறிவியலை தேடுவது ஆராய்வது மலத்தில் அரிசியை பொறுக்குவது போலாகும்.

  48. //நாம் ந‌ம்பிக்கை வாதிகளை விட‌ நேர்மையாக‌ இருப்பொம்.//
    இதுதான் நகைசுவையின் உச்சம் ..நீங்க யாரு நம்பிக்கைவாதி இல்லையா ? அது என்ன நாம் என்று எங்களையும் சேர்த்துகிறீங்க…நாங்க உங்களவா இல்ல ! //

    நம்பிக்கைவாதி… .

    இப்போது யார் நம்பிக்கையில் சிக்கியது? நான் இது பாலம் என்று அடித்துச் சொல்லவில்லை. இது பாலமாக இருந்திருக்க இருக்க வாய்ப்புகள் உள்ளன , அது ஆரய்ந்து உண்மையை தேட முயற்சி செய்வோம் என்று தான் கூறுகிறேன்.

    புராணங்கள் உண்மை என்று நான் அறுதியிட்டுக் கூறவில்லை. அவை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்றுதான் கூறுகிறேன். அவை கட்டுக் கதையாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறேன். .

    ஆனால் நீங்கள் நம்பிக்கை அடிப்படையில் செயல் படுகிறீர்கள்.

    அவைகள் கட்டுக் கதைதான் என்று எப்படி அடித்துச் சொல்கிறீர்கள்?

    ஏன் என்றால், அவை கட்டுக் கதை என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களே தவிர அவை உண்மையில் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய நீங்கள் விரும்பவில்லை.

    உங்களின் நம்பிக்கை புராணங்கள் எல்லாம் கட்டுக் கதையாக இருக்க வேண்டும் என்பது,

    தெளிவாக சொன்னால் உங்களின் விருப்பம் அவை எல்லாம் கட்டுக்கதைகள் என்று எல்லோரயும் நம்ப வைக்க செய்ய வேண்டும் என்பது.

    ஆனால் நானோ ஆராய்ச்சி செய்து, உண்மை எதுவாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளத் தயார் என்கிறேன்.

    இந்தப் பகுதியை -அது மணல் திட்டோ , பாலமோ- ஆராய வேண்டும் என்று கூறுகிறேன். ஆராய்ச்சி செய்து, உண்மை எதுவாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளத் தயார் என்கிறேன்.

    இந்த நிலையில் யார் பகுத்தறிவு வாதி, யார் நம்பிக்கை வாதி என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

    படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    //அது என்ன நாம் என்று எங்களையும் சேர்த்துகிறீங்க…நாங்க உங்களவா இல்ல ! //

    இது சரிதான்-பகுத்தறிவு பாதையில் போவதாக நினைத்து , நீங்கள் நம்புவது தான் உண்மை என்று நம்பிக்கை வாதியாக இருக்கிறீர்கள். எனவே நீங்கள சரியான பகுத்தறிவு பாதைக்கு வராத வரையிலே, நான் உங்களை பகுத்தறிவாளராக எப்படி சேர்த்துக் கொள்ள முடியும்? -என்ற வகையிலே உங்கள் பதிவு உள்ளது.

    விருப்பு, வெறுப்பு இன்றி உண்மையை தேடும் சரியான பகுத்தறிவு பாதைக்கு உங்களை அழைத்து செல்ல முடியும் என்று கருதி, நான் உங்களோடு சேருகிறேன்.

  49. சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று
    பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக வேதம் சொல்கிறது. சோமச்
    செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு,
    ஆடு போன்றவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் ‘அவிர்ப்பாகம்’ என்று
    சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள். மதுவை குடித்துவிட்டு உளறி வைத்தனர் இந்த வந்தேறிகள்.
    தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும் நரகாசுரன் புராணக் கதைக்கும் யாதொரு
    தொடர்பும் இல்லை. தீபாவளி என்பதன் பொருள் விளக்கு வரிசை” (தீபம் –
    விளக்கு, ஆவலி – வரிசை )
    என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய “சமணமும் தமிழும்”” என்ற
    நூலில் குறிப்பிடுகிறார்.

    “ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி”
    என்று மறைமலை அடிகள் தான் எழுதிய “தமிழர் மதம்””
    என்ற நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் –

    “ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன்
    முதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து
    பேசப்படுவராயினர்”
    (வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).

    இதோ இராமகிருஷ்ணபரமகம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தர் ,
    தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும்,
    அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
    (இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் 587-589)-
    “”அதான் விவேகனதரை பார்பனர்களுக்கு பிடிக்கவில்லையோ!””

    இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத,
    முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின்
    பெயராலும் கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்த பார்பன வித்தைகளை அழித்தொழிக்க உறுதிகொள்வோம்

  50. சகோதரர் matt அவர்களே,

    தமிழ் மன்னர்கள் எல்லோருக்கும், குறிப்பாக புகழ் வாய்ந்த தமிழ் மன்னர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவர்கள மேல் புலவர்கள் பாடிய பாட்டுக்கள் இலக்கியங்களாக உள்ளன.

    பட்டினப் பாலையில் பேரரசன் கரிகாலன் பற்றியும் அவன் ஆட்சி பற்றியும் உள்ளது. கலிங்கத்துப் பரணியில் இராசெந்திர‌ சோழன் வெற்றியைக் கூறி உள்ள‌ன‌ர். போரிலே தோற்ற‌ அர‌ச‌ர்க‌ளைப் ப‌ற்றியும் உள்ளது.

    போரிடும் போது ப‌கை அர‌சன் எரிந்த‌ வேல் மார்பில் பாய்ந்து, முதுகிலும் துலளைத்த‌தால் அதைப் புறப் புண் ஆக‌க் க‌ருதி வ‌ட‌க்கிருந்து வுயிர் நீத்த‌ ம‌ன்ன‌ன் ப‌ற்றி குறிப்புக‌ள் உள்ள‌ன‌!

    போரிலே யானையின் மேல் அம‌ர்ந்து ச‌ண்டையிட்ட‌ நிலையிலே இற‌ந்த‌ ம‌ன்ன‌ன், “துஞ்சிய‌ சோழ‌ன்” என்று எல்லாம் குறிப்புக‌ள் உள்ள‌ன‌!

    இந்த‌ பேர‌ர‌ச‌னாகிய‌ இராவ‌ண‌ன் மீது அவ‌ன் வாழ்ந்த‌ கால‌த்திலேயே ஒரு த‌மிழ் பாட‌லும்
    அவ‌னைப் ப‌ற்றி இல்லை. வ‌ட‌மொழி இல‌க்கிய‌த்திலே அவ‌ன் ப‌ற்றிய‌ குறிப்பு உள்ள‌து. நான்கு வேத‌மும் ஓதிய‌ ச‌ம‌ஸ்கிருத‌ ப‌ண்டிதன் ப‌ற்றி வ‌ட‌ மொழியாளர் தானே குறிப்பிடுவார்க‌ள்.

    இலங்கை ம‌ஹா வ‌ம்ச‌த்தை ப‌ற்றி எத‌ற்க்கு த‌மிழ் புல‌வ‌ர்க‌ள் பாடப் போகிறார்க‌ள்?

    ஆனால் இராவ‌ண‌ன் த‌மிழ‌ன் என்று நான் ஒத்துக் கொள்ள‌ வேண்டும், இல்லாவிட்டால் நான் ப‌குத்த‌றிவு இல்லாத‌வ‌ன் என்று கேலி செய்வீர்க‌ள்.

  51. சகோதரர் matt அவர்களே,

    //நாம் ந‌ம்பிக்கை வாதிகளை விட‌ நேர்மையாக‌ இருப்பொம்.//
    இதுதான் நகைசுவையின் உச்சம் ..நீங்க யாரு நம்பிக்கைவாதி இல்லையா ? அது என்ன நாம் என்று எங்களையும் சேர்த்துகிறீங்க…நாங்க உங்களவா இல்ல ! //

    நம்பிக்கைவாதி… .

    இப்போது யார் நம்பிக்கையில் சிக்கியது? நான் இது பாலம் என்று அடித்துச் சொல்லவில்லை. இது பாலமாக இருந்திருக்க இருக்க வாய்ப்புகள் உள்ளன , அது ஆரய்ந்து உண்மையை தேட முயற்சி செய்வோம் என்று தான் கூறுகிறேன்.

    புராணங்கள் உண்மை என்று நான் அறுதியிட்டுக் கூறவில்லை. அவை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்றுதான் கூறுகிறேன். அவை கட்டுக் கதையாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறேன். .

    ஆனால் நீங்கள் நம்பிக்கை அடிப்படையில் செயல் படுகிறீர்கள்.

    அவைகள் கட்டுக் கதைதான் என்று எப்படி அடித்துச் சொல்கிறீர்கள்?

    ஏன் என்றால், அவை கட்டுக் கதை என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களே தவிர அவை உண்மையில் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய நீங்கள் விரும்பவில்லை.

    உங்களின் நம்பிக்கை புராணங்கள் எல்லாம் கட்டுக் கதையாக இருக்க வேண்டும் என்பது,

    தெளிவாக சொன்னால் உங்களின் விருப்பம் அவை எல்லாம் கட்டுக்கதைகள் என்று எல்லோரயும் நம்ப வைக்க செய்ய வேண்டும் என்பது.

    ஆனால் நானோ ஆராய்ச்சி செய்து, உண்மை எதுவாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளத் தயார் என்கிறேன்.

    இந்தப் பகுதியை -அது மணல் திட்டோ , பாலமோ- ஆராய வேண்டும் என்று கூறுகிறேன். ஆராய்ச்சி செய்து, உண்மை எதுவாக இருந்தாலும் ஒத்துக் கொள்ளத் தயார் என்கிறேன்.

    இந்த நிலையில் யார் பகுத்தறிவு வாதி, யார் நம்பிக்கை வாதி என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

    படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    //அது என்ன நாம் என்று எங்களையும் சேர்த்துகிறீங்க…நாங்க உங்களவா இல்ல ! //

    இது சரிதான்-பகுத்தறிவு பாதையில் போவதாக நினைத்து , நீங்கள் நம்புவது தான் உண்மை என்று நம்பிக்கை வாதியாக இருக்கிறீர்கள். எனவே நீங்கள சரியான பகுத்தறிவு பாதைக்கு வராத வரையிலே, நான் உங்களை பகுத்தறிவாளராக எப்படி சேர்த்துக் கொள்ள முடியும்? -என்ற வகையிலே உங்கள் பதிவு உள்ளது.

    விருப்பு, வெறுப்பு இன்றி உண்மையை தேடும் சரியான பகுத்தறிவு பாதைக்கு உங்களை அழைத்து செல்ல முடியும் என்று கருதி, நான் உங்களோடு சேருகிறேன்.

  52. கம்பனை இகழ்வதில் என்ன மகிழ்ச்சியோ?
    வள்ளுவரை சிறுமைப் ப‌டுத்தி மகிழ்ந்தார் பெரியார். இப்படி எல்லாத் தமிழ்ப் புலவர்களையும் இகழ்ந்து, தமிழர்களையும் அசுரர் என்று இகழ்ந்து அவ்வளவு இகழ்ச்ச்யை உண்டாக்குகிறீர்கள் த‌மிழ‌ருக்கு.

    புலவர்கள் தாங்கள் வாழ்ந்த காலங்களில் தங்கள பகுதியில் வாழ்ந்த மன்னவர்களை பற்றி எழுதுவதே நடை முறை. ஆனால் இராமாயண பதிவு, உலகின் பல பாகங்களில் பாலி , இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, ஆகிய இடங்களில் கூட பதிவு செய்ய‌ப் ப‌ட்ட‌ நிலையில், அத‌ன் கொள்கை முக்கிய‌த்துவ‌ம் க‌ருதி, த‌மிழிலே மிக‌ச் சிற‌ந்த ப‌திவை அளித்து பெருமை சேர்த்தார்.

