எனது புத்தகங்கள்

காதலாகி கடுப்பாகி

-வே.மதிமாறன்

book1.jpg

மதம்-ஜாதி எப்படி உண்மையில்லையோ, உண்மையில்லாத செய்திகளை உள்ளடக்கிய மனிதர்களை உயர்ந்தவர்கள்-தாழ்ந்தவர்கள் என்று பிரிப்பது எந்த அளவுக்கு மோசடியானதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாதது, அறிவாளி-முட்டாள்பேதம்.

அறிவாளிக்கான இலக்கணம் என்ன?

அறிவென்பது என்ன?

நிறையப் படிப்பதா?

பங்கு மார்க்கெட், ஹவாலா இன்னும் தனியார், அரசு நிறுவனங்களில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பரவிக் கிடக்கும் ஊழல்களுக்கு யார் பொறுப்பு?

புள்ளிவிவரங்களைத் தெரிந்துவைத்திருப்பதா?

அப்படியானால் இயந்திரங்களே மனிதனை விட மகத்தான அறிவு படைத்ததா?

புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பதா?

அப்படியானால் ஒரு நெல்லை நூறு நெல்லாக மாற்றியவன் யார்?

விஞ்ஞானம் என்பது என்ன?

குடுவைகளோடு மட்டும் குடித்தனம் நடத்துவதா?

அவர் மட்டும்தான் அறிவாளி என்றால், கால் செருப்புகளைக் கண்டுபிடித்தவன் விஞ்ஞானி அல்லாமல் வேறுயார்?

துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், அணு உலைகளையும், அணுகுண்டுகளையும் கண்டுபிடித்து அழிவுக்கு வழிவகுத்தவர்களை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவனில்லையா நூறு நெல்லாக மாற்றுபவனும், காலணிகளைத் தைப்பவனும்.

***

பாரதிய ஜனதா பார்ட்டி

-வே.மதிமாறன்

book2.jpg

பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.

காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச பெரியவாளெல்லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னுசொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.

***

பாரதிய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்

பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு

-கி.பார்த்திபராஜா

தம்பி நான் ஏது செய்வேணடா?

பாரதி பற்றி பாரதிபுத்திரன்

இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்

-ந.இரவீந்திரன்

***

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

-மருதையன்

-வே.மதிமாறன்

book3.jpg

பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.

பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லைஎன்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்என்று நிராகரிக்கவும் செய்தார்.

பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லைஎன்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

-மருதையன்

மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

-வே.மதிமாறன்

***

வே. மதிமாறன் பதில்கள்

…..அதற்கு விழிப்புணர்வு ஆசிரியர், காமராஜ், “கேள்வி பதில் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அதை நீங்களே எழுதுங்கள்” என்றார்.

“நான் எழுதுவதை விட, மிக பிரபலமான எழுத்தாளர்கள் யாரையாவது எழுத வையுங்கள். அது பத்திரிகைக்கு விளம்பரமாகும்” என்றேன். ஆனால் அவர் என்னையே எழுதும்படிக் கட்டாயப்படுத்தினார்.

‘சோ, சுஜாதா, மதன், சுந்தர ராமசாமி, ஞாநி’ இவர்களாலேயே கேள்விகளுக்குப் பதில்கள் எழுதமுடியும்போது, என்னால் முடியாதா என்ன?’ என்று துணிந்து ஒத்துக் கொண்டேன். ‘விழிப்புணர்’வில் ஆரம்பித்து ‘சமூக விழிப்புணர்வு’ வரை மொத்தம் ஆறு இதழ்களில் பதில்கள் எழுதினேன்.

என் பதில்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மாரக்ஸ், பெரியார், அம்பேத்கர் பற்றியும் கலை, இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த ஞானம் உடையவர்களில் இருந்து இவைகள் பற்றி எதுவும் தெரியாத நபர்கள் வரை பதில்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

அந்த கவனம் – பாராட்டுதலாக, கோபமாக, எரிச்சலாக, பொறாமையாக பல்வேறு வடிவங்களில் `அவதாரம்` எடுத்தது.

