ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசைக் கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்

ந்திய குடியரசு நாளை விஷேசமாக அரசு ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் சென்னை சைதாப்பேட்டையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் செயலைக் கண்டித்து இன்று காலை 11.00 மணியளவில், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தங்களின் தோழமை அமைப்புகளோடு மிகப்பெருவாரியாக கலந்து கொண்டு ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர்.

cimg0901


cimg0876
cimg0875
cimg0879
cimg0874
cimg0873
cimg0871
collage1

31 thoughts on “ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசைக் கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்

  1. மதி,

    போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

    ஈழத்தமிழர்களுக்கு எதிராக உள்ள தமிழக அரசை ( இதுவரை ஒரு மயிரையும் புடுங்காத மாநில அரசும் மத்திய அரசில் அதிகாரத்தில் உள்ளது ) எதிர்த்து தான் நாம் முதலில் போராட வேண்டும் .

  2. கடந்த ஆண்டே ஒரு தீர்மாணம் எடுத்துவிட்டேன். இனி விடுதலை நாள், மற்றும் குடியரசு நாள் ஆகியவற்றுக்குத் தேசிய கொடி அணிவதில்லை என்றும், கொடிநாள் மற்றும் இந்திய தேசியத்தை வலியுறுத்தித் திரட்டப்படும் எந்த நிதிக்கும் (கொடி நாள் நிதி, போர் நிதி உள்பட) பணம் தருவதில்லை என்றும்.

  3. ஜெயகாந்தன் என்ற சமஸ்கிருத அடிமைக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் இப்பதிவை மீள்பதிவு செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

    http://mathimaran.wordpress.com/2008/03/12/articale-s/

  4. mathiyanna, iam viji fm tirupur,(prakash friend),
    eppadi thedeernu ethu,, season time managementa mkek vukku???? evulo naal ean perusa pannala?? JVP ANUMATHI kodukkalaya?
    Eppadi kekkurathunala manikkavum,,, innum niraiya matter erukkuthu…….

  5. ///////mathiyanna, iam viji fm tirupur,(prakash friend),
    eppadi thedeernu ethu,, season time managementa mkek vukku???? evulo naal ean perusa pannala?? JVP ANUMATHI kodukkalaya?
    Eppadi kekkurathunala manikkavum,,, innum niraiya matter erukkuthu…….////////

    நண்பர் விஜய் அவர்களே,

    1983 ஜூலைப் படுகொலைக்குப் பிறகிலிருந்து, குறிப்பாக பாசிச ராஜீவின் மரணத்தின் போது வீச்சான பிரச்சாரத்தில் இருந்தது எமது அமைப்புகள்.

    ராஜீவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, “ராஜீவ் ஒரு முறையல்ல பல முறை கொல்லப்படவேண்டியவன்” என்று துணிவாகப் பிரச்சாரம் செய்தது எமது அமைப்புகள்தான். புலிகளுக்கு ஆதரவாக ‘நட்சத்திர’ அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகள், தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் எல்லாம் எலிகளைப் போல் பொந்துகளில் புகுந்து கொண்டிருந்ததுவும் நிகழ்ந்தது. வேண்டுமானால் உங்கள் அண்ணன் மார்களைக் கேட்டுப் பார்க்கவும். “ராஜீவின் கொலைக்குக் காரணம் தமிழகத்திலிருக்கும் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் அமைப்புகளே….” என்று புலிகள் அமைப்பின் கிட்டு வாய்க்கூசாமல் பேசியதையும், அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் கடுமையான வழக்குப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    இன்றைக்கு புலிகளை சாகசவாதிகளாகச் சித்தரித்துப் பேசுவதுதான் சீசனாக இருக்கிறது. அந்த சீசன் அரசியலில்தான் அனைத்து புலியாதரவு அமைப்புகளும் பேசிவருகின்றனர். மகஇக இதுபோன்ற சீசனுக்கு எதிராக இயங்குவதுதான் வழக்கம். புலியரசியலுக்கு துதிபாடாமல் சிங்கள பேரிணவாதத்தைக் கண்டித்தால் புலிகளே அதனை ஏற்றுக் கொள்வதில்லை, நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

    ஈழத் தமிழரின் ஈரக்குலையை அறுத்து வரும் இந்திய-தமிழக ஓட்டுப் பொறுக்கிக் கும்பலையும் அவர்கள் நடத்துகின்ற அரசுகள் தொடர்ந்து இழைத்துவரும் கொடுமைகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வேலை செய்வதற்குத் திராணியில்லாமல் சிங்கள பேரினவாத அரசைக் கண்டிப்பதோடு தமது கண்டணங்களைக் கவனமாக முடித்துக் கொள்ளும் நாடகங்கள்தான் இங்கு நடைபெற்று வருகின்றன.