  53. Dear Brother matt,

    //இராவ‌ணன், யார் ம‌னைவியையும் க‌வ‌ர்ந்து வ‌ராத‌ ப‌ட்ச‌த்திலெ நான் இராவ‌ண‌னை எதிர்க்க‌வில்லை.

    ஆனால் இங்கே ப‌ல ந‌ண்ப‌ர்க‌ள்,இராவ‌ணன் அப்ப‌டி ராம‌ன் ம‌னைவியைக் க‌வ‌ர்ந்தால் என்ன‌, க‌வ‌ர‌ட்டுமே, ஒன்னும் பெரிய‌ த‌ப்பில்லை என்கிற‌ ரீதியிலே ப‌திவிட்டு உள்ள‌ன‌ர்.

    இது குறித்து உங்க‌ள் க‌ருத்து என்ன‌? இது த‌மிழ் ப‌ண்பாட்டுக்கு ஒப்புத‌லா? இப்பொது உள்ள‌ த‌மிழ் ச‌முதாய‌த்துக்கு, இந்த‌ விட‌ய‌த்தில் உங்களின் தெளிவான‌ அறிவ‌ரை என்ன‌? //

    Dear Brother matt,

    What is your reply for this? What is your stand on this issue?

  54. ஏற்கனவே உங்களுக்கு போதுமான அளவு விளக்கியாச்சு, உங்க திருப்திக்கு வேணும்னா ராவணன் பத்தினி சீதையை கடத்திட்டாரூ ,ராமன் ரொம்ப நல்லவரு,பாலம் கட்டுனாரு குரங்களையும் அணிலையும் வைத்துக்கொண்டு, இலங்கையில் இருந்தவர்கள் தமிழர்கள் இல்லை, விடுதலை புலிகள் தீவிரவாதிகள், பார்ப்பார்கள், ராஜபக்சே தமிழர்களுக்கு நன்மை செய்தவர்கள் .போதுமா ..?இனும் எதாவது…..

    திரும்ப திரும்ப ராவணன் கவராத பட்சத்தில் நான் எதிர்க்க வில்லை என்று கூறுவது எதனால் ? ராவணன் கவர்ந்தான் அதைத்தானே நிரூபிக்க வருகிறீர்கள், பிறன் மனைவியை நோக்குதல் தவறு என்று தமிழனுக்கு தெரியும். ஆரிய பார்பன கடவுள்கள் போல் அல்ல இங்கு உள்ளவர்கள். ஒழுக்கம் கெட்ட உங்கள் கிருஷ்ணனையும் ,இந்திரன் ,வாயு இப்படி அடுக்கிகொண்டே போகலாம் ஆரிய பொறுகிகளை. தன மகளையே புணர்ந்த பிரமனை பற்றியும், ஐந்து பேரை வைத்துக்கொண்ட பாஞ்சாலியை பற்றியும் உங்கள் கருத்தென்ன ?

  55. //ஆனால் இங்கே ப‌ல ந‌ண்ப‌ர்க‌ள்,இராவ‌ணன் அப்ப‌டி ராம‌ன் ம‌னைவியைக் க‌வ‌ர்ந்தால் என்ன‌, க‌வ‌ர‌ட்டுமே, ஒன்னும் பெரிய‌ த‌ப்பில்லை என்கிற‌ ரீதியிலே ப‌திவிட்டு உள்ள‌ன‌ர்.//

    இங்கு பின்னூட்டமிட்டவர்களில் யார் இன்னொறுத்தர் மனைவியை கவர்ந்து சரி என்ற ரீதியில் எழுதியுள்ளார், அல்லது தங்களை இவ்வாறு நினைக்கத்தூன்டிய பின்னூட்டவரிகள் எவை என்பதை தயவு செய்து தெரியபடுத்தவும்.

    எனக்கு புரிந்தமட்டிலும் பலர் இராமனை மற்றும் ஆரிய கடவுள்களை தாக்கியும், கதைகளில் திராவிடர்கள் வாழ்ந்த தென் இந்திய பகுதிகளை சேர்ந்தவர்களை அசுரர்களாகவும், ராட்சதர்களாகவும், பெண்பித்தர்களாகவும், வானரர்களாகவும் புனையப்பட்டிருப்பதைதான் சாடியிருப்பதாக நினைக்கிறேன்.

  56. சகோதரர் நித்தில் அவர்களே,

    எல்லோரும் நமது சகோதரர்கள் தான்.

    மீண்டும் சுட்டிக் காட்டி அவர்களைக் காயப் படுத்த விரும்பவில்லை. நீங்கள் ஆரம்பம் முதல் பதிவிடப்பட்ட பின்னூட்டங்களை வரிசையாகப் படியுங்கள். உங்களுக்கே தெரியும்.

  57. ///பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் தீங்கிழைத்து – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க,

    தேவர்களுக்காக (பார்ப்பனர்களுக்காக) அசுர குல தலைவன் நரகா அசுரனை கொன்று, அநீதியை நிலைநாட்டிய தீயவன், உலகின் முதல் கூலிப்படைத் தலைவன் கண்ணனை பழிதீர்க்க, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று மாவீரன் நரகா அசுரன் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.///

    அடப்பாவிகளா? எதையுமே நிரூபிசாத்தானே நம்புவது பகுத்தறிவு! ராமாயணம்ன்னு ஒன்னு நடந்திச்சான்னே இன்னும் நிரூபனம் ஆகல. அதுக்குள்ள அதுல பார்ப்பான் இருந்தானாம் அதுல ஆதிக்கம் இருந்திச்சாம். அதுல ராவணன் தமிழன் தான்னு வேற ஒத்துக்கனுமாம். முதல்ல நிரூபிக்கப்படாத ராமாயன காலத்துல தமிழ்ன்னு ஒரு மொழி இருந்துச்சான்னு நிரூபிங்கப்பா? பகுத்தறிவே இல்லாம பதிவு போட்றீங்க. இதுக்கு வாக்குவாதம் வேற.

  58. சகோதரர் matt அவர்களே,

    நீங்கள் ஆத்திரப் படுகிறீர்களேயல்லாது நான் சொல்ல வந்ததை சரியான நோக்கிலே புரிந்து கொள்ளவில்லை.

    இராமாயணம் உண்மை நிகழ்வாக இருந்த பட்சத்திலே, இராவணன சீதையைக் கடத்தியது உண்மையாக இருக்கும் பட்சத்திலே தான் அந்த செயலை எதிர்க்கிறோம்.

    நீங்கள் ஒரே அடியாக கோவப் படுகிறீர்கள்.

    நீங்கள் விமரிசிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை.

    புராணங்கள் கட்டுக்கதையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நானே கூறவில்லையா? நான் கூறும் போது, நீங்கள் கூறுவதை நான் ஏன் தடுக்கிறேன்?

    ஆனால் புராணங்கள் கட்டுக்கதையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது
    என கூறினால், அதை சரியான பகுத்தறிவு- யாரும் அதிலே குறையே சொல்ல முடியாது.

    ஆனால் அது கட்டுக் கதைதான் என்று உறுதியாகச் சொன்னால், அடித்துச் சொன்னால், எந்த அடிப்படையிலே அது கட்டுக் கதைதான் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்?

    அது கடந்த காலத்தில் நடந்ததாக கூறப் படும் நிகழ்வு ஆயிற்றே, அதுவும் மிகப் பழங்காலத்தில் நடந்ததாக கூறப் படுகிறது.

    நாளைக்கு யாரவாது வேறு நம்பத் தகுந்த ஆதாரங்களை கண்டு எடுத்தால், இப்படி கட்டுக் கதை என்று கூறியது என்ன ஆகும் ?

    பகுத்தறிவாளர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பும், நிதானமும், எச்சரிக்கையும் அவசியமாகும்.

    ஒவ்வொரு வார்த்தையையும் பகுத்தறிவாளன் மிகவும் யோசித்தே, பலமுறை சிந்த்திதே கூற வேண்டிய நிலை உள்ளது.

    நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல் படுபவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன வேண்டுமானாலும் கூறலாம்.

  59. அன்புறவுகளே…….

    திருச்சிக்காரர் ஒரு முறை ஆதரிப்பதாக சொல்லுகிறார்
    ஒரு முறை எதிர்பதாக சொல்லுகிறார்.
    எதை எழுதினாலும் நீ போய் பார்த்தாயா
    இராமனோடு வாழ்ந்தாயா இராவணனோடு வாழ்ந்தாயா என கேள்விகளை கேட்கிறார். இது நம் உணர்வுகளை தூண்டிவிட்டு விளையாடும் பார்ப்பனிய செயல்.

    எனவே தொடந்து அன்பர்கள் அவரோடு விவாதம் பண்ணாமல் நல்ல புத்தகங்களை வாசிக்கவும்
    நன்றி.

    இதற்கும் ஏதாவது எழுதுவார். அவருக்கு நேரம் இருக்கிறது நமக்கு இல்லை.அவர் இனம் வளர்ந்துவிட்டது நம்மினத்திற்காக நாம் நிறைய உழைக்க வேண்டும் அதற்கான வேலையைப்பார்ப்போம்.)

  60. பார்த்தவன் குருடனடி,

    படித்தவன் மூடனடி!

    உண்மையை சொல்பவனே,

    உலகத்தில் பித்தனடி!

  61. “குருடனடி,

    மூடனடி!

    உலகத்தில் பித்தனடி!”

    this is acceptable, please do not add all the first words for yourself. It is unnecessarily people given so much of attention to you, as some fool Kings given first place to the Bharmin Ministers. by enjoying it they distorted the history. made the people to believe want they want in a single word “Arasa Kattalai”. It was very easy for you those days. This history will not be repeated again. People are very much aware of the wickedness. Going forward many people will come out from their bondage and question against you. Be ready yourself for developing a new plot.

  62. திருசிகாரரே,
    பார்பன கதைகளை பேசினால் ,சும்மா நீங்க கோபம் கொள்றீங்க என்று சொல்லிவிட்டு பதில்களை சொல்லாமல் வேறு பக்கம் பேசுவதே வாடிக்கையாகிவிட்டது. முற்காலத்து சம்பவங்களை நிரூபிப்பது என்பது அதன் ஆதாரங்களை ஆராய்ந்து, அந்த விடயத்தின் வாய்புகளை வைத்து ஒரு முடிவுக்கு வருவது, ராமாயணம் , புராணங்கள், மகாபாரதம் , இதையெல்லாம் பொய் என்று நிரூபிக்க அதை படித்தாலே எளிதில் புரியும் ,அவளவு கட்டுகதைகள், இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் வரும் கள்ள உறவு, அடுத்தவன் மனைவியை புணர்தல் இது எல்லாத்துக்கும் முன்னோடி இந்த இந்து மத பார்ப்பனிய புனிதங்கள் தான். மகளையே புணர்ந்த உங்கள் பிரமன், ஐந்து பேருக்கு மனைவி(!?)யாக இருந்த பாஞ்சாலி, மூன்று பேரை மணந்த ,பல பெண்களிடம் சில்மிஷங்களை செய்த கிருஷ்ணன் ,இதை பற்றிய உங்கள் நிலை என்ன ?
    இனும் நிறைய கேக்கலாம், wordpress நாறிடும்.

  63. சகோதரர் ஆனந்த் அவர்களே,

    //please do not add all the first words for yourself. It is unnecessarily people given so much of attention to you,//

    நான் எழுதிய

    //”பார்த்தவன் குருடனடி”//

    ஒரு பழைய தமிழ் திரைப் படப் பாடலின் சில வரிகளை! (“அவன் பித்தனா” என்ற திரைப் படம் என்று நினைக்கிறேன்).

