
உங்களைப் போன்ற நாத்திகர்கள் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும், நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பது உண்மை. அவன் நல்லது, கெட்டது, ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று எல்லாவற்றையும், எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது?
இதை தெளிவான புத்திக் கொண்டு ஆராய்ந்தால்தான் புரியும். உங்களைப்போல் முடிவு செய்து கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களால் முடியாது.
வீர. வீரபாண்டியன்
கடவுள் இல்லை என்பதை நிரூபித்த பிறகு, இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் இறை நம்பிக்கையை நியாயப்படுத்தமுடியாமல், நிரூபிக்கமுடியாமல் அல்லது கடவுள் மறுப்பாளர்களோடு விவாதிக்க முடியாமல் கடைசியாகப் போய் ஒளிந்து கொள்கிற இடம்தான் இந்த ‘நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கறது. ஒருவன் இருக்கிறான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான்’ என்கிற சுய சமாதானம்.
உண்மையிலேயே இந்த கருத்தில் உண்மையிருந்தால், மனித குலம் ஒரு கட்டத்திற்கு மேல் தன் இனவிருத்தியையே நிறுத்தியிருக்கும். அல்லது அப்படியே தொடர்ந்து இருந்தால், அது அநாகரிகமான சமூகமாக, மிருகங்களைப்போல், காட்டுமிராண்டித்தனத்தைவிட மோசமான மனநிலையில் இருந்து மாறாமல் இருந்திருக்கும்.
பின்ன என்னங்க, நமக்கு மேல இருந்து ஒருத்தன் நம்மள எப்பவும் பார்த்துகிட்டு இருக்கான் அப்படிங்கறதை நம்புனா, நம்புறவன் தன் பொண்டாட்டி பக்கத்துல நெருக்கமா உக்காரகூட முடியாது.
எந்த நேரமும் நம்பள ஒருத்தன் மேல ஒக்காந்து பாக்கறதா சொல்ற யாரும் அத துளிகூட நம்பள அப்படிங்கறதுக்கு, கோடிக்கணக்குல மக்கள் தொகை பெருகிக்கிட்டே இருக்குதே இதுதாங்க பலமான சாட்சி. இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?

//எந்த நேரமும் நம்பள ஒருத்தன் மேல ஒக்காந்து பாக்கறதா சொல்ற யாரும் அத துளிகூட நம்பள அப்படிங்கறதுக்கு, கோடிக்கணக்குல மக்கள் தொகை பெருகிக்கிட்டே இருக்குதே இதுதாங்க பலமான சாட்சி. இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?//
நெத்தியடி………….
இதற்க்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் இறை
நம்பிக்கையாளர்கள்
டைசியாகப் போய் ஒளிந்து கொள்கிற இடம்தான் இந்த ‘நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கறது. //
அயோ இது இது தான் அவங்களுக்கு கடைசி இடம்…
இது மேல பேச தெரியாமல்,,, பேச முடியாமல் முழிக்கும் இடம்…
உங்க பதில் வேறு மாறி இருந்து இருக்க வேண்டும் ஏன் என்றல் இதை நாம் veliya பேச முடியாது..
இந்த கேள்விக்கு வேறு பதில் வேண்டும் தல
எப்படி சாதி வெறியர்களின் கடைசி புகலிடம் (அயோக்கியத்தனம்) மதநல்லிணக்கமோ அதுப்போல இந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர் ஒலியும் எலிபொந்து ”மேலே ஒருத்தன் பாத்துட்டுக்கிருக்கான்” என்பது.
நீங்கள் சொல்லுற பாத்தா உலகத்தில (மேலோகத்திலும் சேர்த்து) இதுவரை அதிகமா நீலப்படம் நேரடியாக பார்த்த ஆளு என்கிற பட்டத்தை வாங்கிட்டார் கடவுள்…யாராவது கின்னசுக்கு எழுதிப்போடுங்கப்பா.
அய்யா,
நானும் இறை மறுப்பாளன் தான். ஆனால் தோலுரிக்க வேண்டிய எவ்வளவோ இருக்கும் போது இப்படி நாவிற் சரஸ்வதி என்றால் அவள் மல ஜலம் கழிப்பது எங்கே, கடவுள் எல்லாவற்றையும் பார்த்தால் நாம் ஆய் போக முடியாது என்பது போன்ற “பகுத்தறிவு” கேள்விகள் விதண்டாவாதம் அன்றி வேறு இல்லை. இவை போன்ற மிக மேலோட்டமான வாதங்கள் நம்மை மக்கு என்று நாமே சொல்லிக்கொள்வது போல தான். தங்கள் பாரதியார் குறித்த கட்டுரைகள் போன்று தரமான வாதங்கள் செய்ய திறன் உள்ள போது இது போன்ற தேவையற்ற மற்றும் உங்கள் தரத்தை குறைக்கும் பதிவுகள் தேவையற்றவை.