    திமுகவையோ கருணாநிதியையோ தனிமைப்படுத்தி வேலை செய்யாமல், ஈழ மக்களின் படுகொலைகளை “போர்க்களத்தில் இது சகஜம்..” என்று ஏளனம் செய்யும் பார்ப்பனிய பயங்கரவாதி ஜெயாவை அம்பலப்படுத்தி இயங்காமல், சிங்கள வெறியன் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதாக இங்கு நடத்தப்படும் அடையாள நிகழ்வுகளில் எங்களுக்கு உடன்பாடில்லை.

    தமிழினத்துக்குக் ஆதரவாகப் பேசினாலே பாய்ந்து பிடுங்கு மத்திய ஆட்சியாளர்களான காங்கிரசு கயவாளிகளைத் தமிழகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டிய முயற்சிகளைக் கையாளாமல், அவர்களுடனே வாய்ப்பு கிடைத்தால் கூட்டனி வைத்துப் பிழைத்துக் கொள்ளத் திட்டமிடும் சந்தர்ப்பவாதிகள், புலிகளை ஆதரித்துப் பேசுவதாலேயே புனிதமாகக் கருதப்படுவார்கள் போலும்!

    இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதைக் கண்டித்து சென்னை அண்ணாசாலையிலுள்ள ராணுவ தலைமையகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் மறியலும் செய்து திரளான தோழர்கள் கலந்து கொண்டார்கள். எமது போராட்டங்களையும் கள அரசியலையும் பற்றி அனைவரும் நன்கறிவார்கள். சீசனுக்குச் சீசன் இயங்க வேண்டிய அவல நிலையில் நாங்கள் இல்லை.

    ஜே.வி.பி.யைப் பற்றி எங்களுக்கு எழுதாதீர்கள். அதற்கு நீங்கள் அனுகவேண்டிய முகவரி சிபிஎம் கட்சியின் முகவரி. ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளை அழைத்து தமது மாநாட்டில் கவுரவப்படுத்தியது அவர்களே!

    மகஇகவின் மூலம் எங்கேயோ, எதற்காகவோ விமர்சிக்கப்பட்ட வலியும் குழப்பமுமே உங்களது வரிகளில் தெரிகிறது. உங்களுக்காக எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  6. ஈழத்தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறது சிங்கள அரசு. அதற்கு ராணுவ தொழில்நுட்ப உதவி & ஆயுத சப்ளை செய்யும் இந்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்டால், நெஞ்சு வலி, முதுகு வலி என்று ஆஸ்பத்திரியில் பம்முகின்றனர் பிரதமரும், முதல்வரும்.

  7. ///////mathiyanna, iam viji fm tirupur,(prakash friend),
    eppadi thedeernu ethu,, season time managementa mkek vukku???? evulo naal ean perusa pannala?? JVP ANUMATHI kodukkalaya?
    Eppadi kekkurathunala manikkavum,,, innum niraiya matter erukkuthu…….////////

    நண்பர் விஜய் அவர்களே…… ……… …
    ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

    இந்த விசயத்தில் மட்டும் நம்ம சண்டையை ஒதுக்கி வைக்கவும்

  8. நேற்று தொலைக்காட்சிகளில் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தேன்.
    முழக்கங்கள் சரியாக இருக்கின்றன. மருதையன் சன் நியூஸ்-ல் இந்திய தரகு முதலாளிகளின் நலன்கள் குறித்து தான் இந்தியாவிற்கு கவலை! ஈழத்தமிழர்கள் குறித்து இவர்கள் ஏன் அக்கறைப்பட போகிறார்கள் என்றார். உண்மை தான்.