    அந்த வரிகளை அப்படியே எழுதினால் அந்தப் பாடல் நினைவுக்கு வரும் என்பதால் எழுதினேன்.

    பாதியை மட்டும் எழுதினால் அது அந்தப் அப்பாடல் என்பது தெரியாமல் போகலாம்.

    எனினும் உங்களின் அறிவுரைக்கு நன்றி.

    மக்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்களை சிறந்த சிந்தனையாளராக்கவே நான் விரும்புகிறேனல்லாது,

    நாலு பேர் புகழ நான் அதில் மஞ்சக் குளிக்க விரும்பவில்லை.

    எனினும் உங்களின் அறிவுரைக்கு நன்றி.

    அது என்னை என் நோக்கத்திலிருந்து பிறழாமல் இருக்க உதவும்

  64. // இராமாயணம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியா அல்லது வெறும் கதையா என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

    இராமாயணம் ஒரு நிஜமான நிகழ்வாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் அது வெறும் கதையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

    ஆனால், இராமாயணம் நிஜமான நிகழ்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே எண்ணுகிறேன். //

    எல்லோராலும் ஒத்துக்கொள்ளகூடிய நியூட்டனின் 3வது விதியை மேற்கோள் காட்டும் நீங்கள் இராமாயனத்தில் வருகிற கீழ்கண்டவைகளை எதனடிப்படையில் உண்மையாக இருந்திருக்கலாமென்று நம்புகிறீர்கள்.

    1) குபேரன் ஆயிரம் வருடங்கள் பிரம்மாவை நினைத்து தவமிருக்கின்றான். அதன் பயனாக உலக சொத்துக்களுக்கு அவனை பிரம்மா அதிபதி ஆக்குகிறான்.

    2) புஷ்பக விமானம் அதுவும் நினைக்கும் வேகத்தில் பறக்கக்கூடியது.

    3) கணவனின் சாபத்தால் அகலிகை கல்லானது. இராமனின் பாதம் பட்டவுடன் கல்லாக இருந்த அகலிகை பெண்னாக மாறுவது.

    4) பறக்கும் திறன் கொண்ட வானரம் அதுவும் ஓரு மலையையே பெயர்த்துஎடுக்கக்கூடிய வலிமைஉடையது. (இவ்வளவு சக்தி இருந்தும் ஒரு மூலிகையை கண்டுபிடிக்க தெரியாதது ஆச்சரியம்தான்). குழந்தையாக இருந்த போது மாம்பழம்ன்னு நினைச்சு சூரியன முழுங்க கிளம்ப, இந்திரன் தாக்க, இவன் தந்தை வாயு கோபம் கொண்டு உலகத்தில் காற்றே இல்லாமல் செய்ய, பின்னர் பல வரங்கள் கிடைத்ததும் காற்றை விடுவித்தானாம்

    5) வானரத்தின் வாலில் வைத்த தீயில் இலங்கையே பற்றி எரிந்த தாம் ஆனால் வானரத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லையாம்

    6) வாலியை கொன்று சுக்ரீவனுக்கு நாட்டை மீட்டுக்கொடுத்தானாம் ஏனப்பா என்னை மறைந்து இருந்து கொன்றாய்ன்னு கேட்டதற்கு தன்னுடைய விஸ்வரூபத்த காட்டி மோட்சம் கொடுத்தானாம். இதற்கு பதிலாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் சமாதானம் செஞ்சு வச்சிருக்கலாம். வாலி மற்ற வானரங்களவிட அதிக சக்திவாய்ந்தவனாயிற்றே (ஒரு சமயம் வாலி இராவணனை வென்று தன் குழந்தை விளையாடுவதற்கு பத்து தல பூச்சின்னு தூளியில கட்டினானாம்)

    7) அணில் கடற்கரையில் புரண்டு பாலம் கட்டுவதற்கு உதவியதாம். கடற்கரை மண் கட்டுமான வேலைக்கு ஏற்றதுதானா

    8) பேசும் விலங்குகள் (மாரீசன்)

    9) நினைத்த போது வேறு உருவம் எடுத்துக் கொள்ளும் கதா பாத்திரங்கள் (இராவணன் ஏழை பிராமனனாக வந்து சீதையை கடத்தியது)

    10) இராவணன் பத்தாயிரம் வருஷம் தவமிருந்து யாராலும் வெல்ல முடியாத வரத்தைப் பெற்றானாம்.

    இதெல்லாம் சில sample தான். இதுமாதிரி இயற்கைக்கு முரனான வாதங்களின் அடிப்படையிலேதான் இராமாயனம் கட்டுக்கதை என்று கூறுகிறோம். இது மாதிரி இயற்கைக்கு புறம்பான விஷயங்கள் இல்லாமல் இராமயணம் எழுதியிருக்கமுடியுமா? அப்படி எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என எண்ணிப் பாருங்கள்.

    நல்லவை வெல்ல வேண்டும் தீயவை வீழ வேண்டும் என்பதில் இங்கு பின்னூட்டமிட்டவர்கள் யாவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. தீயவர்களாக இக் கதைகளில் வருபவர்கள் எல்லாம் பார்பனர் அல்லாதவர்களாக இருக்கிறார்களே.

  65. Dear Mr. Nithil,

    We will discuss the ponits raised by you. Bear with me for few hours!

  66. Dear Brother matt,

    //திருசிகாரரே,
    பார்பன கதைகளை பேசினால் ,சும்மா நீங்க கோபம் கொள்றீங்க என்று சொல்லிவிட்டு பதில்களை சொல்லாமல் வேறு பக்கம் பேசுவதே வாடிக்கையாகிவிட்டது. //

    I have been answering all the questions in order, you know that. I am not shying away. we will be discussing.

  67. In my latest reply, I don’t know how the smiley is appearing in the place of point number 8.

    Nithil

  68. கவிமதி அவர்களுக்கு நன்றி!
    தாங்கள் சொல்வது சரியே .. திருச்சிகாரர் பார்பனியத்தை தூக்கிநிறுத்த, பகுத்தறிவோடு [பூணூலை மட்டும் அறுக்க மாட்டார் ஏன்என்றால் இவரு ஒழுக்கத்துக்கு அதான் காரணமாம்- பகுத்தறிவு] கேள்வி கேட்போம் என்று சொல்லிக்கொண்டு இலங்கையை ஆண்டது தமிழனா போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டு, பார்ப்பனிய இந்து மத குப்பைகளை நியாய படுத்த துடிப்பது எல்லோருக்குமே புரியும். பார்பனியத்தின் முகமுடியை நாம் மட்டும் கிழிக்கவில்லை ,அவர்களாகவும் கிழித்துகொள்வார்கள் என்பதற்கு திருச்சிகாரர் நல்ல உதாரணம்.

  69. சகோதரர் Matt அவர்களே,

    //Matt (07:58:25) :

    கவிமதி அவர்களுக்கு நன்றி!
    தாங்கள் சொல்வது சரியே .. திருச்சிகாரர் பார்பனியத்தை தூக்கிநிறுத்த, பகுத்தறிவோடு [பூணூலை மட்டும் அறுக்க மாட்டார் ஏன்என்றால் இவரு ஒழுக்கத்துக்கு அதான் காரணமாம்- பகுத்தறிவு] கேள்வி கேட்போம் என்று சொல்லிக்கொண்டு இலங்கையை ஆண்டது தமிழனா போன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டு, பார்ப்பனிய இந்து மத குப்பைகளை நியாய படுத்த துடிப்பது எல்லோருக்குமே புரியும். பார்பனியத்தின் முகமுடியை நாம் மட்டும் கிழிக்கவில்லை ,அவர்களாகவும் கிழித்துகொள்வார்கள் என்பதற்கு திருச்சிகாரர் நல்ல உதாரணம்.//

    நீங்கள் என் கருத்துக்களில் நான் சொல்ல வந்தது என்ன என்று பார்க்காமல், என்னைத் தனிப் பட்ட முறையிலே கிரவுண்ட் செய்வது போல எழுதுகிறீர்கள்.

    இப்போது முக்கிய விடயத்தை விட்டு நான் எப்படிப் பட்டவன் என்ற வகையிலே பதிவுகள் செல்லுகின்றன!

    நான் பெரிய ஆளா?

    நான் என்ன இராமனா? நான் என்ன இராவணனா? எனக்கு என்ன வலிமை இருக்கிறது?

    நான் என்ன ஆதி சங்கரரா, புத்தரா, விவேகானந்தரா, சாக்ரடீசா, பெரியாரா?

    என்னைப் பற்றி விவாதம் செய்வது மையக் கருத்தை விட்டு விலகும் வகையில் உள்ளது.

    நான் சாதாரணமானவன் தான் என்பதை பலமுறை கூறி விட்டேன்.

    சிந்திக்கவே கூடாதா? நான் மனதில் நினைப்பதை எழுதுகிறேன், கூடாதா?

    நான் ஒன்றும் பகுத்தறிவுக்குப் புறம்பான வகையிலே,

    பூணூல் அணிவது எனக்கு சக்தியை அளிக்கிறது என்று கூறவில்லையே!

    பூணூலை அணிவதால் நான் கடவுளைப் பார்க்க முடிகிறது என்று கூறவில்லையே!

    பூணூலை அணிவதன் மூலம் நான் இந்து மதத்தின் பேரால் கூறப் பட்டுள்ள அத்தனை கருத்துக்களையும் ஒத்துக் கொள்கிறேன் என்றும் கூறவில்லையே!

    பூணூலை அணிவது எனக்கு மனக் குவிப்பு செய்யும் பழக்கத்தை நினைவு படுத்துகிறது, மனசாட்சியின் காவலானாக அதை வைத்து இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறேன்.

    இவ்வளவு தெளிவாக கூறியும் காழ்புணர்ச்சி உடையவர்கள் பேசுவது போல, என்னை குற்றம் சுமத்துகிறீர்கள்.

    நீங்களும் பூணூல் அணிந்து 6 மாதம் மனக் குவிப்பு பயிர்ச்ச்யில் ஈடுபடுங்கள். உங்களின் மகிழ்ச்சிகள், கவலைகள் எல்லாம் மறந்து 15 நிமிடம் முதல் 30௦ நிமிடம் வரை மனக் குவிப்பு செய்து பாருங்கள். சூரிய ஒளியை நோக்கிய வண்ணம் சில நிமிடங்கள மனக் குவிப்பு செய்து பாருங்கள். உங்கள் மனம் வலிமை அடைகிறதா , இல்லையா என்று தெரிவிக்கலாம் அல்லவா?

    நம்முடைய முதல்வர் கூட சூரியனை நோக்கிய வண்ணம் யோகா பயிற்ச்சி செய்வதாக கூறியிருக்கிறாரே?

    “ஞாயிறு போற்றுதும் , ஞாயிறு போற்றுதும்” என்று கூறி யோகா செய்வதாகவும், அவருடைய பயிற்சியாளரும் தமிழிலே உச்சரிக்க ஆரம்பித்து விட்டதாகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.

    தொலைக்காட்சியிலே முதல்வர் கூறியதை ஒலிபரப்பு செய்தார்களே!

    கல்வி அமைச்சர் கூட யோகா பயிற்சியை பள்ளியிலே பயிற்றுவிக்கும் திட்டம் உள்ளதாக கூறினாரே, யோகா பயிற்சியால் முதல்வர் நலம் பெற்று இருக்க கூடும், எல்லோரும் பயன் பெரும் வண்ணம் அப்படி திட்டத்தை வைத்து இருக்கலாம் அல்லவா?

    நான் கூறினால் என்னைத் திட்டுகிறீர்கள்.

