கனிமொழி சிறைக்கு போவதற்கு முன், தன் தாயுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றபோது சாமி கும்பிட மறுத்ததினால்தான் இவ்வளவு சிக்கல்களுக்கு உள்ளானார்?
-கரு. இராமநாதன்.
இது என்ன புது புரளியா இருக்கு..!
கனிமொழிக்காவது பராவாயில்லை,
சில நாட்களுக்குமுன் செய்திதாளில் ஒரு தொழில் அதிபர், ’திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று தன் வேண்டுதலை மொட்டையடித்து நிறைவேற்றிவிட்டு திரும்பியபோது, விபத்தில் குடும்பத்தோடு பலியானார்.’ என்று படித்த ஞாபகம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் சுனாமி வந்தபோது, வேளங்கண்ணி கோயிலில், நீண்டகால ஆயுளுக்காக வேண்டுதலில் இருந்தவர்கள், சுவற்றில் மோதி சிதறிய பரிதாபம், மெக்காவில் நெரிசலிலும், தீ விபத்திலும் மாண்ட கொடூரம்..
இதையெல்லாம் பாக்கும்போது, ஆண்டவன் தன்னை நம்பாதவங்களைத்தான் சோதிக்கிறான்; நம்புறவங்களை கை விட்டுருவான் போல.
தொடர்புடயைவை:
‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