    இன்னமும் ஈழத்திற்கு ஏதாவது செய்யும் என இந்தியாவை அப்பாவித்தனமாய் நம்பினால் நாம் தான் அப்பாவிகள்!

    “ஈழத்திலே அடிக்கடி மூக்க நுழைக்கிற!
    ராஜீவ் காந்தி குப்பற கிடந்தத மறநது போகிற!”

    என பாடல் கூட பாடினார்களேமே! கலந்து கொண்ட ஒரு நண்பர் சொன்னார். நல்ல வரிகள்.

  9. தோழர்களுக்கு செவ்வணக்கங்கள்!
    ———————————–

    வந்தே வந்தே மாதரம்
    மந்தை மந்தையா சாகறோம்!
    வந்தே வந்தே மாதரம்
    வெந்து வெந்தே சாகறோம்!

    – ம.க.இ.க, புரட்சிகர கலை நிகழ்ச்சி பாடலில் இருந்து….

  10. தோழர்களுக்கு செவ்வணக்கங்கள்!
    ———————————–

    வந்தே வந்தே மாதரம்
    மந்தை மந்தையா சாகறோம்!
    வந்தே வந்தே மாதரம்
    வெந்து வெந்தே சாகறோம்!

    – ம.க.இ.க, புரட்சிகர கலை நிகழ்ச்சி பாடலில் இருந்து….

  11. வணக்கம் மதிமாறன் எப்ப இருந்து நீங்க ஈழத்துரோகி சிங்களக்கைக்கூலி பி.இராயகரன் பணத்துக்கு கூலி வேலை செய்யும் CPI-ML-SOC பக்கம் போனீங்க. நண்பர் விஜய் அவர்களே கூட இருந்து குழிபறிப்பதுதான் இராயகரன் குழுவினரது வேலை.

    இராயகரன் சொல்லியிருப்பாரு வாங்குன பணத்துக்கு ஈழ ஆதரவாளர்கள் கூட சேர்ந்து ஈழ ஆதரவ கெடுக்கப்பாருங்கனு சொல்லியிருப்பார்.

    அதான் அய்யாங்கார் திடீர்னு இப்படி இறங்கிட்டார்.

    CPI-ML-SOC போலி கலை இலக்கியம் பேசும் போலி மார்க்சியம் பேசும் அய்யங்கார் குழுவினர் சிங்கள அரசிடமிருந்து பிராயகரன் தரகராக இருந்து இவர்களோடு சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதை உலகத்தமிழர்களும் அனைத்து உண்மையான தமிழ் ஊடகங்களும் புரிந்துகொண்டதால்தான் எந்த ஒரு இணையதளத்திலும் இவர்கள் செய்தி வரவில்லை.

  12. நம்ம நண்பர் மதிமாறனும் என்றுமில்லாமல் இப்பொழுது நிழற்படங்களானது எங்கும் தவறிகூட வெளியே போகக்கூடாதுனு படத்தின் மேல் அவரது வலைப்பூவின் பெயரை அச்சடித்துவுள்ளார்.

    பாராட்டுக்கள் மதிமாறன் அவர்களே.

  13. நண்பர் ஆழிக் கரையான் அவர்களே!

    புலியெதிர்ப்பு பேசினாலே ஈழத் துரோகிகள்தான். ஈழமக்கள் மீது கொலைவெறியாட்டத்தை ஏவிவிட்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தையும், அதற்கு நேரடியாக உதவி செய்துவரும் இந்திய மேலாதிக்க அரசையும், அதனைத் துணிவோடு தட்டிக் கேட்கத் திராணியற்று போலிவேடம் போட்டு கூவிவரும் இந்திய ஓட்டுப் பொறுக்கிகளையும் எவ்வளவு விமர்சித்தாலும், அவையெல்லாம் ஈழ மக்களுக்கு செய்யும் துரோகமாகும். காசு வாங்கிக் கொண்டு பி.ரயாகரனின் வழிகாட்டுதலோடு செய்யும் கைக்கூலி வேலையாகும்.