    “நான் பூணூல் அணிவதில்லை” என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்து விடவில்லையே – அப்படிக் கூட செய்து இருக்கலாம். ஆனால் உண்மையை கூறி இருக்கிறேன்!

    “பூணூல் விளக்கத்”தை வேறு வழியில்லாமல் இங்கே மீள் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

    //நீங்கள் பூணூலை சாதியின் அடையாளமாக பார்க்கிறீர்கள். பூணூலை அணிந்தவர்கள் சிலர் அதை அணிந்ததாலேயே தங்களை உயர்வானவராக கருதிக் கொண்டதால் , அப்படி அவர்கள நடந்து கொண்டதால் நீங்கள் இப்படி கருதுவது புரிந்து கொள்ளக் கூடியதே.

    ஆனால் நான் பூணூலை அணிவது, நான் உயர்ந்தவன் என்று பெருமைப் பட்டுக் கொள்ள அல்ல, பிறரை வித்யாசப் படுத்தி வாழ்வதற்கு அல்ல.

    நான் பூணூலை அணிவது, அது என் குறிக்கோளை நினைவு படுத்துவதால். அது தவறான எண்ணங்கள் மனதில் எழும் போது எச்சரிப்பதால். நான் அணியும் பூணூல் எனக்கும் என் மனசாட்சிக்கும் தொடர்பு படுத்துவதாக உள்ளது.

    ஏன் எங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா, நாங்கள் எல்லாம் தறி கெட்ட வாழ்க்கையா வாழ்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். நான் சொன்னது அந்த பொருளில் இல்லை. நீங்கள் வாழ்வது சிறந்த வாழ்க்கைதான். நாம் எல்லோரும் ஒரே முறையான வாழ்க்கையை தான் வாழ்கிறோம்.

    உண்மையிலே காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுக்கும் வரை, நாம் செய்யும் செயல்கள் , உண்ணும் உணவு , பேசும் பேச்சு எல்லாமே ஒன்றுதான்.

    அப்ப என்ன, பூணூலை அறுக்க வேண்டியதுதானே, இவ்வளவு பேச்சு பேசுறியே என்று நீங்கள் கூறலாம்.

    பூணூல் சில முக்கியமான விடயங்களை நினைவு படுத்துகிறது.

    குளித்து விட்டு வரும்போது, உடல் முழுவதையும் துவட்டினாலும், பூணூலில் ஈரம் போக அதை அழுத்தி துவட்டுகிறேன். அப்போது மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபட எனக்கு நினைவு வருகிறது. கூடுமான வரையில் எல்லா நாட்களிலும் , விடுமுறை நாட்களில் நிச்சயமாக வும் நான் மனக் குவிப்பு பயிற்ச்சியில் ஈடுபடுகிறேன்.

    நான் கடவுளை கண்டதில்லை என்றும், கடவுள் என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா என்பதை , அப்படி இருந்தால் நான் நேரில் கண்ட பிறகே அதை உறுதி செய்து கூற முடியும் என்பதையும் பல தளங்களில் எழுதி விட்டேன். இந்த முயற்ச்சியில் எனக்கு மனக் குவிப்பு அவசியமாகிறது.

    எனவே சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதான என் நோக்கத்திற்கோ, அதற்க்கு நான் தேர்ந்து எடுத்த பாதைக்கோ நான் அணியும் பூணூல் தடையாக இல்லை, தூண்டு கோலாகவே உள்ளது.

    நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது?

    நீங்கள் ஏன் பூணூல் அணிந்து ஒவ்வொரு நாளும், அல்லது குறைந்த பட்சம் வார விடுமுறை நாட்களிலாவது மனக் குவிப்பு பயிர்ச்ச்யில் ஈடு படக் கூடாது|?

    அப்படி தொடர்ந்து ஒரு 6 மாதம் மனக் குவிப்பு பயிற்ச்சி செய்து, அதனால் உங்கள மனம் அமைதியும், வலிமையும், முன்னேற்றமும் பெற்று உள்ளதா என்பதை எல்லோருக்கும் தெரியப் படுத்தலாமே?

    என் மனதில் வித்யாசம் இல்லாத போது, நான் யாரையும் தாழ்வாக எண்ணாத போது, எல்லோரின் மன நிலையையும் சமத்துவ சமூகத்துக்கு உயர்த்துவதில் நேர்மையான நோக்கம் உடையவனாக இருக்கும் போது,

    “நான் பூணூலை அறுத்து விட்டேன், பார்த்தீர்களா நான் சமத்துவக் காரன்” என்று அறை கூவ வேண்டுமா?
    பூணூல் அணியாதவர்கள் சாதி வித்தாயசம் பார்க்கவில்லையா? பூணூல் அணியாதவர்கள் சாதி காழ்ப்புணர்ச்சி உடையவராக இருப்பதில்லையா?.

    சாதி வெறியும் , சாதிக் காழ்ப்புணர்ச்சியும் மனதில் தானே இருக்கிறது. அது பூணூலிலும் ஆடைகளிலும் ஒட்டிக் கொண்டு இருக்கிறதா?

    பள்ளிகளில் எல்லா மாணவர்களும் சீருடை அணிகிறார்கள்- சாதி வித்யாசம் மறைந்து விட்டதா?

    சன் கிளாஸ் அணிவது இரண்டு காரணக்களுக்காக இருக்கலாம்.
    ஒன்று கண்ணைக் காக்க, இரண்டாவது ஸ்டைலுக்காக.

    பூணூல் அணிவதும் இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம். ஒன்று தான் உயர்ந்த சாதி என்ற எண்ணத்தில். இரண்டாவது பொருப்புகளையும் , கடமைகளையும் நினைவூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க.

    நான் சன் கிளாஸ் அணிவது கண்ணைக் காக்க. பூணூல் அணிவது பொருப்புகளையும் , கடமைகளையும் நினைவூட்டி மனசாட்சியின் காவலனாக இருக்க.

    நீங்கள் என்னை பூணூலை அறுக்க சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களைப் பூணூல் அணியச் சொல்லுகிறேன்.

    நான் பாரதியார் அல்ல. நான் ஒரு சாமானியன். உங்களைப் போன்றவன்!//

  70. come on guys, let us see that our arguments are focused on the main topic. Sorry for witing in English.

    Nithil

  71. ஐயா! ஐய்யய்யா!

    தயவு செய்து யாராவது சொல்லுங்களேன். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னாடி தமிழ்ன்னு ஒரு மொழி இருந்திச்சா? வெள்ளைக்காரன் யாராவது இருந்திச்சுன்னு சர்டிபிகேட்டு குடுத்திருக்கானா? (வெள்ளைக்காரன் சொன்னாதான் நான் நம்புவேன்) முதல்ல அத நிரூபிங்கப்பா!…அப்பாலக்கா ராவணன் தமிழனான்னு ஆராய்ச்சி பண்ணலாம்….

  72. திருசிகாரரே , பகுத்தறிவோட இருக்கு உங்கள் பூணூல் விளக்கம், மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையே, உங்கள் நிலையை தெரியபடுதவில்லையே ..!

    ஐயா ram,
    தமிழ் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்துச்சானு கேள்வி கேட்குறீங்களே உங்க வடமொழி இப்போ எங்கப்பா ..!? ஏம்பா உங்க மொழியில் உங்களவாலே பேசுவது இல்லை ..?இப்படி நக்கல் பேசியே உங்க மொழிய நீங்களே சாவடித்து விட்டீர்களே ! பார்பான் போலவே அவன் மொழியும் அடுத்த மொழியின் மீதுதான் ஏறி சவாரி செய்கிறது .

  73. சகோதரர் Matt அவர்களே,

    //Matt (03:11:58) :

    திருசிகாரரே,
    பார்பன கதைகளை பேசினால் ,சும்மா நீங்க கோபம் கொள்றீங்க என்று சொல்லிவிட்டு பதில்களை சொல்லாமல் வேறு பக்கம் பேசுவதே வாடிக்கையாகிவிட்டது. முற்காலத்து சம்பவங்களை நிரூபிப்பது என்பது அதன் ஆதாரங்களை ஆராய்ந்து, அந்த விடயத்தின் வாய்புகளை வைத்து ஒரு முடிவுக்கு வருவது, ராமாயணம் , புராணங்கள், மகாபாரதம் , இதையெல்லாம் பொய் என்று நிரூபிக்க அதை படித்தாலே எளிதில் புரியும் ,அவளவு கட்டுகதைகள், இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் வரும் கள்ள உறவு, அடுத்தவன் மனைவியை புணர்தல் இது எல்லாத்துக்கும் முன்னோடி இந்த இந்து மத பார்ப்பனிய புனிதங்கள் தான். மகளையே புணர்ந்த உங்கள் பிரமன், ஐந்து பேருக்கு மனைவி(!?)யாக இருந்த பாஞ்சாலி, மூன்று பேரை மணந்த ,பல பெண்களிடம் சில்மிஷங்களை செய்த கிருஷ்ணன் ,இதை பற்றிய உங்கள் நிலை என்ன ?//

    நீங்க‌ள் எழுதியுள்ள‌தைப் பார்த்தால் நான் என்ன‌வோ புராணங்களை உபன்யாசம் செய்யும் பௌராணிகர் போல‌ எண்ணி எழுதிய‌து போல‌ உள்ளது.

    ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் – நான் புராணங்களை உபன்யாசம் செய்யும் பௌராணிகர் அல்ல.

    புராண‌ங்களை புனித‌மாக‌ க‌ருதி பூச‌னை செய்ய‌ வேண்டும் என்று நான் சொல்லவில்லையே!

    அவை உண்மை நிக‌ழ்வுகளின் ப‌திவாக‌ இருக்க‌க் கூடுமா என்ப‌தும், அவ‌ற்றில் இருந்து நாம் என்ன‌ அறிந்து கொள்கிறோம் என்ப‌தையும் ப‌ற்றியே விவாதிக்கிரோம்.

    நீங்கள் கேட்டது போன்றே கேள்விகளை நானும் கேட்டவன் தான், கேட்பவன் தான்.

    திரௌபதி ஐந்து பேரை மணந்தால் அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்? அல்ல‌து வேறு யார் என்ன‌ செய்ய‌ முடியும்?

    நான் திரவுபதியின், “ஒரு மனைவி – பல கணவர்” கலாச்சாரத்தை ஆதரிக்கவில்லை.

    ஆனாலும் அதில் கட்டாயப் படுத்துதல், பல வந்தம் செய்தல் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் 6 பெரும் ஒரு ஏற்ப்பாட்டை அமைத்துக் கொண்டார்கள். அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்?

    ஆனால் அதை வைத்து, புராணங்கள் பொய் என்று எப்படி அறுதியிட்டுக் கூற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நடந்ததை அப்படியே எழுதி வைத்திருக்கலாம் அல்லவா. அந்தக் காலத்திலும் கள்ள உறவு, தீய ஒழுக்கம் இருந்திருக்கலாமே.

    அந்தக் கால மக்கள் எல்லோரும் புத்தனைப் போல ஆசையை வெறுத்து துறவறம் மேற்கொண்டவர்களா?

    கள்ள உறவு , அசிங்கமான செயல்கள் இவைகளைக் குறிப்பிட்டு இருப்பதால் அவை பொய்யானவை என்று எப்படி முடிவு எடுக்க முடியும்?

    அந்தக் காலத்திலும் அப்படி இருந்திருக்கிறார்கள், அதை அப்படியே பதிவு செய்து இருக்கிறார்கள்- என்றும் இருக்கலாம் அல்லவா?

    ஆனால் அதே நேரத்தில் அவை (புராணங்கள்) அப்படியே உண்மைதான் என்று அடித்துக் கூறி அக்மார்க் முத்திரை அளிக்கவும் நான் தயார் இல்லை. அவை கட்டுக் கதையாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதையும் கூறுகிறேன்.

