சந்திரபாபு, பின்லேடன், ஜாதியா? வர்க்கமா? விக்ரம்,கே.வி. மகாதேவன்

14 11 2011

வர்க்க உணர்வு, ஜாதி உணர்வு எது தமிழர்களிடம் அதிகம் இருக்கிறது?

-கே. அப்துல் காதர், கோவை.

இரண்டும் பின்னிபிணைந்துதான் இருக்கிறது.

ஒருவர் மிகவும் ஏழ்மையில், குடிசைப் பகுதியிலிருந்து படித்து உயர் வருவாய் உள்ளவராக மாறினால், அவர் குடிசைப் பகுதியிலிருந்து விலகி, தன்னைப்போலவே அதிக வருவாய் உள்ளவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடியேறுகிறார் அல்லவா?

இதுதான் வசதி வந்தப் பிறகு மாறுகிற வர்க்க உணர்வு.

அப்படி உயர்வருவாய் உள்ளவர்களோடு சேர்ந்து வாழ விரும்பி இடம் பெயர்கிறவர் தலித்தாக இருந்தால், அவருக்கு அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு தர மறுக்கிறானே, அதுதான் ஜாதி உணர்வு.

வர்க்க உணர்வுதான் உண்மையானது. புறத்தில் உள்ளது. ஐம்புலன்களால் உணரக் கூடியது. சூழலுக்கு ஏற்ப மறைக்க முடியாதது. எல்லோருக்கும் ஒர் வர்க்க அடையாளம் உண்டு.

ஜாதி உணர்வு கற்பனையானது, புறத்தில் இல்லாதது. அய்புலன்களால் உணர முடியாதது. சூழலுக்கு ஏற்ப வெளிப்படுத்த, மறைத்துக் கொள்ளக்கூடியது. மனிதர்களுக்கு தேவையில்லாதது.

..

திரை இசைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள். இனிமையான இசை என்பது மிகவும் இசை நுட்பங்கள் நிரம்பியதாகத்தான் இருக்க வேண்டுமா?
-எஸ். பிரேமா, சென்னை.

நல்ல பாடல், திறமையான அதாவது நிறைய டெக்னிக்ஸ் உள்ளவையாக இருந்தால் மட்டும் போதாது; கேட்பவனின் ஆன்மாவை தொடுவதாக இருக்க வேண்டும்.

திரையிசை திலகம் என்று புகழப்பட்ட கே.வி. மகாதேவனின் பாடல்கள் எதை கேட்டாலும் கர்நாடக சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். கேட்கவும் இனிமையாக இருக்கும்.

குறிப்பாக ‘மன்னவன் வந்தானடி..தோழி..’ இந்தப் பாடல், நுட்பமான இசை, மிக நேர்த்தியான கர்நாடக சங்கீத வடிவத்தில் அமைந்த பாடல் என்று இசை வல்லுநர்கள் சிலாகிக்கிறார்கள்.

இந்தப் பாடலின் இடையில்; வீணையின் கொஞ்சல், ஆணின் குரலில் நடனத்துக்குரிய ‘ஜதி’ மையமாக சுசிலாவின் குரல் இவைகள் ஒரு குவியமாக ஒன்றிணைந்து, உன்னத உலகத்தை சிரிஷ்டிக்கும்.

ஸ, ரி, க, ம, ப, த, நி இந்த ஏழு சுரங்களையும் தனி தனியாக சொல்லி, அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒருவரி என்று பின்னியிருப்பார் கே.வி. மகாதேவன்.

உதாரணமாக, … கருணையின் தலைவா… … மதிமிகு முதல்வா…

இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும். ஆனால்,இதுபோன்ற சிறப்பான இசை நுட்பங்கள் இல்லாமல் எளிமையான இசை வடிவத்தில் அவர் உருவாக்கிய,

‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…’ ‘நலந்தானா..’ போன்ற பாடல்கள்தான் கேட்பவரை உருக வைத்து ஆன்மாவை தொட்டது.

-

பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதினால், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்பது உண்மையாகிறதுஎன்று . சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?

-சிரா. சென்னை.