    சிங்கள இனவெறி அரசிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்ற அவதரித்த புலிகள் சொந்த மக்களையே வேட்டையாடியபோதும், சக போரளிக் குழுக்களை பாசிச இந்திரா-எம்.ஜி.ஆர். போன்றவர்களின் உதவியோடு அழித்தொழித்த போதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சுமூக உறவை நாடி நின்ற பொழுதும், தனி ஈழம் வேண்டாம் சில மாகானங்களையாவது பிரித்துத் தாருங்கள் என்று நார்வேயின் மூலம் பேரினவாதத்தின் முன் சரணாகதியடைந்ததையும் சகித்துக் கொண்டு இன்று வரை, இதோ இப்போது வரை புலியாதரவு பேசிவரும் நீங்கள் யாருக்கு கைக்கூலி வேலை செய்கிறீர்கள்? யாரிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்ப என்னாலும் முடியும்.

    இருப்பினும் இது அதற்கான தருணமல்ல. உண்மையான கைக்கூலிகள் தமிழகத்தில் மைக் கிடைக்கின்ற மேடைகளிலெல்லாம் ஏறி கூவிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கே இணையத்தில் சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறோம்.

    பார்ப்பன பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசிபெற்ற பழ.நெடுமாறன் போன்றவர்கள், பெரியாரை “பெண் பித்தன்” என்று விமர்சித்தவர்களெல்லாம் புலியாதரவு பேசிவிட்டதனால் நீங்கள் அவர்களைப் புனிதர்களாக்கிவிடுவீர்கள் போலும்! இதுதான் உங்களது உச்ச பட்ச பகுத்தறிவு போலும்!

    உங்களுடைய மதிப்பீட்டில் நாங்கள் தவறாகத் தெரிந்தால் தவறு எமது பக்கம் இல்லை, உங்கள் பக்கம்தான் என்பதனை எடுத்துக் காடுவதற்கான சிறிய முயற்சியே உமக்கான எனது இந்த பதில். இதனை நீங்கள் நேர்மையாகப் பரிசீலிப்பவராகவும் தெரியவில்லை. அப்படியிருந்திருந்தால், இங்கே வந்து முழங்கிக் கொண்டிருப்பதற்கு பதில் தோழர் இரயாகரனின் தளத்தில் வெளியிடப் ப்டுகின்ற பதிவுகளில் சென்று நீங்கள் நேர்மையாக விவாதித்திருப்பீர்கள்.

    இரயாகரன் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருப்பின் அவரது தளத்தில் நேரடியாகத் தெரிவிக்கலாம். உங்களுக்கு யாரும் விலங்கு போட்டு கட்டிவைக்கவில்லை.

    நட்புடன்,
    ஏகலைவன்.

  14. ஆழிக்கரையான்,
    உங்களுக்கு ரொம்ப அறிவு முத்திப்போச்சு ,,

    பத்திரிக்கையில செய்தி வராததுக்கு காரணம் பத்திரிக்கைகளோட உன்மையான ஈழப்பற்றுதான் காரணமா/ நினைத்தாலே புல்லரிக்குது போங்க,உங்க மாதிரி பூச்சாண்டிங்க தோல உரிக்க ரொம்ப நேரம் ஆகாது.

    ஈழமக்களின் விடுதலைக்கு எதிராய் போகும் என்பதாலேயே கொஞ்சம் அமைதியாய் இருக்கிறோம்,
    நீங்க தொடர்ந்தா நாங்களும் ரெடி.

    கலகம்

  15. சரி CPI-ML-SOC மக இகவினரே

    ஈழத்திற்கு உங்கள் தீர்வுதான் என்ன ?

    சுயநிர்ணய உரிமையா? அல்லது …………..?

    உங்களுக்கு தீண்டத்தகாத வார்த்தையாக இருக்கும் தோழர் இலெனின் கூறிய தேசிய இனவிடுதலையா?

    ஈழத்தமிழருக்கான நிரந்தர தீர்வுக்கான உங்கள் திட்டம் என்ன புனிதமான(!!!?) SOC மக இக வினரே…

    ( மார்க்சியத்துல எப்படி புனிதம் வந்துச்சுனு எனக்கு தெரியலை .CPI-ML-SOC மக இக கட்சி திட்டத்துல இருக்குங்கிற உண்மையா நான் சொல்லமாட்டேனுங்க )

    சரி சரி குழப்பவாதிகள்கிட்ட பேசி ஒரு பலனும் இல்லை. நான் கேட்டதற்கு என்ன ஆனாலும் நீங்கள் பதில் தரமாட்டீர்கள்.