    நான் திரௌபதி விச‌ய‌மாக‌ சில‌ (ஆண்) ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் க‌ருத்து கேட்ட‌ போது சில‌ர்,

    //ஆணும் பெண்ணும் ச‌ம‌ம், ஆண்க‌ள் ப‌ல‌ பெண்க‌ளை திரும‌ண‌ம் செய்து கொள்ளும் போது ஒரு பெண் மட்டும் ப‌ல‌ ஆண்களைத் திரும‌ண‌ம் செய்ய‌க் கூடாதா என்றும்

    ஏ கொடுமைக்கார‌, பாசிச ஆண் வ‌ர்க்க‌மே, பால‌டிப்ப‌டையில் பெண் இன‌த்தை அடிமைப் ப‌டுத்தி, கொடுமை செய்து, அவ‌ர்க‌ளை கைப் பாவையாக‌ ஆட்டி வைக்கும் உங்கள் அனைவ‌ரின் ஆணவ‌த்தின் மீதும் சாட்டைய‌டியாக‌ப் ப‌ழி தீர்க்கிறென், என்று சீர்திருத்த‌ வாதிக‌ளின் சிந்தை குளிரும் வ‌ண்ணம் திரௌபதி புர‌ட்சி செய்தாளோ என்ன‌வோ என்றும்

    வ‌ர‌லாற்றிலே இது வ‌ரையில் கோடிக்க‌ண‌க்கான‌ ஆண்க‌ள், பல‌ தார‌ வாழ்க்கை வாழ்ந்த‌ நிலையிலே, ப‌ல‌ திரௌபதிகள் தோன்றினால் தான் ஆண்க‌ளும் திருந்துவார்க‌ள். ஆண் ம‌ட்டும் த‌ன் சொகுசு வாழ்க்கைக்கு ட‌ஜ‌ன் க‌ண‌க்கிலே பெண்க‌ளைத் திருமண‌ம் செய்வான், பெண்க‌ள் அவ‌ன் காலைக் க‌ண்ணீரால் க‌ழுவி பாத‌ பூசை செய்ய‌ வேண்டுமா? ப‌ல‌ திரௌபதிகள் ச‌மூக‌த்தில் இருந்தால் ஆணும் ம‌ரியாதையாக‌ வ‌ழிக்கு வ‌ருவான் என்றும் கூறின‌ர்!

    நான் சில‌ பெண்க‌ளிட‌ம் இது விச‌ய‌மாக‌ப் பேசினேன். அவ‌ர்க‌ள் எல்லோரும் பல‌ க‌ண‌வ‌ன் க‌லாச்சார‌ம் த‌வ‌றான‌து என்று கூறினார்க‌ள். யாரும் ப‌ல‌ க‌ண‌வ‌ர் க‌லாச்ச‌ர‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை.

    ஆனால் திரௌபதி போல‌ வாழ்ந்தால் – ஆண்க‌ள் பல‌ பெண்களை திரும‌ண‌ம் செய்யும் செய‌ல்க‌ள் குறையுமா என்று கேட்டேன்.

    அத‌ற்க்கு அவ‌ர்க‌ளில் சில‌ர், குறையுமா என்று தெரியாது.

    ஆனால் அப்ப‌டிக் குறையுமானால் திரௌபதிகள் போல‌ இன்னும் சில‌ பெண்க‌ள் அப்ப‌டி வாழ‌வ‌தால், ஆண்க‌ள் பல‌ தார‌ ம‌ண‌ம் செய்வ‌து குறையுமானால் அதை ஆத‌ரிக்கிரோம், for sure என்ற‌ன‌ர்.

    கிருட்டின‌ர், பிர‌ம‌ன் ப‌ற்றி தொட‌ர்ந்து விவாதிப்போம்.

  74. சகோதரர் Matt அவர்களே,

    //“ஆரியரின் இந்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன்-இராவணனன்
    முதலான நிகரற்த தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து
    பேசப்படுவராயினர்”
    (வேளாளர் நாகரிகம் – பக்கம் 60).//

    இராம‌ய‌ண‌த்தில் ஆர‌ம்ப‌ நிக‌ழ்வாக‌,

    விசுவாத்திர‌ முனிவ‌ர் த‌ச‌ர‌த‌னின் அவைக்கு வ‌ந்து த‌ங்க‌ளுடைய‌ வேள்விகளை அசுர‌ர்க‌ள் கெடுப்ப‌தாகவும், த‌ங்க‌ளின் யாக‌த்துக்கு பாதுகாப்பு அளிக்க‌ இராம‌னையும், இல‌க்குவ‌னையும் அனுப்ப‌ வேண்டும் என்றும் கோருகிறார்.

    அத‌ன் ப‌டியே இராம‌னும் , இல‌க்குவ‌னும் க‌ங்கை ந‌திக்கு அருகே இருந்த‌ அவ‌ர்களின் யாக‌ சாலைக்கு சென்று அர‌க்க‌ர்க‌ளைப் போரிட்டு அழிக்கிரார்க‌ள்.

    நீங்க‌ள் கூறுவ‌து போல‌ த‌மிழ‌ர்க‌ள் தான் அர‌க்க‌ர்க‌ள் என்று கூற‌ப் ப‌ட்டார்க‌ள் என்றால்,

    தமிழ‌ர்க‌ள் கங்கை க‌ரையிலெ வ‌சிக்க‌வில்லையே?

    தமிழ‌ர்க‌ள் கங்கை க‌ரையிலெ வ‌சிக்க‌வில்லையே?

    பெரும்பாலான‌ அர‌க்க‌ர்க‌ள் வட இந்தியாவின் காட்டுப் ப‌குதிக‌ளில் இருந்த‌தாக‌வும், அவ‌ர்க‌ளோடு பல‌ அர‌ச‌ர்க‌ள் மோதிய‌தாக‌வும் கூற‌ப் ப‌டுகிர‌தே,

    த‌மிழ‌ர்க‌ள் வட இந்திய‌ காட்டுப் ப‌குதிக‌ளில் வ‌சிக்க‌வில்லையே!

    த‌மிழ‌ர்க‌ள் வட இந்திய‌ காட்டுப் ப‌குதிக‌ளில் வ‌சிக்க‌வில்லையே?

  75. ///தமிழ் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்துச்சானு கேள்வி கேட்குறீங்களே உங்க வடமொழி இப்போ எங்கப்பா ..!? ஏம்பா உங்க மொழியில் உங்களவாலே பேசுவது இல்லை ..?///
    யப்பா சாமி, என் வடமொழின்னு சொல்லிக்கிற அளவுக்கு நான் எந்த மொழியையும் விலை கொடுத்து வாங்கலப்பா! தம்பிங்களா! நான் கேட்ட கேள்விக்கு நேரடியா சுத்தாம பகுத்தறிவோட பதில் சொல்லுங்கப்பா. பத்தாயிரம் வருஷத்துக்கு முன்னாடி தமிழ்ன்னு ஒரு மொழி இருந்திச்சா இல்லையா. சர்டிபிகேட் வெச்சிருக்கீங்களா இல்லையா? எந்த பகுத்தறிவுக்கொம்பன் இதுக்கு ஆதாரம் சொல்றான்னு பாக்கறேன்.

  76. ram sir,

    இவர்களெல்லாம் ஜாதி வெறி ,மதம் வெறி என்னும் பேய்களை விரட்ட மொழி வெறி,இன வெறி என்னும் பிசாசுகளை வளர்கிறார்கள்

  77. //dhanabal (10:09:38) :

    ram sir,

    இவர்களெல்லாம் ஜாதி வெறி ,மதம் வெறி என்னும் பேய்களை விரட்ட மொழி வெறி,இன வெறி என்னும் பிசாசுகளை வளர்கிறார்கள்
    //

    24 carrot Golden words!

    Dhanabal Aiyaa, We are with you. Let us make a civilised soceity!

  78. //dhanabal (10:09:38) :

    ram sir,

    இவர்களெல்லாம் ஜாதி வெறி ,மதம் வெறி என்னும் பேய்களை விரட்ட மொழி வெறி,இன வெறி என்னும் பிசாசுகளை வளர்கிறார்கள்//

    பின்ன என்ன தனபால் சார்! ராமாயனத்தை மூடநம்பிக்கைன்னு சோல்லிட்டு கண்ணகியோட உருகல்லூகாக உயிரையும் கொடுப்போம்ன்னு சூளுரைத்த மூடர்கள் தானே இவங்க. எங்க போய் முட்டிகிறது. எல்லாம் நம்ம தல விதி.

  79. ஒரே ஒரு கேள்வி
    இராமன் கடவுளா? அல்லது மனிதனா?

  80. civilized society பாப்பானுக்கு மட்டும். வெறிபிடித்த மிருகங்களுக்கு எல்லாமே வெறியாதான் தெரியும்..

  81. Dear Brother matt

    //Matt (13:37:48) :

    civilized society பாப்பானுக்கு மட்டும். வெறிபிடித்த மிருகங்களுக்கு எல்லாமே வெறியாதான் தெரியும்..//

    நாம் எல்லோரும் சேர்ந்துதான் சமத்துவ சமுதாயம் அமைக்கப் போகிறோம்- அன்பின் அடிப்படையில்!

    சம அந்தஸ்து, சகோதரத்துவம், சம வாய்ப்பு, சம உரிமை, நலிவடைந்தவருக்கு அதிக கவனம்.

    நம்பிக்கை வையுங்கள். வெறுப்புக் கருத்துக்களால கல்லறைகலைதான் உருவாக்க முடியும்.

  82. //paarvai (11:47:31) :

    ஒரே ஒரு கேள்வி
    இராமன் கடவுளா? அல்லது மனிதனா?//

    அய்யா பார்வை ,

    நான் இதுக்கு பதில் சொல்லுறேன். ஆனால் நீங்க ஒரு சின்ன உதவி பண்ணுங்க.

    நான் பலபேரைக் கேட்டுப் பார்த்தேன். யாருமே இந்த “கடவுள்” அப்பிடின்னு சொல்லப் படுபவரை பார்த்தது இல்லையாம்.

    நீங்க இவ்வளவு தெகிரியமா கேக்குறீங்கனா, நீங்க கண்டிப்பா கடவுளை பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன். நாளைக் காலைல மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டராண்டை, கடவுளைக் கூட்டிகிட்டு வாங்க.

    அப்பால கடவுளு எப்படி இருப்பர்னு பாத்துட்டா, உங்க கேள்விக்கு நான் பதிலு குடுத்துர்றேன்.

  83. // நித்தில்

    நான் முந்தைய பின்னூட்டங்களிலே சொன்னதுபோல பிராமணர்கள யோக்கியசீலர்களாகவும் மற்ற வகுப்பினர அயோக்கியதனம் செஞ்சவர்களாகவும் சித்தரித்தது ஏன். //

    நான் முன்பே கூறியபடி புராணங்கள் வலிமையும் ஆற்றலும் உடையவர்களைப் பற்றி, குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களைப் பற்றியே அதிகம் குறிப்பிட்டு உள்ளன. எனவே பிராமண வகுப்பை சேர்ந்தவர்களுக்கு புராணக் கதைகளில் பெரிய முக்கியாய்த்துவம் ஒன்றும் தரப் படவில்லை.

    குறிப்பிடப் பட்ட சில இடங்களிலும் பிராமணர்கள் செய்த அயோக்கியத் தனங்களும் ஒழுக்கக் கேடுகளும் குறிப்பிடப் பட்டு உள்ளளன

    மகா பாரத்தின் முக்கியக் கிளைக் கதைகளில் ஒன்று யவக்ரீதன் கதை.
    பாரத்வாஜர் , ரைப்யர் என்ற இரண்டு பிராமணர்கள் வனத்திலே ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

    பாரத்வாஜருக்கு யவக் க்ரீதன் என்ற பையனும்,

    ரைப்யருக்கு பராவசு, அர்வாவசு ஆகிய இரண்டு மகன்களும் இருந்தார்கள். இந்த யவக்ரீதன் பராவசுவின் மனைவியை பயமுறுத்திக் கர்ப்பழித்து விடுவான்.