NAMAKKU MERPATTA SAKTHI ENDRAAL, NAMAKKU MELE UDKAARNTHU IRUKKUM SAKTHI ENPATHU ALLA. NAMAIVIDA UYARVAANA SAKTHI ENDRU THAN ARTHAM. ETHU SAATHAARANA VILAKKAM. ORU VEETIL MAGANIN NALANKALAI AVAN THANTHAI KAVANIKKIRAAR ENDRAAL, AVANATHU PADUKKAI ARAYAI ETTIPARPPAVAR ENDRU EPPADI ARTHAM KOLLVATHU?. CHEEEEEEEEP AGA ELUTHAPPADUVATHAI NEENGAL PRASURITHU THARAM KEDA VENDAM. UNGAL KADAVUL MARUPPAI VERU PALA MURAIKALIL ELUTHALAAM.
APPA MAGANAI PAARTHUKOLKIRAAR ENDRAAL, AVANATHU ANTHARANGATHAI PARKIRAAR ENDRU ARTHAM ALLA. AVANATHU NALANAI PARTHUKOLKIRAAR ENDRUTHAAN ARTHAM…
மதிமாறனா! என்ன இப்படி?
இறைவனையும் மனிதன் அளவுக்கு அல்லது அதை விட ஒரு படி மேலாய் அப்பா, அம்மா, ஆசிரியர் அளவுக்கு பார்க்கிற புத்தியால் விளைந்த வினை இது.
//நமக்கு மேல இருந்து ஒருத்தன் நம்மள எப்பவும் பார்த்துகிட்டு இருக்கான் அப்படிங்கறதை நம்புனா, நம்புறவன் தன் பொண்டாட்டி பக்கத்துல நெருக்கமா உக்காரகூட முடியாது.//
பார்ப்பதற்கே இப்படியா?
நீங்களும் நானும் எப்படிப் பிறந்தோம்?. நம் பிள்ளைகள் எப்படிப் பிறந்தன?. இனி திருமணம் செய்கின்றவர்களெல்லாம் எப்படி குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள்? என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்துதானே இருக்கிறது. குழந்தை பெறுவது நின்றா விட்டது? அல்லது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதையாவது விட்டு விட்டார்களா?
நானும் கடவுள் நம்பிக்கையற்றவள்.ஆனால் மதிமாறன் சொல்லும் வாதம் முறியடித்து விடக்கூடியதாக இருக்கிறதே.ஆத்திகர்கள் இவ்வாறு திருப்பிக் கேட்கலாம்;கடவுளுக்கு எல்லாமே உயிரினங்கள்.மனிதனும் ஒரு உயிரினந்தானே.நாய், கோழி, மாடு ,ஆடு, கழுதை என அன்றாடம் நாமும் சக உயிர்களின் இனச்சேர்க்கைகளை பார்க்கிறோமே.அதைப் போல மனிதரின் உடலுறவும் சாதாரண சம்பவமே.
தர்மினி
பகுத்தறிவாளர்களுக்கு மற்றவர்களை விட பொறுப்பும், நிதானமும், எச்சரிக்கையும் அவசியமாகும்.
ஒவ்வொரு வார்த்தையையும் பகுத்தறிவாளன் மிகவும் யோசித்தே, பலமுறை சிந்த்திதே கூற வேண்டிய நிலை உள்ளது.
ஏனெனில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல் படுபவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன வேண்டுமானாலும் கூறலாம். முழம் முழமாக காதில் பூ சுத்தலம்! கேட்டால் “எனக்கு நம்பிக்கை இருக்கிறது”, என்பார்கள்,
“நான் சாட்சி குடுக்கிறேன்”, என்பார்கள். நேரிலே பார்த்து கை குலுக்கி விட்டு வந்தது போல அவ்வளவு உறுதியாக சொல்வார்கள்.
ஆனால் பகுத்தறிவு வாதி நேர்மையானவன். அவன் தன்னால் முடிந்த வரைக்கும் உண்மையைத் தேடுவான். தெரிந்த வரையில் கண்டதைக் கூறுவான்.
“கடவுள் இருக்கிறார் என்பதை இது வரை யாரும் எனக்கு காட்டவில்லை. எனவே கடவுள் இருப்பதை ஆதாரம் காட்டி நிரூபிக்காதவரை கடவுள் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது” என்பதே சரியான பகுத்தறிவு என்பது எனது தாழ்மையான கருத்து.
எனவே பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை.
அதே நெரம் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று கூறும் கருத்து சுதந்திரம் எல்லொருக்கும் வழங்கப் பட வேண்டும். பார்க்காத கடவுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத கடவுளை பார்க்கவில்லை என்று கூற அனுமதி இல்லையா? இதைக் கூறினால் தண்டன.!
பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை. நாம் நம்பிக்கை வாதிகளை விட நேர்மையாக இருப்பொம்.
//எந்த நேரமும் நம்பள ஒருத்தன் மேல ஒக்காந்து பாக்கறதா சொல்ற யாரும் அத துளிகூட நம்பள அப்படிங்கறதுக்கு, கோடிக்கணக்குல மக்கள் தொகை பெருகிக்கிட்டே இருக்குதே இதுதாங்க பலமான சாட்சி. இதுக்கு எதுக்கு ஆராய்ச்சி?//
பொசுக்குனு இப்படியொரு விசயத்தை பட்டுனு உடைச்சுட்டீங்க.
பாவம் கடவுள் நம்பிக்கையாளர்கள். மறைவாக ஒதுங்கும் போதெல்லாம் ’சே.. கடவுள் நாம் இதை செய்வதை கூட பாக்கிறாரோ’ என்று கூச்சப்படுவர்.
நண்பர்களே, இது ஆத்திகர்களை புண்படுத்துவதற்கு அல்ல. இதில் உள்ள விடயத்தை சற்று யோசிக்கவும்.
“பின்ன என்னங்க, நமக்கு மேல இருந்து ஒருத்தன் நம்மள எப்பவும் பார்த்துகிட்டு இருக்கான் அப்படிங்கறதை நம்புனா, நம்புறவன் தன் பொண்டாட்டி பக்கத்துல நெருக்கமா உக்காரகூட முடியாது.”
ஹி ஹி…அறியாமையின் உச்ச கட்டம் இந்தப் பதிவு.
கலைஞர் வழி நடப்போம்னா….மூணு மனைவி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தங்களா?
பெரியார் வழி நடப்போம்னா பச்சை பச்சையா பேசனும்னு அர்த்தங்களா?
அம்பேத்கார் வழி நடப்போம்னா, பௌத்த மதத்தில் சேரணும்னு அர்த்தங்களா?
சாதாரண அலுவலங்களிலும், பொது இடங்களிலும் கூட சிசிடிவி கேமரா வச்சு மானிடர் பண்றாங்க….அதனுடைய முக்கிய நோக்கம், மனிதர்களை தவறு செய்யாமல் தடுப்பதற்கு தான் அல்லது தவறு செய்பவர்களைப் பிடிக்கத் தானே தவிர, அங்க இருக்குறவங்க பேசுறத ஒட்டு கேட்க இல்லை…
சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு : )
KADAVULUKKUM MANITHANUKKUM ULLA URAVU, APPAVUKKUM KULANTHAIKKUM ULLA URAVU. APPA, KULANTHAYAIVIDA SAKTHI ULLAVAR. MAGANUM MARUMAGALUM UDALURAVU KONDU PERAKULANTHAIKALAI PETRUTHARAVENDUM ENDRUTHAAN APPA VIRUMBUVAARE THAVIRA, MAKANIN UDALURAVU KAATCHIYAI KAANA ALAYA MATTAAR. EPPADI KADAVULAI PURINTHUKONDUTHAAN,ANNAI TERESA, ABDULKALAAM,KAMARAAJAR ,MARTINLUTHARKING PONDROR NALLA PANIKALAI AATRI ULLANAR. KADAVUL PEYARAAL NADAKKUM MOSADI MOODANAMBIKKAIKALAI ETHIRTHU KODI KODI YAAI ELUTHUNGAL. ANAAL, IPPADI LOOSU THANAMAAGA ELUTHA VENDAAM.
கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று கூறும் கருத்து சுதந்திரம் எல்லொருக்கும் வழங்கப் பட வேண்டும்.
பார்க்காத கடவுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத கடவுளை பார்க்கவில்லை என்று கூற அனுமதி இல்லையா? இதைக் கூறினால் தண்டன!
பகுத்தறிவுவாதி, “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?” என்று அறிய தொடர்ந்து ஆரய்ச்சி செய்வான். அதில் தவறில்லை. நாம் நம்பிக்கை வாதிகளை விட நேர்மையாக இருப்பொம்.
எழுப்பபட்ட கேள்விகளுககு உள்ளே வராமல், சுற்றி வந்து புலம்புகிறார்கள் மதவாதிகள்.
நேரடியாக பதில் சொல்ல முடிந்தால் அவர்கள் ஏன் கடவுள் மதவாதிகளாக இருக்கிறார்கள்?
Pona vaaram Kadavul Marupu tholarkalum TNTJ amaipinarkalum nadantha vivathathill, kadavul marupu kolgai tholargal pathil solla mudiyamal thavithargal. Antha kobathin velipade intha Katturai. Irunthalum Mathimaranidam irunthu innum oru theivana katturaiai ethir parkirom..!!!