    கலகம் அவர்களே எனக்கு அறிவு முத்தி போகலை.

    எனக்கு அறிவே இல்லை. அதான் உங்ககிட்ட பேசுறேன். இருந்த கொஞ்சம் நஞ்சம் அறிவ மேலே கொட்டிட்டேன். அறிவு தீர்ந்துகிட்டே இருக்கு.

  16. பேரினவாதத்தை கண்டித்து பஞ்சகச்சத்தை இறுக்கிக் கொண்டு, குரல் கொடுக்கும் SOC ஈழக்கொடுரத்திற்கு மாற்றாக எதை முன் வைக்கிறார்?

    புலிகள் தமிழர்களையே கொலை செய்தவர்கள் என்ற புளித்த மாவையே அரைக்க வேண்டாம். இது தான் “அழித்தொழிப்பை” பேச மட்டுமே செய்யும் நக்சல்பாரி பார்வையா?

  17. //ஈழமக்களின் விடுதலைக்கு எதிராய் போகும் என்பதாலேயே கொஞ்சம் அமைதியாய் இருக்கிறோம்,//

    இது என்னனு எனக்கு விளங்கலைங்னா?

    இதை படிக்கிறவங்களுக்காவது புரிந்தால் எனக்கு விளக்கிசொல்லுங்க. எனக்கு அறிவு வேற இல்லைங்னா.

  18. //பார்ப்பன பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆசிபெற்ற பழ.நெடுமாறன் போன்றவர்கள்,//

    உண்மையிலேயா ?? தயவு செய்து விளக்கவும்.

    // பெரியாரை “பெண் பித்தன்” என்று விமர்சித்தவர்களெல்லாம் //

    யார் அவ்வாறு சொன்னது என்று தெரிந்து கொள்ள ஆவல் .

  19. நண்பர் ஆழிக்கரையான் அவர்களே!

    உங்களிடமிருந்து நேர்மையான பதில் ஏதும் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தோழர் கலகம் இங்கே குறிப்பிட்டுள்ள விமர்சனத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே உமது வசைபாடல்கள் தொடருகிறது.

    ஏகலைவன் என்ற எனக்கும் ஆழிக்கரையான் என்ற உங்களுக்கும் இடையே நடைபெறும் இந்த கருத்து மோதலில் பதியப்படும் கருத்துக்களுக்கு முறையாக பதில்களைத் தந்தால் உங்களுக்கு புன்னியமாப் போகுமய்யா. ஒற்றைவரியில் நேர்மையாக ஏதாவது பதில் சொல்லிவிட்டு பத்துவரியில் எம்மை வசைபாடிக்கொள்ளுங்கள் தாராளமாக, பரவாயில்லை.

    எமது அமைப்பின் பெயரை மீண்டும் மீண்டும் பதிப்பிக்கும் ஆர்வம் உங்களிடத்தில் கொப்பளித்து எழுவதை நான் பார்க்கிறேன். பாராட்டுக்கள்! அதைப் போல், இது கருத்துக்களைத் தாண்டிய அமைப்புகளின் பின்னனியில் விவாதிக்க வேண்டியது என்பதையும் உமது அந்த ‘ஆர்வம்’ வலியுறுத்துவதாக அறிகிறேன். அப்படியானால், குறைந்த பட்ச நேர்மையோடு நீங்கள் சார்ந்திருக்கிற அமைப்பு எதுவென்று அறிவித்துவிட்டு எமது அமைப்பின் பெயரைச் சுட்டிக்காட்டி பேசிப்பாருங்களேன், பார்க்கலாம்.

    போதாக்குறைக்கு கரிகாலன் என்கிற பக்கவாத்தியத்தையும் சேர்ந்து வாசிக்கக் கூட்டிவந்திருக்கிறீர்கள். நீங்கள் அல்ல உங்கப்பனுக்கு அப்பனுங்க சொன்ன ‘பார்பப்ன தலைமை’ங்கற வசனத்த அப்படியே இன்னும் புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்கீங்க. ஆனால், மேலே நான் பதிந்திருந்த “பெரியாரைப் பெண்பித்தன் என்று கீழ்மை படுத்திய கும்பலோடு கூடிக் குலாவும் உமது தன்மைக்குப் பெயர் தான் பகுத்தறிவா” என்கிற சிறிய கேள்வி உங்கள் பேரறிவின் கண்களுக்கு எட்டாமலேயே கிடக்கிறது கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்!