    பரவசுவும் தவறே செய்யாத தன தம்பி அர்வாவசுவை மன்னனிடம் போட்டுக் கொடுத்து விடுவான்.

    இராமாயணத்திலும் இந்திரன், பிராமண குலத்தை சேர்ந்த முனிவர் கவுதமரின் மனைவி அகலிகையுடன் கள்ள உறவு வைத்து அவள் வாழ்க்கையையும் கெடுத்ததும் கூறப் பட்டு உள்ளது

    இப்படி எல்லாம் “பிராமண சிரேஷ்டர்”களின் அசிங்கத்தையும் புராணங்கள் அம்பலப் படுத்தி உள்ளன.

  84. //நீங்க இவ்வளவு தெகிரியமா கேக்குறீங்கனா, நீங்க கண்டிப்பா கடவுளை பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன். நாளைக் காலைல மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டராண்டை, கடவுளைக் கூட்டிகிட்டு வாங்க.அப்பால கடவுளு எப்படி இருப்பர்னு பாத்துட்டா, உங்க கேள்விக்கு நான் பதிலு குடுத்துர்றேன்.//

    ராமன் கடவுள்ளனு கேட்டதுக்கு திருசிகாரருக்கு என்னமா கோபம் வந்துட்டு..

    //நாம் எல்லோரும் சேர்ந்துதான் சமத்துவ சமுதாயம் அமைக்கப் போகிறோம்- அன்பின் அடிப்படையில்!//
    உங்க ஆதரவு யாருக்கும் தேவை இல்லை, இந்துத்துவா கும்பல் எப்பவுமே இததான் சொல்லும் பாரதம் ,இந்தியர்கள்,இந்திய கலாச்சாரம். உள்ளுக்குள்ள பார்பன புத்தி செய்ய வேண்டிய வேலைய சரியா செய்யும். இந்த கும்பலின் பருப்பு தமிழ்நாட்டுல வேகாது. இப்போ மற்ற மாநிலங்களிலும் வேகல! போஸ்டர் ஒட்டி ராமகோபாலன் இலங்கையில் வாழும் தமிழர்கள் இந்துக்கள் அவர்களை கொள்ள மத்திய அரசு உதவியது என்று சொன்னான். அப்புறம் அதனால ஆதாயம் இல்ல என்றவுடன் அவர்களை ஆதரிக்கும் தமிழ் உணர்வாளர்களை தேச விரோதிகள் என்று கத்த ஆரம்பித்துவிட்டான். இப்போ அதை பற்றியே பேசுவது இல்லை.

  85. அவ்வளவு தானா சகோதரர் Matt அவர்களே,

    இன்னும் வேறு ஏதாவது பாக்கி இருக்கிறதா? வெறுப்புக் கருத்துக்களிலிரிந்து விடு பட்டு ஆக்க பூர்வமான கருத்துக்கு எல்லோரையும் கொண்டு வரும் என் செயலைத் தொடர்ந்து செய்வேன்.

    நாங்கள் சமத்துவ சமதாயம் அமைக்கப் போகிறோம்.

    சாதி, மத, இன, மொழி பேதமற்ற வகையிலே எல்லோரும் மனித நேயத்திலே இணையப் போகிறோம்.

    உங்களைப் போன்றவர்களுக்காக கதவுகள் திறந்தே வைக்கப் பட்டுள்ளன. இந்தியர்கள் எல்லோரும் என் சகோதரர்கள்.

    நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும், என்னைப் என்னைப் பாராட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் என்னைத் தூற்றலாம்.

    ஆனால் ஒரு விடயத்தை சிந்திதிதுப் பாருங்கள். ஏதேனும் ஒரு சமுதாயம் மட்டும் தனித்து வாழ முடியுமா? அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்க்களே உற்பத்தி செய்து, தாங்கள் உற்பத்தி செய்வதை தங்களுக்குள் மட்டுமே விற்று , தனி சமுதாயமாக வாழ முடியுமா?

    இணைப்புக்கான வழி அன்பின் வழி தான்- வெறுப்பு வழி அல்ல. கட்டைப் பஞ்சாயத்தின் வழி அல்ல,

  86. சகோதரர் Matt அவர்களே,

    Matt (03:32:08) :

    //நீங்க இவ்வளவு தெகிரியமா கேக்குறீங்கனா, நீங்க கண்டிப்பா கடவுளை பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன். நாளைக் காலைல மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டராண்டை, கடவுளைக் கூட்டிகிட்டு வாங்க.அப்பால கடவுளு எப்படி இருப்பர்னு பாத்துட்டா, உங்க கேள்விக்கு நான் பதிலு குடுத்துர்றேன்.//

    ராமன் கடவுள்ளனு கேட்டதுக்கு திருசிகாரருக்கு என்னமா கோபம் வந்துட்டு..//

    கடவுளைக் காட்டுங்கள் என்று கேட்டவுடன் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருகிறது.

    கடவுள் இல்லை என்று கூறுபவனுக்கு, கடவுளைக் காட்டுங்கள் என்று கேட்பவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூட கூறி விடுவீர்கள் போல இருக்கிறதே.

    இதுதான் பகுத்தறிவா?

  87. //நீங்க இவ்வளவு தெகிரியமா கேக்குறீங்கனா, நீங்க கண்டிப்பா கடவுளை பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன். நாளைக் காலைல மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டராண்டை, கடவுளைக் கூட்டிகிட்டு வாங்க.அப்பால கடவுளு எப்படி இருப்பர்னு பாத்துட்டா, உங்க கேள்விக்கு நான் பதிலு குடுத்துர்றேன்.//

    ராமன் கடவுள்ளனு கேட்டதுக்கு திருசிகாரருக்கு என்னமா கோபம் வந்துட்டு..

    //நாம் எல்லோரும் சேர்ந்துதான் சமத்துவ சமுதாயம் அமைக்கப் போகிறோம்- அன்பின் அடிப்படையில்!//
    உங்க ஆதரவு யாருக்கும் தேவை இல்லை, இந்துத்துவா கும்பல் எப்பவுமே இததான் சொல்லும் பாரதம் ,இந்தியர்கள்,இந்திய கலாச்சாரம். உள்ளுக்குள்ள பார்பன புத்தி செய்ய வேண்டிய வேலைய சரியா செய்யும். இந்த கும்பலின் பருப்பு தமிழ்நாட்டுல வேகாது. இப்போ மற்ற மாநிலங்களிலும் வேகல! போஸ்டர் ஒட்டி ராமகோபாலன் இலங்கையில் வாழும் தமிழர்கள் இந்துக்கள் அவர்களை கொள்ள மத்திய அரசு உதவியது என்று சொன்னான். அப்புறம் அதனால ஆதாயம் இல்ல என்றவுடன் அவர்களை ஆதரிக்கும் தமிழ் உணர்வாளர்களை தேச விரோதிகள் என்று கத்த ஆரம்பித்துவிட்டான். இப்போ அதை பற்றியே பேசுவது இல்லை.//

    நீங்கள் கருத்துக்களை அணுகும் பாங்கு சரி இல்லை. என் கருத்துக்களுக்கும், ராம கோபாலனின் கருத்துக்களும் முற்றிலும் வேறானவை.

    நான் எல்லா மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை ஆதரிக்கிறேன். இயேசு கிறிஸ்து உள்ளிட்ட பிற மத நிறுவனர்களை நான் மதிப்பதால் என்னை கிரிப்டோ கிருத்தவன் என்று இந்து மத அடிப்படை வாதிகள் அழைக்கிறார்கள்.

    நான் கடவுள் பற்றிய ஆராய்ச்சியை வரவேற்கிறேன். கடவுள் இல்லை என்று சொல்லும் உரிமை உண்டு என்கிறேன்.

    இங்கே mat என் கருத்துக்கு பதில் கருத்து கூறாமல், திசை திருப்புகிறார்.

    நீங்கள் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும். தமிழக மக்கள் எல்லோரும், கிட்டத்தட்ட 99.99 சதவீதம் பேர், தாங்கள் இந்தியர் என்று உறுதியான மன நிலையில் உள்ளார்கள்.

    உங்களைப் போன்றவர்கள் மக்களின் நன்மைக்காக எழுத வேண்டும்.

  88. முன்பு உங்களை புரியாததினால் தான் உங்களிடம் உங்கள் சாதிய அடையாளங்களை நீக்கிவிட்டு எல்லோருடனும் கலக்க அழைப்பு விடுத்தேன், பிறகு உங்களளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தவுடன்தான் அது எவளவு மூடத்தனமானது என்று புரிந்து கொண்டேன். பெங்களூரை விட சின்ன ஊர் தான் சிங்கப்பூர் அவனுக்கு முன்னாடி இந்தியா ஒன்னுமே இல்ல.இனும் 100 வருடம் ஆனாலும் இந்தியா அவன் கால் தூசிக்கு கூட போறாது. பெரிய நிலப்பரப்பு தான் நாடுன்னா, அப்போதான் வாழமுடியும்னா உலகத்துல நாலு நாடுதான் இருக்கனும். உங்க கருத்துப்படி, இந்திய சீனா கூட இருந்தா இனும் ஒத்தாசையாக இருக்குமே.
    //ஏதேனும் ஒரு சமுதாயம் மட்டும் தனித்து வாழ முடியுமா? அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்க்களே உற்பத்தி செய்து, தாங்கள் உற்பத்தி செய்வதை தங்களுக்குள் மட்டுமே விற்று , தனி சமுதாயமாக வாழ முடியுமா?//
    யாரு இங்க தனித்து யாருகூடயும் சேராம நம்மாலே உற்பத்தி செய்து கொண்டு ,தங்களுக்கு உள்ளேயே விற்று கொண்டு, வெளிஉலக தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் என்று யார் சொன்னது. நீங்களாகவே எதயாவுது சொல்லிவைகாதீர்கள்.
    //சாதி, மத, இன, மொழி பேதமற்ற வகையிலே எல்லோரும் மனித நேயத்திலே இணையப் போகிறோம். //
    இந்த dialogue ஏன் நீங்க சொல்றீங்க ? அமெரிக்ககாரன் எல்லோரையும் அணுகுண்டு வைத்து கொள்ள கூடாதுன்னு சொல்றானே அது போல இருக்கு.அவன்கிட்ட சரி உனக்கு ஏன் அணுகுண்டு நீயும் அத வைத்து கொள்ளாத அப்படின்னா, இது இருந்தாதான் எனக்கு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்பான்.அதுபோல் தான் நீங்களும்.
    ராமன் கடவுளா இல்லையா என்று கேட்டவுடன் கோபம் வந்ததா இல்லையா என்று உங்களுக்கே நன்கு தெரியும். அதை சுட்டி காட்டினால் கூட “நீஙகதான் கோபபடுறீங்க” அப்படின்னா என்னத்த சொல்ல ..!

  89. //இங்கே mat என் கருத்துக்கு பதில் கருத்து கூறாமல், திசை திருப்புகிறார். //
    என்ன உங்க கருத்து அதற்கு பதில் சொல்லாமல் திசை திருப்பிவிட்டேன்.
    ராமன் கடவுள் இல்லைனா , சாந்தி தியேட்டர் பக்கத்துல வாரேன் எனக்கு நீ கடவுள காட்டு என்பீர்கள். எல்லோரும் இந்தியர்கள் ” இந்தியா என்பது என் நாடு இந்தியன் என்பது என் பேரு” பாரத விலாஸ் சிவாஜிகணேசன் போல பாடுவீர்கள். உங்கள் நிலையை தெளிபடுத்த சொன்னால் பழைய பதிப்பு அதற்கு முந்தைய பதிப்பு எல்லாத்தையும் சேர்த்து போட்டு ஏழெட்டு பக்கத்துக்கு எழுதனையே எழுதறது.பாஞ்சாலி ஆண்களை தண்டிக்கவே செய்ததாக சிலர் சொல்கிறார்கள் என்பது. விதண்டவாததிற்கும், சால்ஜாபிற்கும் என்னத்த பதில் சொல்றது.