Tholargal vivatha video parka…
http://www.tntj.net/?p=7001
மொய்தீன் அவர்களே,
நான் ஒன்று கேட்கிறேன் , நீங்கள் தவறாக எண்ணக் கூடாது.
நான் உங்களை புண்படுத்தவோ, அல்லது உங்கள் மார்க்கத்தையோ அவமதிக்கவோ இல்லை.
ஆனால் நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?
To all those who “belive” in God,
இப்போது இந்த உலகத்தில் இருக்கும் யாராவது இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?
//To all those who “belive” in God,
இப்போது இந்த உலகத்தில் இருக்கும் யாராவது இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?//
To all those not believe in Allah and especially to Trichykkaran
கடவுளைப் பார்த்தால்தான் நம்புவேன் என்பதுதான் பகுத்தறிவா?
எல்லா விடயங்களிலும் நீங்கள் அப்படி பார்த்துத்தான் நம்பிக் கொண்டு இருக்கின்றீர்களா?
இவ்வாறு பார்த்துதான் நம்புவேன் என்கிற மனிதனால் நிம்மதியாக வாழக் கூட முடியாது என்பது தெரியுமா?.
ஒரு சான்று பாருங்கள்.
நீங்கள் தாய் என்று சொல்பவர்தான், உங்களைப் பெற்றார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?
நீங்கள் பார்த்தீர்களா?
ஆகக் கூடுதலாக,
உங்கள் அம்மாவுடைய அம்மா, பிரசவ நேரத்தில் கூட இருந்து பார்த்து, சொல்லி, நீங்கள் நம்பி இருக்கலாம்.
இனி,
நீங்கள் தந்தை என்று சொல்பவர்தான் உங்கள் தந்தை என்பதை எப்படி உறுதியாகச் சொல்வீர்கள்?.
யாரும் பார்த்த சாட்சி கூட கொண்டு வர முடியாதே!.
யாராவது இவர்தான் உங்கள் தந்தையா? என்று கேட்டால்
இவராகவும் இருக்கலாம் என்றா சொல்வீர்கள்?
இதுவரை அவர்தான் தந்தை என்பதை அறிவியல் ரீதியாக ஆய்ந்து பார்த்திருக்கின்றீர்களா?
அவ்வாறு ஆய்ந்தால் உங்கள் தாயாரின் மனநிலை என்னவாக இருக்கும்?
நீங்கள் அறிவியல் பூர்வமாக ஆய்ந்ததை தவறென்று நிரூபிக்க இயலாதா?
அதே இரத்த பிரிவில் வேறொருவர் உலகத்திலேயே இல்லையா?
கொஞ்சம் அறிவைத் தீட்டுங்கள் அய்யா.
சொன்னதையே சொல்லிக் கொண்டு அலைவதால் பயனென்ன?
சகோதரர் சுல்தான் அவர்களே,
நான் கேட்ட கேள்விக்கு, நீங்கள் நேரடியான பதிலை அளிக்கவில்லை.
நான் கேட்டது,//நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?//
என்றுதான்.
இதற்க்கு உங்களின் பதிலில் இருந்து
யாரும் பார்க்கவில்லை என்பதாகவே தெரிகிறது.
எனவே யாரும் காணாத ஒரு விசயத்தை, அப்படியே நம்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது ஏன்?
கடவுள் இருக்கிற்றாரா என்று ஆராய்ச்சி செய்வதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
பார்க்காத கடவுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத கடவுளை இல்லை என்று கூற அனுமதி இல்லையா? கடவுள் இல்லை என்று சொல்வதில் என்ன தவறு?
My above message is not only for Mr. Sulthan, but to Hindus, Christians as well!
Parthal mattum than nambuvathu enbathu pagutharvu kedayadhu. Ithu pondra innum pala kelveigaluku vivathathil pathil iruku….
Neenga antha video paruknga…
Mathimaran: Neenga antha video parthu atharku etrar pol oru katturai eluthavendum….
http://www.tntj.net/?p=7001
I dont know for some reason my previous update was published.
சகோதரர் சுல்தான் அவர்களே,
நான் கேட்ட கேள்விக்கு, நீங்கள் நேரடியான பதிலை அளிக்கவில்லை.
நான் கேட்டது,//நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?//
என்றுதான்.
இதற்க்கு உங்களின் பதிலில் இருந்து
யாரும் பார்க்கவில்லை என்பதாகவே தெரிகிறது.
எனவே யாரும் காணாத ஒரு விசயத்தை, அப்படியே நம்ப வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது ஏன்?