    பார்ப்பனியம் என்பது வெறும் பிறப்பைக் கொண்டு அடையாளப்படுத்துவது என்று நீங்கள் கருதுவீர்களானால் நீங்கள் அங்கம் வகிக்க வேண்டிய முகவரி பார்ப்பன-இந்துவெறி-ஆர்.எஸ்.எஸ்., அல்லது இந்து முன்னணிகள்தான். அல்லது எமது செயல்பாடுகளில் பார்ப்பனியக் கண்ணோட்டத்தை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள் உங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.

    உங்களுடைய வெட்டி புலம்பல்களுக்கெல்லாம் அதிகபட்ச முக்கியத்துவம் கொடுத்துதான் இங்கே பதில்களைப் பதிந்து கொண்டிருக்கிறேன். நேர்மையாக விவாதிக்க முடிந்தால் தொடருங்கள். எனது தவறுகளையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்குப் பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் வசைபாடிக்கொள்ளுங்கள்.

    நன்றி!

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  20. புரியவில்லையா,
    செத்து கொண்டிருக்கும் மக்களை பற்றி அவர்களின் விடுதலையினை பற்றி பேசுவதை விட்டு இப்படி வசை பாடிக்கொண்டிருப்பது, பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு அவல் போன்றதாகும்,பார்ப்பன பனியாக்களோ இதை செய்தியாக்கி விடுவார்கள்

  21. //ஏகலைவன் என்ற எனக்கும் ஆழிக்கரையான் என்ற உங்களுக்கும் இடையே நடைபெறும் இந்த கருத்து மோதலில் பதியப்படும் கருத்துக்களுக்கு முறையாக பதில்களைத் தந்தால் உங்களுக்கு புன்னியமாப் போகுமய்யா.//

    புண்ணியம் ???!!!! பொறுத்தருளவும் புன்னியம். தமிழ் நீச பாஷை அல்லவா உங்களுக்கு. அதான் இப்படி.

    சரி சரி நானும் புனிதம் , புண்ணியம் என்ற வார்த்தைகள் மார்க்சியத்துல எங்கே இருக்குனு தேடிப்பார்க்கிறேன் கிடைக்கலை.

    தரகு பார்ப்பனியத்தினர்கிட்ட இதை கேட்டால் ஒரு பதிலும் இருக்காதுனு தெரியும் CPI(ML)-SOC யினரே.

    கேட்டால் நாங்கள் இந்திய அளவிலான பேரமைப்புனு சொல்லுறீங்க ஆனால் அது எப்படினு எனக்கு புரியலை. செயல்பாடு எப்படினு விளங்கலை. திடீர்னு உள்ள புகுந்து நாங்கதான் எல்லாம் பண்ணுனோம்னு சொல்லுவீங்க.

    இடஒதுக்கீடு கூடாதுனு மாநாடு போட்டீங்க திடீர்னு பார்த்தா நாங்கதான் இடஒதுக்கீட்டுக்காக போராடுனோம்னு சொல்லுரீங்க. என்னமோ போங்க பாமர மக்களாகிய எங்ககிட்ட நல்லா வேடம் போடுறீங்க.

    நான் ஏதாவது கட்சியில , இயக்கத்துல இருந்தாதான் நீங்க என்கூட பேசுவீங்களா? மற்றபடி பாமர மக்களாகிய எங்ககிட்ட உண்மைய பேச மாட்டீங்களா ?

    பாமர மக்களாகிய நாங்களாம் உங்களுக்கு தீண்டத்தகாதவர்கள்தானே.

    சரி அப்படியே நான் ஒரு கட்சியா இருந்து கட்சி பேரை சொன்னால் மட்டும் நீங்கள் பேசிடவா போறீங்க. இல்லை உங்கள் கட்சி COMMUNIST PARTY OF INDIA – (MARXIST LENINIST)- STATE ORGANISATION COMMITTEE என்ற உண்மைய ஒத்துக்கதான் போறீங்களா?