  90. // பெங்களூரை விட சின்ன ஊர் தான் சிங்கப்பூர் அவனுக்கு முன்னாடி இந்தியா ஒன்னுமே இல்ல.இனும் 100 வருடம் ஆனாலும் இந்தியா அவன் கால் தூசிக்கு கூட போறாது.//

    சிங்க‌பூர் சிற‌ப்பாக‌ இருக்க‌ட்டும். அத‌ற்க்கு என் வாழ்த்துக்க‌ள். நான் சிங்க‌ப்பூரை வெறுக்க‌வில்லை.

    இந்தியா 8000 வ‌ருட‌ வ‌ர‌லாறு உள்ள‌ நாடு. இந்தியாவுக்கு வ‌ழி க‌ண்டு பிடிக்க‌ விரும்பித்தான் அமெரிக்காவையே க‌ண்டு பிடித்தார்க‌ள்.

    வ‌ரலாற்றிலெ ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கால‌ம் உண்டு. முத‌லில் கிரீஸ், பின்ன‌ர் ரோம், பின்ன‌ர் பிரிட்ட‌ன், பின்ன‌ர் அமெரிக்கா என்று நாடுக‌ள் அவ்வ‌ப் போது மேலெ வ‌ந்தும் கீழெ போயும் உள்ள‌ன‌. இந்தியா எப்போதும் உள்ள‌து.

    குப்த‌ர்க‌ள் கால‌த்தில் பொற்க்கால‌ம் இருக்க‌வில்லையா? குலொத்துங்க‌ சோழ‌னின் கால‌த்திலெ சுங்க‌ம் த‌விர்க்க‌ வில்லையா? நாம் வ‌ர‌ முடியாது என்ற அவ‌ ந‌ம்பிக்கையை விடுங்க‌ள்.

    ச‌ந்திர‌னுக்கு விண்க‌ல‌ம் சிங்க‌ப்பூரார் விட்டார்களா? நில‌வில் நீர் இருப்ப‌தை க‌ண்டு பிடித்த‌து யார்? அனுமிண் நீர்மூழ்கி சிங்க‌ப்பூரார் விட்டார்களா?

  91. திருச்சிக்காரன்,

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதிலேயே தெளிவாக இல்லாத நீர் எதற்கு ராமனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்? உடனே நான் ராமனையும் கேள்வி கேட்பேன் என்று பல்டி அடிக்கவேண்டாம். இந்து மதத்திற்கு ராமனும் அடிப்படை என்று எழுதியிருக்கிறீர்.

  92. //ச‌ந்திர‌னுக்கு விண்க‌ல‌ம் சிங்க‌ப்பூரார் விட்டார்களா? நில‌வில் நீர் இருப்ப‌தை க‌ண்டு பிடித்த‌து யார்? அனுமிண் நீர்மூழ்கி சிங்க‌ப்பூரார் விட்டார்களா?//
    இதைவிட அப்பாவி இந்தியனை எங்கும் பார்க்க முடியாது…
    ஒரு நாட்டின் முனேற்றம் அந்த நாட்டின் மக்களின் நிலையை பொருத்தது. விண்கலம் கண்டுபிடிப்தினாலோ, சந்திரனில் நீர் இருபதை தெரிந்து கொள்வதாலோ இங்கு உள்ள மக்களின் நிலை உயர்ந்துவிடுமா?வறுமை என்றால் என்னவென்றே தெரியாது சிங்கப்பூர் மக்களுக்கு , இந்திய மக்களுக்கு வறுமை மட்டும்தான் தெரியும். சிங்கப்பூர் மக்களின் சராசரி வருமானம் எவளவு ,ஒரு இந்திய நாட்டின் கீழ் வாழ்பவனின் வருமானம் எவளவு? ஒப்பிடவே முடியாது.அந்த நாடு மக்களை பற்றி சிந்திக்கிறது. அதனோடு ஒப்பிட இந்தியாவிற்கு ஒரு தகுதியும் இல்லை.

  93. தம்பிங்களா! நான் கேட்ட கேள்விக்கு நேரடியா சுத்தாம பகுத்தறிவோட பதில் சொல்லுங்கப்பா. பத்தாயிரம் வருஷத்துக்கு முன்னாடி தமிழ்ன்னு ஒரு மொழி இருந்திச்சா இல்லையா. சர்டிபிகேட் வெச்சிருக்கீங்களா இல்லையா?

    ஒரு பகுத்தறிவாளன் மூடர்களின் கண்களை திறக்க மாங்கு மாங்குன்னு கேட்டுக்கிட்டிருக்கேன். யாராவது பதில் சொல்றாங்களா பாரேன்!!!! வசதியா இந்தக் கேள்விக்கு ஒரு நிரூபனம் குடுக்காம சும்மா சப்பக்கட்டு விதண்டாவதமே பன்னிக்கிட்டு இருக்காங்கப்பா? சே! பகுத்தறிவு செத்துப்போச்சு நம்மாளுங்களுக்கு. என்னத்த சொல்ல.

  94. Dear Brother Mat,

    //இதைவிட அப்பாவி இந்தியனை எங்கும் பார்க்க முடியாது…
    ஒரு நாட்டின் முனேற்றம் அந்த நாட்டின் மக்களின் நிலையை பொருத்தது. விண்கலம் கண்டுபிடிப்தினாலோ, சந்திரனில் நீர் இருபதை தெரிந்து கொள்வதாலோ இங்கு உள்ள மக்களின் நிலை உயர்ந்துவிடுமா?வறுமை என்றால் என்னவென்றே தெரியாது சிங்கப்பூர் மக்களுக்கு , இந்திய மக்களுக்கு வறுமை மட்டும்தான் தெரியும். சிங்கப்பூர் மக்களின் சராசரி வருமானம் எவளவு ,ஒரு இந்திய நாட்டின் கீழ் வாழ்பவனின் வருமானம் எவளவு? ஒப்பிடவே முடியாது.அந்த நாடு மக்களை பற்றி சிந்திக்கிறது. அதனோடு ஒப்பிட இந்தியாவிற்கு ஒரு தகுதியும் இல்லை.//

    இந்தியாவில் முன்னேர‌ வேண்டிய‌து அதிக‌ம் உள்ள‌து. ம‌க்க‌ள் வாழ்க்கை த‌ர‌ம்‌ உய‌ர‌ வேண்டிய‌து உள்ள‌து.

    நான் தான் கூறினேனே, சிங்க‌ப்பூர் இன்று இருக்கும். நாளை அது கெடும் என்று நாம் கூற‌வில்லை. சிங்க‌பூர் சிற‌ப்பாக‌ இருக்க‌ட்டும். அத‌ற்க்கு என் வாழ்த்துக்க‌ள். நான் சிங்க‌ப்பூரை வெறுக்க‌வில்லை.

    இந்தியா எப்போதும் இருக்கும்.

    கிழிந்த‌ புட‌வை க‌ட்டியிருக்கும் த‌ன் சொந்த‌ தாயைப் பார்த்து, ப‌க்க‌த்து வீட்டுக்காரி ப‌ட்டுப் புட‌வை க‌ட்டி இருக்கிராள், நீ இப்ப‌டி கிழிந்த‌ புட‌வையொடு இருக்கிராய்

    என்று பரிகாச‌ம் செய்வ‌து போல‌ உள்ள‌து உங்க‌ள் கருத்து.

    இது ந‌ம் நாடு. இந்த‌ நாட்டை உய‌ர்த்துவேன். என் குழ‌ந்தைக்காக‌ ம‌ட்டும் அன்று. என் ச‌கோத‌ர‌ இந்திய‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்காக‌ வும்!

  95. Dear Brother Robin,

    //கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதிலேயே தெளிவாக இல்லாத நீர் எதற்கு ராமனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்? உடனே நான் ராமனையும் கேள்வி கேட்பேன் என்று பல்டி அடிக்கவேண்டாம். இந்து மதத்திற்கு ராமனும் அடிப்படை என்று எழுதியிருக்கிறீர்.//

    //’கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதிலேயே தெளிவாக இல்லாத நீர் //

    “தெளிவாக‌ இல்லாத”‌ என்ப‌து ச‌ரியான‌ க‌ருத்து இல்லை. தெளிவைத் தேடி செல்லுகிறேன்.

    க‌ட‌வுள் இருக்குதுனு நீ ந‌ம்புரியா, நானும் ந‌ம்புரேன் என்றுஃபைனான்ஸ் க‌ம்பெனியை அதிக‌ வ‌ட்டிக்கு ஆசைப் ப‌ட்டு ம‌ய‌ங்கி ந‌ம்பி, க‌டைசியில் வாயிலும் வ‌யிற்றிலும் அடித்துக் கொண்டு அவ‌திப் ப‌டுப‌வ‌ரைப் போல‌, ம‌ய‌க்க‌த்திலே ஆழாம‌ல் தெளிவைத் தேடி செல்லுகிரேன்.

    //எதற்கு ராமனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்?//

    த‌ன் ம‌கிழ்ச்சியை ம‌றுத்து, பிற‌ர் ம‌கிழ்ச்சிக்காக தான் துய‌ர‌ங்க‌ளை சும‌ந்து காடு சென்ற‌ இராம‌னின் அந்த‌க் கொள்கையை, செய‌லை ஆத‌ரிக்கிரேன்.

    இராவ‌ண‌ன் பிற‌ன் ம‌னைவியைத் தூக்கி சென்ற‌ செய‌லைக் க‌ண்டிக்கிரேன்.

    பிறன் மனைவியை விழைபவன் இராமனாக இருந்தால், இராமனையும் எதிர்க்கிறேன்.

    இது கொள்கை அடைப்ப‌டியில் ஆன‌து.

    நான் இயெசு கிரிச்துவை ப‌ற்றி சிற‌ப்பாக‌ எழுதியாதால் ப‌ல‌ரும் என்னைக் “கிரிப்டொ கிருச்துவ‌ன்” என்று கூட‌ கூறியுள்ள‌ன‌ர்.

  96. //திருச்சிக்காரன்,

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதிலேயே தெளிவாக இல்லாத நீர் எதற்கு ராமனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்? உடனே நான் ராமனையும் கேள்வி கேட்பேன் என்று பல்டி அடிக்கவேண்டாம். இந்து மதத்திற்கு ராமனும் அடிப்படை என்று எழுதியிருக்கிறீர்.
    //

    நான் ராமனையும் ஆதரிப்ப‌து அவ‌ரின் கொள்கை, செய‌ல் பாடு ஆகிய‌வ‌ற்றுக்கு ஆக.

    அவ‌ர் க‌ட‌வுளின் அவ‌தாரமா, க‌ட‌வுளா என்ப‌து ப‌ற்றி நான் அக்க‌றை காட்ட‌வில்லை.

    க‌ட‌வுள் என்று யாராவ‌து இருந்தால், அவ‌ரை நாம் நேரில் ச‌ந்திக்கும் போது அவ‌ர் எப்ப‌டி இருக்கிரார், உருவ‌ம் இருக்கிர‌தா, இல்லையா என்ப‌தை எல்லாம் அப்போது பார்த்துக் கொள்வோம்.