நமது பதில்களின் தாக்கத்தால், ‘பத்தவைச்சிட்டியே பரட்ட’ என்கிற பாணியில் புதிதாக சில பத்திரிகைகளிளும் ‘கேள்வி பதில்’ பகுதியைத் துவங்கின.

சில எழுத்தாளர்களும் ஆர்வ மிகுதியால் நமது பாணியை பின்பற்றி, கேள்விக்கு பதில்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வாழ்த்துகள். இப்படி ஒரு அலையை உருவாக்கியதற்காகக் தோழர் கு. காமராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்.

முன்னுரையில் வே. மதிமாறன்…

பக்கங்கள் 88. விலை ரூ. 35.

அங்குசம் வெளியீடு

*****

ambedkar-wrapper6

நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை

-வே. மதிமாறன்

விலை ரூ. 45

டாக்டர் அம்பேத்கரின் இந்துமத, பார்ப்பனிய எதிர்ப்பு வீச்சின் விஸ்வரூபம்.

நூலிலிருந்து…..

ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே.

******

mr-radha-wrapper2

பெரியாரின் பூ மாலையும் போர்வாளும்

-வே. மதிமாறன்

விலை ரூ. 15

பெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு.

எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம்

நூலிலிருந்து…..

பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.

ஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.

*****

cd1வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்

விலை: 35

தமிழேந்தி

விடுதலை ராசேந்திரன்

பெரியார்தாசன்

கௌத்தூர் மணி

மருதையன்

இவர்கள் பேசிய பேச்சுகள் அடங்கிய எம்.பி 3

தொடர்புக்கு;

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

6 பதில்கள்

3 12 2007
N Suresh

dear mr. mathimaran,

thank you for forwarding your writings. i would like to buy your books. please advice.

nsuresh
nsureshchennai@gmail.com

24 01 2008
குமரன்தாஸ்

ஜனவரி 2008 புதிய கலாச்சாரம் இதழில் தங்களது கட்டுரையை வாசித்தேன்…
வாஸந்தியின் பார்ப்பன திமிருக்கு சரியான எதிர்வினை…
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பார்ப்பணர்களுக்கும் பாரதீய ஜனதாவிற்கும் என்ன நிலைபாடு இருக்கிறதோ அதற்கு இணையான
கருத்தை சில தமிழ் தேசிய வாதிகளும் கொண்டிருக்கிறார்கள் (காண்க மண்ண்மொழி).

அதுபோல ராமன், பெருமாள் போன்றவர்கள் தமிழ் கடவுள் என மணி அரசன் கூறுகிறார் (தமிழர் கண்ணோட்டம்). இன்றைக்கு தமிழ்துவம் இந்துதுவமாகவே இருக்கிறது…

இதுபற்றியும் எழுதுங்களேன்…

- குமரன்தாஸ்

21 05 2008
மகிழ்நன்

தோழரே!

நான் பெரியார் தொண்டன்(நன்றியோடு).
தங்கள் எழுத்து மிக வீரியத்தோடு இருக்கிறது.
தங்கள் நூல்களை வாங்க ஆவலாக உள்ளேன், தகவல் தெரிவிக்கவும்.

அதேபோல என் வலைப்பூவுக்கு தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.
வாய்ப்பு இருந்தால், தங்கள் தொலைபேசி எண்ணை தந்து உதவவும்.

நன்றி
மகிழ்நன்.
9892738667.

23 05 2008
மகிழ்நன்

தோழர் மதிமாறன் தங்களின் மேலான் கருத்துக்களை இந்த குழுமத்தில் விவாத்தில் வைக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=8383044&tid=5201147353349304961&na=3&nst=304&nid=8383044-5201147353349304961-5203082609765606618

2 08 2008
panneer selvam

ovaoru tamilanum paddikavendum

8 07 2009
Rico

How to get your books.
Thanks

மறுமொழியவும்