    அவர் மோசம் இவர் மோசம் . அவர் டைப் ரைட்டர் மெசின தூக்கிட்டு போய்ட்டாரு , இவர் முதலாளித்துவவாதி அவர் தேசத்துரோகி அவர் அமெரிக்கக்கூலி னு சொல்லுவீங்க.

    என்ன தீர்வு என்று இதுவரைக்கும் நீங்க சொன்னதா எனக்கு தெரியலை SOC யினரே.

    பி.இராயகரன் எப்படியோ அப்படித்தானே நீங்களும்.

    சரி சரி ஏகலைவன் உங்க நாடகத்த வேற எதிலாவது காட்டுங்க. நாடகமேடை soc ம.க.இ.க. என்பது அனைவருக்கும் தெரியும்.

  22. I fyou continue supporting the LTTE which is a banned Terrorist group, this webpage will be recommanded for deletion under the “copyright” rules. If you want to support such an organization i recommand you to start a new website. your wesite promotes Anti Governmet , Anti – Scoial ideas .

  23. If you continue supporting the LTTE which is a banned Terrorist group, this webpage will be recommanded for deletion under the “copyright” rules. If you want to support such an organization i recommand you to start a new website. your wesite promotes Anti Governmet , Anti – Scoial ideas .

  24. Hello Mr. Indian,

    //deletion under the “copyright” rules//

    உங்க அறிவ நெனெச்சா புல்லரிக்குது . நல்ல வேலை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் இத அழிப்போம்னு சொல்லாம போய்டீங்களே !!

  25. jp,

    Unkal Tamil Pattra nalla vithama use paanunka, mathimaran ikku jaldra thata thergal, avar than vella vetti illam oor vambu pesurar, mathavanga ellariyam kurai sollura neenga enna seithergal intha naatku, unkal mathiri atakkala than nndau vennaga pokirathu college padikkira ennaku irrukira socail responsiblity kuda unkalluku illaya, athu “Copyrights” illa ” Terms and Conditions” , ungala enth satha vachhum thiruthh vee mudiyath, jaldra koshtikal. this blog is vandalising indian central Govt it is punishable under Indian Cyder law , neenga ellam enna law padaichengaloo !

  26. மதிமாறன் அவர்கள் மகஇகவின் கொ.ப.செவாக மாறியதற்கு என் வாழ்த்துகள் அவர்கள் நடத்திய பஜனைக்கு அதான் அவா மாநாட்டுக்கு வந்து பஸ் கிடைக்காம இருந்தவங்கள வைத்து அவா நடத்திய புலிஆதரவு ஆர்ப்பாட்டத்தை வலச்சி வளச்சி புகப்படம் போட்டு சும்மா அசத்திட்டிங்கபோங்க வாழ்க உங்கள் மகஇக தொண்டுகள் வளர்க போலி கம்யூனிஸ்ட்கள்.

    (வருந்துகிறேன் இப்படி பின்னுட்டம் போட உங்கள் மீதும் உங்கள் எழுத்துகள் மீது எனக்கு இருந்த காதல் குறைந்துவிட்டது. ஆனால் இன்னும் … இருக்கிறது.)

  27. தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!………………………………………..
    அன்பரசு, விஜய், போங்கடா, ஆழிக்கரையான், கரிகாலன் உள்ளிட்ட தமிழினவாதிகளே!!!!!
    http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/
    இங்க வச்சுக்கலாம் கச்சேரிய…!!!!
    சீக்கிரம் வாங்க!!

  28. முன்குறிப்பு;
    பார்ப்பான்னு சொன்னா சாமி கண்ண குத்திடுமின்னு பயந்துகிட்டு ஓடிப்போன சீபீஎம் விடுதலை, சந்திப்பு வகையறாங்களும் வரலாம்… சீபீஎம்முக்கு அனுமதி இலவசமோ இலவசம்!

    பின்குறிப்பு
    தயவு செய்து பச்சை சட்டை போட்டுக்கொண்டு வரவும். ஜெயலலதிதா இந்த பக்கமா வாகிங் போறாங்களாம்.