உண்மைதான். பின்லேடன் போன்ற தீவிரவாதிக்கு மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தந்திருக்கிறது பாகிஸ்தான்.

தங்கள் நாட்டினுள், தங்களின் ராணுவத் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வேறு  நாட்டு ராணுவ சிப்பாய்கள் உள்ளே புகுந்து, அந்த நாட்டு ராணுவத்திற்கே தெரியாமல், சர்வதேச அளவில் தேடப்படுகிற ஒருவரை பெரும் சண்டைக்குப் பிறகு சுட்டுக் கொன்றிருக்கிறது, அந்நேரம்…பாகிஸ்தான் ராணுவம் என்ன கோடைகால ஓய்வுக்காக குளிச்சியான பகுதிக்கு போயிடுச்சா?

ஒரு தர்க்கத்திற்கு… ‘பின்லேடனாவது தலைமறைவா இருந்தாரு, பாகிஸ்தான் ராணுவத்தினால் கண்டுபிடிக்க முடியல’ என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்க ராணுவம் இப்படி பகிரங்கமாக உள்ளே புகுந்திருக்கே, இது எப்படி பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் தெரியாமல் இருக்கும்?

அமெரிக்க ராணுவம் அத்துமீறி இன்னொரு நாட்டினுள் நுழைந்ததை பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார் சிதம்பரம்? அந்த விசுவாசத்தில்தான் இருக்கிறது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒற்றுமை.

நல்ல இசை மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களும் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி…?

-. தமிழ், திருச்சி.

எம்.ஆர்.ராதா, மனோரமா, பாலைய்யா, ரங்காராவ், சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி என்று பல சிறப்பான நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

இதில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் நடிப்பு முன்மாதிரி இல்லாதது, சுயம்புவானது. பெரியாரின் தொண்டர் என்பதற்காக சொல்லவில்லை. ஒரு படத்தில் நடிகவேள் வில்லனாக வந்தால், கூடவே நகைச்சுவை, குணச்சித்திரம் என்று மூன்று, நான்கு பரிமாணங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்துவார்.

அதேப்போல், தமிழ் சினிமாவின் நவீன நடிகர் என்றால் அது சந்திரபாபுதான்.

அவரை தழுவிதான் பின்நாட்களில் நாகேஷ், கமல்ஹாசன், பிரபுதேவா என்று பெரிய கூட்டமே உண்டானது. இன்றைக்கும் பலபடங்களில் அவருடைய dance movements தான் பயன்படுத்தப்படுகிறது. பிரபு தேவா அதிக அளவில் அதை செய்திருக்கிறார்.

இன்றைய நடிகர்களில் வடிவேலு, விக்ரம் சிறப்பாக நடிக்கிறார்கள். குறிப்பாக, பிதாமகனில் விக்ரம், அதுபோன்ற குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் யதார்த்ததில் இல்லை. தன் கற்பைனையில் புதிதாக ஒரு மனிதனை உருவாக்கி இருந்தார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்மே மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு

சிவாஜி-கமல்-சேரன்-இளையராஜா-எம்.எஸ்.வி-ராகுல் காந்தி

பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்

பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/


செயல்கள்

தகவல்

4 பதில்கள்

14 11 2011
வலிபோக்கன்

நல்ல நடிகர்கள்.நல்ல இசைஅமைப்பாளர்கள் பற்றி எனக்கு தெரியாது.சாதி உணர்வு இருக்கிறதே அதுதான் மிகவும் கொடுமையானது.ஒருவன் முன.னேறி வந்தால் சொந்த ஜாதி சனம்பொறாமையால் இடைஞ்சல் கொடுக்கும் அதைவிட்டு வேறு இடத்திற்கு சென்றால் மேல்ஜாதியானது .விரட்டியடிக்கும்
இதுதான் உண்மையானது. வர்க்கஉணர்வோ இன்னும் வளரவேயில்லை.

15 11 2011
shanmuganantham.e

sathi mikavum aapathanathu 2000 andugalaga manithanai manithnaga mathikka marukkirathu. nalla pathilgal thozhar.

31 01 2012
21 02 2012

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.

Join 104 other followers