கடவுள் இருக்கிற்றாரா என்று ஆராய்ச்சி செய்வதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
பார்க்காத கடவுளை இருக்கிறார் என்று அடித்து சொல்லும் போது, பார்க்காத கடவுளை இல்லை என்று கூற அனுமதி இல்லையா? கடவுள் இல்லை என்று சொல்வதை ஏன் குற்றமாக கருதவேண்டும்?
My above message is not only for Mr. Sulthan, but to Hindus, Christians as well!
கடவுளைப் பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு தோழர்கள் கையை விரித்து விட்டனர்.
பரவாயில்லை – பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை – கடவுள் எல்லாம் வல்லவர் என்று கூறுகிறீர்களே, நிலவை ஒரு மாதம் முழுவதும் முழு நிலவாக ஒளி விடச் செய்து காட்டவோ -அல்லது இது போல வேறு ஏதாவது செய்து காட்ட முடியுமா?
நம்முடைய இந்த ஆபரை எல்லா மதத்தினருக்கும் தருகிறோம். யார் வேண்டுமானாலும் அவர்கள் கடவுளிடம் சொல்லி ஒரு மாதம் முழுவது பவுர்ணமி போல முழு நிலவு ஒளிர வைக்க முடியுமா?
நண்பர்களே, கடவுள் சம்பந்தமாக சில கேள்விகளைக் கேட்டு, அதற்க்கு விளக்கம் தர முடியுமா என்று கேட்டால்,
சுட்டிகளை எழுதி, இந்த சைட்டுக்கு போங்கள், அந்த சைட்டுக்கு போங்கள் என்கிறீர்களே!
பதில்களை இங்கேயே அளிக்கும் சிறிய சிரமத்தைக் கூட, உங்கள் கடவுளுக்காக உங்களால் மேற்க் கொள்ள முடியாதா?
திருச்சிக்காரன்,
நீர் கடவுள் உண்டு என்பதை நம்புகிறீரா இல்லையா?
சகோதரர் ராபின் அவர்களே,
அவசர அவசரமாக, கடவுள் இருக்கிறார் என்று வெறுமனே நம்பிக்கை அடிப்படையில் அடித்துச் சொல்ல நான் தயார் இல்லை.
இது வரையில் நான் எந்தக் கடவுளையும் காணவில்லை. இப்போது இருக்கும் யாரும் பார்த்ததாகவும் தெரியவில்லை.
அதே நேரம் கடவுள் என்று ஒரு சக்தி இருக்கிறதா என்று ஆராய விருப்பப் படுபவர்களை நாம் வூக்குவிக்கிறோம்.
நம்பிக்கையாளர்கள், அடாவடி செய்வது போல
“நம்பித் தான் ஆக வேண்டும்,
கடவுள் இப்படித்தான் இருக்கிறார்,
அவர் இப்படி எல்லாம் இருக்க முடியாது,
நீ வணங்கித் தான் ஆக வேண்டும்,
கடவுள் இருக்கிறாரா என்று ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை,
கடவுள் இல்லை என்று சொல்ல அனுமதி இல்லை … ”
இப்படி எல்லாம் கட்டளைகள் ஏன்?
இதோடு, என் கடவுள் தான் உண்மையான கடவுள் என்று வாளை வேறு உருவுகிறார்கள். அசிங்கமான காட்டு மிராண்டித் தனமாக இல்லை?
கடவுளின் பெயரால் எத்தனை சண்டைகள்? எத்தனை வெறுப்புக் கருத்துக்கள்? இது வரை பார்த்தேயிராத கடவுளுக்காக இத்தனை உயிரைக் காவு குடுக்க வேண்டுமா, இன்னும் எத்தனை உயிர்களோ?
அதே நேரம் கடவுள் இருக்கிறார் என்று கூறிய அறிங்கர்களை நான் இகழவில்லை. அவர்களில் பலர் மேல் மதிப்பு வைத்து மரியாதை செய்கிறோம் என்றால் அவர்கள் கூறிய மனித நேயக் கருத்துக்களுக்காக!
நான் இயேசு கிறிஸ்துவின் மீது மதிப்பு வைத்து இருக்கிறேன் என்றால் அவர் மனித நேயக் கருத்துக்களை கூறியவர், கொள்கைக்காக இறுதிவரை போராடியவர் என்பதால்.
கீதையிலும் அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்), சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களுடனும் சினேகா பாவத்துடனும்), கருணா எவ ச (கருணையே உடையவனாய்) என்று கூறியுள்ளதையும்
அதோடு இஸ்லாமியர்களிடத்து உள்ள நல்ல பழக்க வழக்கங்களை – ஏழைகளுக்கு உதவுதல், வட்டி வாங்காமை,….
இப்படி எல்லோரிடமும் உள்ள நல்ல பழக்கங்களை, நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம். யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் அறிவின் அடிப்படையிலேயே சிந்திப்பதை நிறுத்த முடியாது.
காழ்ப்புணர்ச்சியோடு திட்டினாலும், மிரட்டினாலும் சரி, அப்படி செய்பவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் ஆக இருந்தாலும் சரி நாங்கள் நடுங்கி ஓட மாட்டோம்.
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று கூறும் உரிமை தமிழ் நாட்டிலே, இந்தியாவிலே, எப்போதும் இருக்கும். இருக்க வைப்போம். அது கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம். நாங்கள் யாரையும் மனம் நோக வைக்க வேண்டும் என்பதற்காக அப்படிக் கூறவில்லை.
திருச்சிக்காரன்,
என் கேள்விக்கு பதிலளிக்காமலேயே ஒரு பக்கத்துக்கு எழுதி தள்ளியுள்ளீர்கள். என்னுடைய கேள்வி: கடவுள் என்று ஒருவர் உண்டு என்பதை நம்புகிறீரா இல்லையா?
//கேள்வி: கடவுள் என்று ஒருவர் உண்டு என்பதை நம்புகிறீரா இல்லையா?//
நம்பிக்கை என்பதாக ஒன்றை வைத்துக் கொண்டு, அதை எப்படியாவது உன்மையாகக் காட்டி விட வேண்டும் என்ற வகையிலே செயல் பட நான் விரும்பவில்லை.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபடுகிரேன். அதில் என்ன முடிவு தெரிகிரதோ, அது எதுவானாலும் அதை நான் ஒத்துக் கொள்வேன்.
இதற்க்கு இடையிலே அவசரப் பட்டு நம்ப வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
எனக்கு எந்த “நம்பிக்கை”யும் இல்லை.
ஒரு மாணவன் வேதியல் பரிசோதனைக் கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் போது, அவனிடம் வந்து, “இந்த ஆராய்ச்சியின் முடிவில் காப்பர் சல்பேட் உருவாகும் என்று நீ நம்புகிராயா?” என்று கேட்டால் என்ன சொல்வான்,
அதை அறியத்தானே ஆராய்ச்சி நடக்கிறது, நீயும் கூட இருந்து பார் என்பான்.
பகுத்து அறிவது என்கிற முறைக்கு, நீங்கள் சிறிது கூட இடம் கொடுக்க கூடாதா?
ஏதாவது ஒரு நமபிக்கையை வைத்துக் கொண்டு தான் ஆக வேண்டுமா? அது தத்துவ மாணவனுக்கு அழகல்ல.
எத்தனை பெரியார் வந்தாலும் என்ன பலன்?
திருச்சிக்காரன்,
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற நிச்சயம் இல்லாமல் இருக்கும் நீர் இந்து மதத்தை ஆதரிப்பது ஏன்? இந்து மதத்தை வைத்து மற்ற மதங்களை சரிப்படுத்தப் போவதாக பீலா விட்டது ஏன்?
திருச்சிக்காரரே….வினவில் ஒரு விவாதம் நடைபெறுகிறது…வந்து பாத்துட்டுப் போங்க..
சகோதரர் ராபின் அவர்களே,
//கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற நிச்சயம் இல்லாமல் இருக்கும் நீர் இந்து மதத்தை ஆதரிப்பது ஏன்?//
இந்து மதத்திலே பகுத்தறிவுக்கு ஒப்பான கருத்துக்களை
எடுத்துக் கொள்கிறேன், மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்துக்களை எடுத்துக் கொள்கிறேன்.
இந்து மதம் மட்டும் அல்ல. எல்லா மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களையும் வரவேற்க்கிரேன் என்று சொல்லி இருக்கிரேன்.
//இந்து மதத்தை வைத்து மற்ற மதங்களை சரிப்படுத்தப் போவதாக பீலா விட்டது ஏன்?//
மதங்கள் என்ற வழியே மக்கள் மனதிலே ஏற்றப் பட்ட நஞ்சை, அதே மதத்தின் மூலமாகவே திருப்பி எடுக்க வேண்டும்.
பெரியார், விவேகானந்தர் கருத்துக்கள் மூலமாக இந்து மதத்தை சரிப் படுத்துவொம்.
பிற்கு மற்ற மதங்களையும் செம்மைப் படுத்துவொம்.
இது பீலாவா என்ன என்று பொரூத்து இருந்து பார்க்கவும்.
எல்லா மதங்களை சேர்ந்தவர்களும், வெறுப்புக் கருத்துகளிலிரிந்து விலகி மனித நேய
கருத்துக்கள ஆதரிக்கத் துவங்கி விட்டனர்.
Dear Brother Kabilan,
I just put only one comment on vinavus blog. He deleted that alaso!
I think he cant bear with truth. Any way if you mention about the particular topic, I would try to put my comment.
Thanks.
//பெரியார், விவேகானந்தர் கருத்துக்கள் மூலமாக இந்து மதத்தை சரிப் படுத்துவொம்.// ஆதி சங்கரர், ராமன் எல்லாரையும் இந்த லிஸ்டில் இருந்து எடுத்தாச்சா? நல்ல முன்னேற்றம்தான்.
//ஆதி சங்கரர், ராமன் எல்லாரையும் இந்த லிஸ்டில் இருந்து எடுத்தாச்சா? நல்ல முன்னேற்றம்தான்.//
சித்தர்கள்,ஆதி சங்கரர், ராமன், கிருட்டிணன், பட்டினத்தார், திருநாவுக்கரசர் உள்ளிட்ட நாயன்மார்கள்…. ஆகியவர்களின் கருத்துக்களின் அடிப்படியில் தான் இந்து மதம் அமைக்கப் பட்டு உள்ளது.
அதில் தேவை இல்லாத கருத்துக்கள் புகுத்தப் பட்டு விட்டன.
அதை செம்மை செய்ய பெரியார், விவேகானந்தர் கருத்துக்கள் மூலமாக சரிப் படுத்துவொம்.
கடவுள் இருக்காரா இல்லையா என்பதிலேயே தெளிவில்லாமல் இருக்கும் நீர் ஏன் ஒரு மதத்தை சீர்படுத்த நினைக்க வேண்டும்?
Dear Brother Robin,
//..கடவுள் இருக்காரா இல்லையா என்பதிலேயே தெளிவில்லாமல் இருக்கும் நீர் ஏன் ஒரு மதத்தை சீர்படுத்த நினைக்க வேண்டும்?//
ஒரு மதத்தை மட்டும் அல்ல. எல்லா மதங்களையும் சீர்படுத்த நினைக்கிறேன் !
ஏன் என்றால் மதத்தின் பெயராலே மக்களைக் கொன்றார்கள். இனங்களை அழித்தார்கள் . உலகம் முழுவதையும் கல்லறை பிரதேசமாக ஆக்கும் முன் மனித நேயத்தை அன்புக் கருத்துக்களை பரப்ப முயற்சி செய்கிறேன்.
மதங்கள் என்ற வழியே மக்கள் மனதிலே ஏற்றப் பட்ட நஞ்சை, அதே மதத்தின் மூலமாகவே திருப்பி எடுக்க வேண்டும்.
Hello Tiruchirakaran,
Ungalai antha vivatha videovai parka sonnathuku karanam, athil ithu pondra ennatra kelvigal kettu pathilum sollapattu irukirathu….
Intha sitela vilakam tharuvathaivida, oru vivathathai parthu, ketkum pothu elithil vilangum allava…? athaithan nan seithen…?
Kadavulain peyaral manithargal seyyum thavarugalal, kadavule illai endru sollivida mudiyathu…
Kadavul illai endru vaithu kolvem… Ithan adipadaiyil, intha kelviku pathil sollungalen…
Intha ariviyal ulagathil oru porul entha vithamana visaiyum illamal thanaga nagarum, sutrum enru sonnal nambuveergala…?
Appadi irukum pothu, Intha boomi eppadi thanaga sutrum…?
Itharku pathil sollum pothu sooriyanin Gravitational force karanamaga than Boomi Sooriyanai sutri varukirathu endru solvargal… Anal, neengal oru porulai keele pottal athu keele (boomiyil) vilunthuvidukirathu… Karanam Earth’s Gravitational Force.
Ippa yosithu parungal, Boomiye Sooriyanoda Gravitational forcela sutrum pothu (athavathu, Sooriyanuku avalavu power irukum pothu), sooriyanal earthil iruka koodiya oru porulai kooda thannal iluka mudiyavillaiye..yen…?
ippadi yosithu parthal, sooriyanukum boomikum idaiye Equal amount of Gravitational force should exist to tally the effect….
Ithai than science sollugirathu…? Anal nammudai kelvi ennana… Sooriyanukum.. Earthum… Intha power eppadi thanaga varum…? Atharku scientific karanam vendum…?
Eppadi pala kelvigalai neengal ungalaiye kettu parkungal… neengalum othukolveergal Kadavulai (Oru migaperiya sakthi)….
Ithu pondra innum pala kelivegal atharku pathigalaum antha videola alasa pattirukirathu… Athai parthu vittu inga ungal kelvigalai elupungal, pathi solla nangal thayar…
Kadavul irukirara? illaiya endra araichiyil
//Mathimaran: Neenga antha video parthu atharku etrar pol oru katturai eluthavendum….
http://www.tntj.net/?p=7001//
Itharku Mathimaranin pathil katturaiai ethirparkirom…
மொஹிதீன் அவர்களே,
நீங்கள் தமிழில் எழுத முடிந்தால் நல்லது. இல்லையேல் ஆங்கிலத்தில் எழுதி விடவும். ஆங்கில எழுத்தை வைத்து தமிழில் எழுதினால் படிக்க கடினமாக உள்ளது.
இது ஒரு சிறிய வேண்டுகோளே.
விடயத்திற்கு வருவோம்.
இந்த ஈர்ப்பு விசை, சக்தி இது எல்லாம் அறிவின் அடிப்படையில் அறிவியளாலர்கள் கண்டு பிடித்தது தான்.
மனிதனின் உயிர் காக்கும் மருந்து முதல், இயந்திரம், விதிகள், எல்லாவற்றையும் கண்டு பிடித்தது அறிவின் அடிப்படையில் தான்.
சூரியனின் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம், அணுக்களாக இணைவதால் சக்தி உருவாவது – எல்லாம் அறிவின் அடிப்படையில் அறிவியளாலர்கள் கண்டு பிடித்தது தான்.
இதில் எதையாவது நம்பிக்கையாளரகிய உங்களின் புனித நூல்களில் எழுதப் பட்டு இருந்ததா?
இதில் எதையாவது நம்பிக்கையாளரகிய உங்களின் புனித நூல்களில் எழுதப் பட்டு இருந்ததா?
அதில் எழுதப் பட்டுள்ளது எல்லாம் பிடரிகளை வெட்டுங்கள், விரல் நுனிகளை வெட்டுங்கள் என்பது போன்ற மனிதத்துக்கு எதிரான காட்டு மிராண்டிக் கருத்துக்களே.
இப்படி மிகவும் கஷ்டப் பட்டு, அறிவின் அடிப்படையில் பல உண்மைகளைக் கண்டு பிடிக்கும் போது, நீங்கள் உடனே வந்து, கடவுள் எவ்வளவு நேர்த்தியாகப் படைத்து இருக்கிறார் என்று ஒரு பிட்டை போட்டு விட்டு சென்று விடுகிரீற்கள்.
நீங்கள் உங்கள் விருப்பம் போல கடவுள் என்று இருப்பதாக நினைத்துக் கொண்டோ, நம்பிக் கொண்டோ, தொழுது கொண்டோ இருக்க்காலாம்.
ஆனால் காணாத ஒரு கடவுளை , வெறும் நம்பிக்கை அடிப்படையிலே, நேரிலே இருப்பது போல அலப்பறை விட்டு,
பகுத்தறிவுவாதிகளை திட்டியும் இகழ்ந்தும், கடவுள் இல்லை என்று கூறினால் கழுத்தை வெட்டுவென் என்றும்,
மக்களை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்றும், மனித வர்க்கத்தையே அழிக்கும் இரத்த வெறிக் கருத்துக்களை பரப்புவது அயோக்கியமான காட்டு மிராண்டித் தனம்.
கொஞ்சம் அவகாசம் அளித்தால், பகுத்தறிவின் ஆராய்ச்சியின் அடிப் படையில் இன்னும் பல உண்மைகளை கண்டு பிடிக்கலாம். கடவுள் என்பது பற்றி கூட பகுத்தறிவின் அடிப்படையிலே கண்டு பிடிக்கலாம்.
ஆனால் இரத்த வெறிக் கொள்கைகள் அது வரை மனித இனத்தை விட்டு வைக்குமா என்பது சந்தேகமே!
மொய்தீன் அவர்களே,
My question was very simple.
ஆனால் நீங்களோ, இல்லை இப்போது இந்த உலகத்தில் இருக்கும் வேறு யாரோ இது வரைக் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா?
For this there is only a simple answer. Either yes or no.
No need to go any site!
கடவுள் என்ற கற்பனய் கருத்தய் நம்பும் பகுத்தறிவுக் குறய்வாளர்களே.. பேராசய்க் காரன், மோசடிப்பேர்வளி, காமவெறியன் இதுபோன்ற சமூக குற்றவாளிகளே அதிக கடவுள் நம்பிக்கய்யோடும், அந் நம்பிக்கயய் மக்கள்மேல் திணிபபவர்களுமாக இருக்கிறார்கள்.. கடவுளய் நம்பு, கடவுளய் வணங்கு என்று கட்டாயப் படுத்துகிறார்கள்… பணத்தில் புரளுபவனெல்லாம் தீவிர நம்பிக்கய்யாளனாகவே இருக்கிறான், அவன் நடந்து வந்ததோ
சமூக விரோத பாதயில் மட்டுமே… தேர்தல் பாதய் திருடர் பாதய் என்பதுபோல கடவுள் பாதய்யும் அயோக்கியர் பாதய்தானா ?
நான் எழுத, எழுதத் தொடங்க முழுமய்யாக உதவிய என் நண்பன் மதிமாறனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியய் கூறி…