    அவ‌ர்தான் இராம‌னாக‌ வ‌ந்தாரா, அவ‌ர்தான் இயெசு கிரிஸ்துவாக‌ வ‌ந்தாரா என்ப‌தை அப்போது அவ‌ரிட‌மே கேட்டுக் கொள்வேன்‍- அதாவ‌து க‌ட‌வுள் என்று ஒருவ‌ர் இருந்தால்.

    Fair enough- Any contradictions?

  97. நம் பகுத்தறிவாளர்களில் 99.99 % பேர், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதில்லை என்பது என் கருத்து.அவர்கள் இந்து கடவுள்,இந்து மதம்,முக்கியமாக பிராமணன் ஆகியவற்றின் மீது அளவு கடந்த வெறுப்பையும், கோபத்தையும் காட்டுகிறார்கள்.தீவிர வெறுப்பு ,கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்களால் ஒரு வெறி பிடித்த தலைமுறைகளை தான் உருவாக்க முடியும். இதனால் நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை.

    dhanabal.

  98. ப‌குத்த‌றிவு என்றாலே – இந்து மதத்தை வெறுப்பது, இந்து மதத்தை இகழ்வது

    ப‌குத்த‌றிவு என்றாலே -பார்ப்பனர்களை வெறுப்பது, பார்ப்பனர்களை இகழ்வது

    ப‌குத்த‌றிவு என்றாலே இந்திய நாட்டை வெறுப்பது, இந்திய நாட்டை இகழ்வது,

    ப‌குத்த‌றிவு என்றாலே- மேலை நாட்டவரை வெறுப்பது, மேலை நாட்டவரை இகழ்வது ,

    ப‌குத்த‌றிவு என்றாலே – வ‌ள்ளுவ‌ர், க‌ம்ப‌ர் உள்ளிட்ட‌ சிற‌ந்த‌ த‌மிழ் புல‌வ‌ர்களை வெறுப்பது,
    வ‌ள்ளுவ‌ர், க‌ம்ப‌ர் உள்ளிட்ட‌ சிற‌ந்த‌ த‌மிழ் புல‌வ‌ர்களை இகழ்வது,

    ப‌குத்த‌றிவு என்றாலே- இராச‌ இராச‌ன் , இராசேந்திர‌ சோழ‌ன் உள்ளிட்ட‌ சிற‌ந்த‌ த‌மிழ் பேர‌ர‌ச‌ர்க‌ளை வெறுப்பது,
    இராச‌ இராச‌ன் , இராசேந்திர‌ சோழ‌ன் உள்ளிட்ட‌ சிற‌ந்த‌ த‌மிழ் பேர‌ர‌ச‌ர்க‌ளை இகழ்வது

    ப‌குத்த‌றிவு என்றாலே – தன் சாதியினர் இல்லாத பிற சாதியினரை வெறுப்பது, தன் சாதியினர் இல்லாத பிற சாதியினரை இகழ்வது

    என‌வே ப‌ப‌குத்த‌றிவு என்றாலே – வெறுப்ப‌து, இக‌ழ்வ‌து, அத‌னால் ம‌க்க‌ளுக்கிடையே காழ்ப்புண‌ர்ச்சியை உருவாக்கி மோத‌ விடுவ‌து போன்ற‌ வ‌கையிலே த‌வ‌றாக‌ப் பிர‌ச்சார‌ம் செய்து உள்ள‌ன‌ர்.

    என‌வே ச‌ரியான‌ ப‌குத்த‌றிவை விளக்க வேண்டியுள்ளது.

  99. //தெளிவாக‌ இல்லாத”‌ என்ப‌து ச‌ரியான‌ க‌ருத்து இல்லை. தெளிவைத் தேடி செல்லுகிறேன். // தெளிவு இல்லாததால்தானே தேடி செல்கிறீர்.

    //நான் ராமனையும் ஆதரிப்ப‌து அவ‌ரின் கொள்கை, செய‌ல் பாடு ஆகிய‌வ‌ற்றுக்கு ஆக. // ராமனின் கொள்கை, செயல்பாடுகள் பற்றி இங்கு தெளிவாக பலர் விளக்கியுள்ளர்களே, இன்னும் ராமனை நீர் ஆதரிகிறீரா?

  100. //ram (08:43:32) :
    தம்பிங்களா! நான் கேட்ட கேள்விக்கு நேரடியா சுத்தாம பகுத்தறிவோட பதில் சொல்லுங்கப்பா. பத்தாயிரம் வருஷத்துக்கு முன்னாடி தமிழ்ன்னு ஒரு மொழி இருந்திச்சா இல்லையா. சர்டிபிகேட் வெச்சிருக்கீங்களா இல்லையா?//
    ram sir,
    பாரதியார் ”கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி” என்றார்.இவர்கள் பாரதியாரை பிராமணன் என்பதால் ஒதிக்கி வைக்கிறார்கள்.அதனால் உங்கள் கேள்விக்கு பாரதியாரைக் கூப்பிடமுடியவில்லை.எனக்கு தெரிந்தவரையில் மிகவும் பழமை வாய்ந்த நம் தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்திற்கு முதலிடம் உண்டு.அதிலும் சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. (ram sir உங்கள் நகைசுவை கேள்விக்கு என் நன்றி.)

  101. Dear Brother Robin,

    //ராமனின் கொள்கை, செயல்பாடுகள் பற்றி இங்கு தெளிவாக பலர் விளக்கியுள்ளர்களே, இன்னும் ராமனை நீர் ஆதரிகிறீரா?//

    அப்படி ஒன்றும் விளக்கியதாகத் தெரியவில்லை. நீங்களே தைரியமாக விளக்குங்கள்.

    இராமனே விமரிசனத்தை ஒத்துக் கொள்பவன் தான்.

    அத்தனை வசதிகளையும் விட்டு, கணவனின் துன்பத்தில் பங்கு எடுக்க காடு சென்ற சீதையின் ஒழுக்கத்தைக் குறை கூறி பேசிய ஒரு குடிமகனைக் கூட ஒன்றும் செய்யாமல் தன்னையும், தன் மனைவியையும் தண்டித்துக் கொண்டவன் இராமன், அதுவும் தான் ஆட்சியில் இருந்த போதே.

    எனவே நீங்கள் உங்கள் தரப்புக் கருத்துக்களை எடுத்து வைக்கலாம்.

    கொள்கையில், செயல் பாட்டில் என்ன தவறு என்று நீங்கள் விளக்குங்கள்.

    நானும் தெரிந்து கொள்கிறேன்.

    பிறகு தேவைப் பட்டால் ஆதரவை விளக்கிக் கொள்ளலாம்!

  102. Dear Brother Robin,

    //தெளிவாக‌ இல்லாத”‌ என்ப‌து ச‌ரியான‌ க‌ருத்து இல்லை. தெளிவைத் தேடி செல்லுகிறேன். // தெளிவு இல்லாததால்தானே தேடி செல்கிறீர்.

    அப்படியா , சரி,

    கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் கடவுளைக் கண்ணாரக் கண்டு, தெளிவாக உணர்ந்து சாட்சி கொடுக்கிறீர்கள்.

    நான் தான் டாஸ்மாக் கடையிலே இருந்து வந்ததால் கடவுளை தெளிவாகக் காணும் பேறு இல்லாமல் மயக்கத்தில் இருந்து விட்டேன்.

    இப்போது தெளிவைத் தேடி செல்கிறேன். சரியா? திருப்தியா?

    கடவுளுக்கு வெற்றியை வாங்கி கொடுத்து விட்டீர்களா?

    பிற விடயங்களை விவாதிக்கலாமா?

  103. திருடுவதையே தொழிலாகக்கொண்ட,எழுதப் படிக்கத் தெரியாத ஒருவன்( வால்மீகி), ராமரை தியானித்தால் உண்டான ஞானத்தால் உலகின் மிக சிறந்த இதிகாசத்தை உருவாகினான் .
    (வால்மீகி பிராமணன் அல்ல.ராமனும் பிராமணன் அல்ல.ராவணன் தான் பிராமணன்.)
    வால்மீகி ஒரு பிராமணன்,
    திருடன் இல்லை,
    எழுத,படிக்க தெரிந்தவன்,
    ராமரை தியானித்து ஞானம் பெறவில்லை
    என்று வைத்துக்கொண்டாலும் உலகில் இதுவரை இராமாயணம்,மகாபாரதம் போன்ற மிக சிறந்த இதிகாசங்கள் எழுதப் படவில்லை என்று உலக அறிஞர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.மில்டன் எழுதிய “பாரடைஸ் லாஸ்ட்” ம் கூட நம் இதிகாசங்களில் ஒப்பிடுகையில் கால் பங்கு கூட இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .
    இதிகாசங்கள் (பொய் என்றே வைத்துக்கொண்டாலும்) உருவாக்குவதற்கு அசாதாரமான ஆற்றலும் மிக சிறந்த நுண் அறிவும்,அவசியம் என்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
    உலகின் அனைத்து அறிவியல் கண்டுப் பிடிப்புகளும் ஆழ்ந்த ஆராய்ச்சியால்,சிந்தனையால் உருவானவை.அதை போல் தான் நம் இதிகாசங்களும்.
    தந்தை பெரியார் தான் 72 வயதில் 26 வயதுடைய பெண்ணை மணந்ததற்காக பெரியார் கொள்கைக்காரர்களும்,அண்ணா போன்ற தலைவர்களும் மனம் வருந்தினாலும் அவரது கொள்கைக்காக அவர் இன்னும் மதிக்கப்படுகிறார்.
    இதைப்போல
    நம் இதிகாசங்களில் உண்மை உள்ளதோ இல்லையோ அதனுடைய மாபெரும் படைப்பிற்க்காகவாவது அதை போற்றுவோம். அத்தகைய இதிகாசத்தை கொண்டவர்கள் நாம் என்பதில் பெருமை அடைவோம்.

  104. dhanabal சார்..

    //இதிகாசங்கள் (பொய் என்றே வைத்துக்கொண்டாலும்) உருவாக்குவதற்கு அசாதாரமான ஆற்றலும் மிக சிறந்த நுண் அறிவும்,அவசியம் என்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்//

    அந்த அறிவைப்பத்தியெல்லாம் இவங்களுக்கென்ன கவலை. படைக்றத விட விமர்சிக்றது ஈஸி தானே. அதுக்கு அறிவும் தேவையில்லை. வாய்க்கு வந்ததைச் சொல்லலாம். அதுக்கு நம்மூர்ல பகுத்தறிவுன்னு பேரு வேற. அதனால இவங்க அறிவு யோசிக்றதுக்கில்லை. விமர்சிக்கதான்.

    ///அத்தகைய இதிகாசத்தை கொண்டவர்கள் நாம் என்பதில் பெருமை அடைவோம்///

    கிழிச்சானுங்க. இந்தியாவே வோனாம் பாகப்பிரிவினை பன்னுங்கிற பிரிவினைவாதிங்க இவனுங்க. பெருமை பட்டுக்கப் போறானுங்களாக்கும். இவங்க மாதிரி ஆரம்பிக்கிறவங்கதேன் நக்சலைட்டுகளாவும் மாவோயிஸ்டாவும் ஆய்டராங்க. யாருக்கு தெரியும்.

    மதிமாறன் பேசுற பிரிவினை வாதத்தைப் பாக்கும் போது ஏதாவது துப்பாக்கிக்காரங்களோட தொடர்பிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. தேசிய பாதுகாப்பு சட்டத்துல வெச்சி இவனுங்கள முட்டிக்கு முட்டி தட்னா சரியா பூடும். அதுக்கெல்லாம் சைனாகாரன் தான் லாயக்கு.
    நம்மாளுங்க பேசிப்பேசியே நாட்டக் கெடுத்திர்வானுங்க.

  105. //யவக்ரீதன் கதை//

    Thanks for this story…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading