இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்

Parvathi-Menonசென்னையில் ஒரு நாள் போன்ற நல்ல படங்களையே சரியில்லை என்கிறீர்களே, நீங்கள் வந்து படம் எடுத்துப் பாருங்கள்.

-டி. சௌமியா, சென்னை.

சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம் எடுக்கலாமென்று இருக்கிறேன்.

ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக, போலிசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததில் எத்தனை உயிர்கள் பலியாகின என்ற விவரங்களோடு.

விபத்தில் படுகாயமுற்றவர், பிரசவ வேதனையில் துடித்த பெண், விஷ பாம்பால் கடிப்பட்ட விவசாயி, கொதிக்கும் எண்ணையை மேலே கொட்டிக் கொண்ட குழந்தை, ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட முதியவர், கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிருக்குப் போராடியவர், கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற ஆண்கள் பெண்கள்

இவர்களையெல்லாம் வாரிபோட்டுக் கொண்டு அவசரமாக போன மாட்டு வண்டி, டிராக்டர், பைக். சைக்கிள் ரிக்க்ஷா. ஆட்டோ, கார் இவைகளை மடக்கி வைத்ததால், உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு போக முடியாமல் எப்படி இறந்தார்கள் என்பதுதான் திரைக்கதை.

படம் எடுக்க நான் ரெடி.

தயாரிப்பாளாராக நீங்க ரெடியா?

*

தங்கம் 2013 மே  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

சென்னையில் ஒரு நாள்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

அட்சயதிரிதியை முன்னிட்டு இன்று (13-05-2013) கேப்டன் நியுஸ் சேனலில் ஒளிபரப்பான என்னுடைய பேட்டி:

தொடர்ச்சி..

தொடர்ச்சி..

தொடர்புடையவை:

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

social

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,

வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.

தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,

வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?

இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?

வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

குறிப்பு: இந்தக் கேள்வி கள்ளர் ஜாதி உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.

தலித் உட்ஜாதிகளுக்குள் பறையரையும், சக்கிலியரையும் தங்களை விட கீழானவராக கருதுகிற பள்ளர் ஜாதி உணர்வாளருக்கும், சக்கிலியரை தன்னைவிட கீழானவராக கருதுகிற பறையர் ஜாதி உணர்வாளருக்கும் பொருந்தும்.

தொடர்புடையவை:

யார் தமிழனவிரோதி? : கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

தலித் ‘ஞானப்பழம்’

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

இலவசம் : ‘சின்ன அய்யா’ விற்கு ஒரு கேள்வி

Free

லவசங்களைக் கொடுத்து திராவிட கட்சிகள் வன்னியர்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டது என்று ‘சின்ன அய்யா’ மாமல்லபுரத்தில்  பேசியிருக்கிறார்.

இலவசத்தை எதிர்க்கும் இவர்கள், தங்களின் ஒரே அடையாளமாக பெருமையுடன் முன் வைக்கும் ‘ஜாதி’ என்பது பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கியதா? அல்லது கடுமையாக உழைத்துப் பெற்றதா? அல்லது விலை கொடுத்து வாங்கியதா?

எந்த உழைப்போ படிப்போ செலவோ இல்லாமல் ஒவ்வொருவருக்கும் இலவசமாகக் கிடைத்ததுதானே ஜாதி.

இந்த இலவசத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமா?

நன்றி: பெரியார் முழக்கம்

தொடர்புடயவை:

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

chemmen

கடல் படம் மீனவர் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை என்கிற உங்கள் பதிலில் எனக்கு திருப்தியில்லை.

 -நரசிம்மன், சென்னை.

கடல் படத்தில் மீனவர் வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை என்பது பிரச்சினையல்ல, மீனவர்களை இழிவாக சித்தரித்திருப்பதுதான் கண்டனத்திற்குரியது.

கத்தோலிக்க மீனவர்கள் நிலையிருந்து கதையை சொல்லாமல், கத்தோலிக்க பாதிரியார் வழியாக கதை சொல்லப்பட்டிருகிறது. அதனால்தான் பாதிரியார்களை உயர்வாகவும் மீனவர்களை இழிவாகவும் சித்தரித்துள்ளனர்.

உழைக்கும் மக்களைப் பற்றி படம் எடுப்பவர்கள், ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையை, வாழ்க்கை முறையை இரண்டு கதாபாத்திரங்களுக்குள் சுருக்கி, அதற்குள் தங்களின் விருப்பு, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் கதை சொல்லி முடித்துவிடுகிறார்கள்.

அதனால்தான் மக்களின் விரிந்த வாழ்க்கையை குறைந்த பட்ச அளவில்கூட அவர்களால் பதிவு செய்ய முடியவில்லை.

உழைக்கும் மக்கள் என்றால் குறைபாடுகளே அற்றவர்கள் என்பதல்ல, அவர்களின் குறை நிறைகளோடு பதிவு செய்யவேண்டும். அதற்கு அந்த மக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, ஆனால் அந்த மக்களின் வாழ்க்கையை. தெளிவான அரசியல் கண்ணோட்டத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.

தொழில் சிரமம், வறுமை, காதல், பொறாமை, பாசம், நம்பிக்கைத் துரோகம், வெறுப்பு, அன்பு, குடும்பம், அக்கம் பக்கம், பேராசை, அழகியல், அப்பாவித்தனம், பிற சமூகத்தோடு மீனவர்களுக்குள்ள உறவு – இப்படி பலவகைகளில் மீனவர் வாழ்க்கையை தகழி சிவசங்கரன் பிள்ளை தனது ‘செம்மீன்’ நாவலில் வாழ்ந்திருப்பார்.

கடற்கரையில் காய வைக்கப்பட்டிருக்கிற கருவாட்டின் ‘நாற்றத்தை’ உணர்ந்து முகம் சுழிப்பதும், இழிவாக பேசுவதும் சைவ உணவு பழக்கமுள்ளவர்கள் மட்டுமல்ல; மீனை விரும்பி சாப்பிடுகிற மீனவர் அல்லாதவர்களும்தான்.

ஆனால், தகழி சிவசங்கரன் பிள்ளை கடற்கரையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கிற அந்த மீன்களை, ‘சூரிய ஒளியில், வெள்ளிக் காசுகளைப்போல் தகதகத்தன’ என்று வருணித்திருப்பார். இதுதான் மீனவனின் பார்வை.

மீன், சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு ஓர் உயிர். அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு உணவு. ஆனால், மீனவர்களுக்கோ பொருளாதாரம்.

தகழியின் ‘செம்மீன்’ நாவல் படமானபோது, நாவலில் இருந்த நேர்த்தியை, அழகியலை படத்தில் அப்படியே கொண்டுவர முடியவில்லை. கொண்டுவரவும் முடியாது. ஆனால், வந்தவரை மிக சிறப்பாகதான் இருந்தது.

படத்தின் வண்ணம், அதுவே ஒரு உன்னதம். மார்க்ஸ் பாட்லேவின் ஒளிப்பதிவு அதுவும் அத்தகையதே. கடற்கரையின் காற்றோடு கலந்திருக்கிற சலில் சவுத்ரியின் இசை,

அடிமைத்தனம், நம்பிக்கை துரோகம், பேராசை, ஆதிக்க கணவன், மனநிலை பாதிக்கப்பட்டவன்; செம்பண்குஞ்சுவாக வரும் கொட்டாரகரா ஸ்ரீதரன் நடிப்பில்தான் எத்தனை உணர்வுகள்.

‘செம்மீன்’ காதல் கதையாக அறியப்பட்டாலும் அது மீனவர் வாழ்க்கையாகத்தான் புரிந்துகொள்ளப்பட்டது.

கேரளத்தில் அந்தப் படம் மீனவர் அல்லாத மக்களிடம் மீனவர் பற்றிய ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.

சிறந்த படங்களை, மொழிகளைத் தாண்டியும் தமிழர்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு, ‘செம்மீன்’ தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பதே சாட்சி.

உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உன்னதமாக சொன்ன, ‘செம்மீன்’ போல் ஒரே ஒரு படம் தமிழில் உண்டா?

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

bagavetgeta

நவீன எழுத்தாளர்கள் யார்?

-கிருபா சங்கர், திருநெல்வேலி.

இரண்டாயிரம் ஆண்டு பழைமையான வர்ணாசிரமத்தை நியாயப்படுத்துகிற வேதம், மகாபாரதம், பகவத்கீதை, ராமாயணம், மனு தர்மம் இவைகளை புகழ்ந்தும் இவைகளின் பின்னணியிலும் கதை, கவிதைகள் எழுதுறவன், நவீன எழுத்தாளனாம். இவைகளை விமர்சிக்க மறுக்கிறவன் நவீன சிந்தனையாளனாம்.

வர்ணாசிரமத்தை, ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்துகிற புராண, இதிகாச கழிசடைகளை நவீன சிந்தனை கொண்டு அம்பலப்படுத்தி ஜாதி, மதத்திற்கு எதிராக எழுதுகிறவன் நவீன எழுத்தாளன் இல்லையாம்.

ராஜபக்சேவிற்கு மனிதாபிமானி பட்டம். வேத, புராண, இதிகாச, மனு ஆதரவு எழுத்தாளனுக்கு நவீன எழுத்தாளன் பட்டம்.

நல்லாயிருக்கு இல்ல இந்த நியாயம்?

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

சென்னையில் ஒரு நாள்

chennai

சென்னையில் ஒரு நாள் படம் பார்த்தீர்களா?

-அப்துல், திருநெல்வேலி.

பார்த்தேன் அந்த நியுஸ் ரீலை.

பொறந்தா நடிகனுக்கு பொண்ணா பொறக்கணும். இல்லை பெரிய பணக்காரன் வீட்லயாவது பொறக்கணும். அப்படி பொறந்தா; அரசு, போலீஸ், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இவர்களெல்லாம் எவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இல்லன்னா.. போலிஸ்காரன் கையில அடிவாங்கி, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி, திறமையான மருத்துவர் கையால போஸ்ட்மாடம் பண்ணி பொணமாத்தான் வீட்டுக்கு வரனும்.

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?