  29. ஈழத் தமிழன் பெயரையும் புலிகள் பெயரையும் சொல்லிக்கொண்டு சினிமா காரனுக்கும் அரசியல்வாதிக்கும், மில் ஓனருக்கும் சொம்பு தூக்கும் தமிழினவாதிகளே உங்கள் வருத்தம் புரிகின்றது….முத்துக்குமார் செத்த மேட்டர வச்சு மாணவரகள தூண்டிவிட்டு, ஒப்பாரிவச்சு கூட்டம் போட்டு கலெக்ஷன் பாக்கலாம்னு நீங்க நெனச்ச வேளையில இந்த ம.க.இ.க காரன் உள்ளார பூந்து சரியான அரசியல் பாதையில் மாணவர்களை கொண்டு போயிட்டானேன்னு நீங்க வெக்ஸ்ஆகி இருப்பது புரியுதுமா ஆனா இன்னா செய்யறது இன்றைய தமிழக இளைஞர்கள் உங்க செல்லரிச்சு போன அரதப் பழசான தத்துவத்துக்கு வர மாட்டாங்கம்மா ஏன்னா இந்த உலகமய கால கட்டத்துல அவங்க வாழறதே ஒரு சர்வதேசிய வாழ்க்கை அதுல உங்க இனவாத்ததுக்கு இடமே இல்லை. இன்னிக்கு வால்ஸ்டிரீட் கிரேஷ் ஆச்சுன்னா வால்டாக்ஸ் ரோடுல வேல போவது இந்த நேரத்துல நீங்க போயி தனிதமிழ்நாடு வந்தா நம்ம பிரச்சனையெல்லாம் தீந்துடூமின்னு போசுனா அவன் வாயால சிரிக்கமாட்டான்!
    அடுத்த பரச்சனை ஈழத்தை பற்றியது… ம.க.இ.க காரங்க ஒரு பொது முழக்கத்துக்கு கீழ தமிழகம் பூரா ஆர்பாட்டம்/ மறியல் நடத்தராங்க இங்க வந்து வக்கன பேசும் விஜய் மற்றும் பேரில்லா பிச்சையான போங்கடா போன்ற கேசுகளெல்லாம் எத்தன போராட்டம் நடத்துனீங்க, எங்க எத்தன பேர் கைதானீங்க போன்ற விவரங்களை சொல்லுங்க. ஜனங்க ரெண்டையும் கம்பேர் செஞ்சு பாத்துகட்டும். அத உட்டுட்டு பொலம்பறது, திட்டறது, கிண்டலடிகிறது போன்ற வேலைகளில் இறங்கினால் அம்பலப்படப் போவதென்னவோ நீங்கதான்.
    ஏன்னா கூச்சல் போடறது, அப்புறம் கலைஞரே தமிழின காவலரேன்னு கூஜா தூக்கறதுன்னு உங்க அரசியல் நடவடிக்கை முடிஞ்சு போச்சு. இன்னிக்கு முத்துக்குமார் சாவலன்னா நீங்க இன்னமும் கலைஞர் காலடியிலதானே கிடந்திருப்பீங்க. இப்ப அடுத்த தமிழன காவலருக்காக நீங்க வெயிட்டிங். ஏன்னா கூச்சலும் கூஜாவும்தான் உங்களுக்கு தெறிந்த அரசியல். அத வச்சு நீங்க இதுவரைக்கும் ஈழத்துக்காக சாதித்த்தை பட்டியல் போட முடியுமா?
    ம.க.இ.க புலிகள ஆதரிக்கல அதனால அவங்க தமிழர்களுக்கு எதிரின்னு நீங்க கூச்ச்ல் போடுறீங்க, சரி. புலிகள்=தமிழர்கள் அப்பிடீங்கறீங்க, சரி, ஈழ விடுதலை உங்க சொத்து மாதிரியும் ம.க.இ.க காரன் அத திருடிட்ட மாதிரியும் பேசுரீங்க சரி அப்ப உங்களுக்கும் உங்க தலைவர்களும் இங்க என்ன வேலை. போங்க வன்னிக்கு, ஆளுக்கு நாலு டஜன் சிப்பாய சுட்டு விடுதலையை வாங்க வேண்டியதுதானே. சீரியஸா கேக்குறேன்…..

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading