பண்பாட்டு ரீதியான அடிமைத்தனம்: பெரியார்

26 01 2012

ந்தை பெரியாரின் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிற இன்றைய இளைஞர்கள் அல்லது தெரிந்து கொள்ள விரும்பம் இல்லாமலேயே, அவரை பற்றிய முன் முடிவோடு, பெரியார் சொல்லாத கருத்துகளை எல்லாம் அவர் கருத்துகளாக அவர் மேல் ஏற்றி அவரை அவதூறு செய்பவர்கள்;

இவர்களை எல்லாம் மனதில் கொண்டு, பெரியார் பேச்சுக்கள், எழுத்துக்கள் 16 பக்கங்கள் கொண்ட சிறு வெளியீடுகளாக 8 புத்தகங்கள் வந்திருக்கிறது.

  1. சுயமரியாதை நமது பிறப்புரிமை
  2. நாய்க்கு லைசென்ஸ் பெண்ணுக்குத் தாலி
  3. ஜனநாயகம் மகா பித்தலாட்டம்
  4. பிள்ளை பெறும் இயந்திரமா பெண்கள்?
  5. பார்ப்பனச் சடங்குகளைப் புறக்கணிப்போம்
  6. இந்தியா ஓரே நாடா?
  7. பார்ப்பான் காப்பாற்றும் இராமாயணம்
  8. கல்வியின் லட்சியம்

 பெரியாரை தீவிரமாக வாசிக்க, இவைகள் உங்களை பெரியாரிடம் அழைத்துச் செல்லும்..

உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் நண்பர்களுக்கும் பண்பாட்டு ரீதியான அரசியல் தெளிவை பெரியாரின் இந்த சிறு வௌயீடுகள் நிச்சயம் தரும்.

பயன்பெறுங்கள். பரிசளித்து, பயன் பெறச் செய்யுங்கள்.

*

ஒன்றின் விலை ரூ. 5 மட்டும்.

*

தொடர்புக்கு:

சுயமரியாதை பதிப்பகம்

வ.உ.சி. வீதி

அம்மன் காம்பளக்ஸ் முதல் தளம்

யாழ் தையலகம் எதிரில்

உடுமலைப்பேட்டை – 642 126

திருப்பூர் மாவட்டம்

பேச: 9788324474

தொடர்புடையவை:

மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

காந்தி – நண்பரா துரோகியா?

காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்..

காந்தியம்; காந்தியிடமே இல்லை..





..இவைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள்

25 01 2012

ஒரு முடிவை சரியாக எடுப்பது எப்படி?

-பிரேமா, சென்னை.

தன் பொருளாதார நிலை, அதை ஓட்டி தனக்கு சமூகத்தில் இருக்கிற மதிப்பு, லாப-நஷ்டம் இவைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள்.

ஆனாலும், பல நேரங்களில், Gas Trouble ளை, Heart Attack என்று பயப்படுவதும், Heart Attack வரும்போது, Gas Trouble என்று அலட்சியமாக இருப்பதுபோலவே, தனி வாழ்க்கையில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் நாம் அப்படி நடந்து கொள்கிறோம்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்





சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

23 01 2012

கலைமாமணி விருது, தேசிய விருது, ஆஸ்கார் விருது, நோபல் பரிசு, ஞானப்பீட விருது இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

-கு. சிவகுமார், பொள்ளாச்சி.

எப்போதாவது, சரியான நபர்களுக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த விருதுகளின் நோக்கம் வேறு ஒரு அரசியல் பின்னணியை நிறுவுவதுதான்.

சர்வதேச அளவில் நோபல் பரிசு போன்ற விருதுகள், ஒரு உண்மையான கம்யுனிஸ்டுகளுக்கு கொடுத்ததே இல்லை.

‘மனித குலம் தோன்றியதிலிருந்து இப்படி ஒரு மகத்தான மனிதனை பார்த்ததில்லை’ என்று வியக்கிற அளவிற்கு அறிவாளியான காரல் மார்க்சுக்கு எந்த சர்வதேச விருதுகளும் தந்ததில்லை.

ஏனென்றால், அந்த சர்வதேச விருதுகள் எல்லாம் மார்க்சியத்திற்கு எதிராக. கம்யுனிஸ்டுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவைகள்தான்.

மற்றபடி, பெருபான்மையான விருதுகள், நடனமே தெரியாத, சரோஜாதேவியைப் பார்த்து, ‘ஆடப் பிறந்தவளே ஆடிவா..’ என்று எம்.ஜி.ஆர், பாடினாரே அதுபோல்தான் தரப்பட்டிருக்கிறது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்





கடலை, ‘சோ’, வாஞ்சி, ஆஷ், எதார்த்த சினிமா?,பிடித்தப் பாட்டு, வசனத்தில் கில்லாடி, கடவுளின் தைரியம்!

21 01 2012


ஆண்கள் அடிக்கடி கடலை போடுதல் என்கிறார்களே, அது என்ன கடலை போடுதல்?

-சுரேகா, சென்னை.

தன்னிடம் நட்பு ரீதியாக பழகும் பெண்களிடம், பாலியல் ரீதியாக பழகவும், பேசவும் விரும்பம் இருந்தும், அதற்கு வாய்பில்லாதபோது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சம்பந்தமில்லாமல் ‘அப்புறம்… அப்புறம்’ என்று எதையாவது பேசிக் கொண்டிருப்பதின் மூலம் அடைகிற கிளர்ச்சிக்கு, ஆண்கள் வைத்திருக்கிற பெயர் கடலை போடுதல்.

ஒரு பெண் சொல்லும் கருத்தில் தனக்கு உடன்பாடோ இல்லையோ… பலகாரத்தின் மேல் மொய்க்கிற ஈக்களைப் போல், ஆண்கள் கும்பலாக சுற்றி வந்து ‘ஆமாம்’ போடுவதும் இதன் பொருட்டே.

ஆண்கள், பெண்ணின் அறிவார்ந்த கருத்தை விடவும் அவளின் உருவத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நல்ல அறிவும் ஆளுமையும் கொண்டு பார்ப்பதற்கு ‘பரிதாபத்திற்குரிய’ தோற்றத்தோடு இருந்தால், அந்தப் பெண்ணை ஆண்கள் பெண்ணாகவே கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.

அதற்கு ஆண்கள் வைத்திருக்கிற பதில், ‘என்னடா கொஞ்சமாவது சுமாரா இருக்க வேணாமா?’

ஆண்களின் இந்த உருவ வழிபாட்டை, தனக்கான ‘முக்கியத்துவத்துமாக’ கருதுகிற சில பெண்கள், தன்னைவிட அழகான பெண்களை தனக்கு தோழியாகவோ,துணையாகவோ உடன் கூட்டி செல்ல விரும்புவதில்லை.

கூட்டி சென்றால், அப்புறம் என்ன, தோழியை நாயகியாக்கி, நாயகியை தோழியாக்கிடுவாங்க, ‘ஆண்கள்’.

 `உயர்ஜாதிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டணையாக மொட்டை அடித்துவிடவேண்டும்என்பதுதான் மனுநீதி வகுத்த சட்டமாமே?

-திராவிடன், விழுப்புரம்.

அய்யோ… அப்போ நடிகர் சோ மாதிரி ஆளுங்கள என்ன பண்றது?

முந்தைய இயக்குநர்களைவிடவும், இன்றைய இளம் இயக்குநர்களின் எதார்த்த திரைப்படங்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.

-கே.எஸ். சிவபாலன், திருநெல்வேலி.

பழைய, புதிய இயக்குநர்கள் அனைவருமே, சோற்றுக்குள் பூசிணிக்காயை அல்ல, இமயமலையையே மறைக்கிற அளவிற்கு பெரிய கில்லாடிகள்.

இந்திய, தமிழக கிராமங்கள் ஊரு வேறு சேரி வேறு என்ற பாகுபாட்டோடுதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் குளம், பொது சுடுகாடு, கிணறு, ஊர் கோயில் இப்படி பொது தளங்களுக்குள் இன்றுவரை அனுமதிக்கப்படுவதில்லை. அதில் தங்களின் உரிமையைக் கோரினால், அவர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்த்தப்படுகிறது.

இப்படி ஒரு பிரம்மாண்ட யதார்த்தம் சீர்கேடாய் முன் நிற்க, நம்ம டைர..டக்கர்கள் ஜாதி இந்துக்களின் குடியிருப்புகளான ஊரை மட்டுமே கிராமங்களாக காட்டுகிறார்கள். ‘சேரி’ என்று ஒன்று இருப்பது தங்களுக்கு தெரியாதது போல்தான் நடிக்கிறது அவர்களின் திரைக்கதை.

வட்டார வழக்குல வசனம் பேசறது, பொம்பளய விரட்டுறது, விபச்சாரம் செய்யறது, திருடறது, வப்பாட்டி வச்சிக்கிறது, சோறு திங்கறது, சொறிஞ்சிக்கறது, இதற்கிடையில் சுயஜாதி பெருமை பேசுறது, இதுதான் இவுங்க காட்டுற யதார்த்த சினிமா.

மற்றபடி ஊரும் சேரியுமாய் பிரம்மாண்டமாய் பிரிந்து இருக்கிற கிராமங்களை அப்படியே யதார்த்தமாக காட்டுற ‘தில்’லு ஒருத்தருக்கும் இல்ல.

கவியரசு கண்ணதாசனைப் பற்றிய உங்களின் மிக கடுமையான விமர்சனத்தை படித்திருக்கிறேன். அவர் பாடல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடிக்காதப் பாடல் என்றால் எதை சொல்வீர்கள்?

-எஸ்தர் ராஜன், சென்னை

‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டுதான் கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காதப் பாட்டு.

‘சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி? ’ என்று ஒரு பெண்ணைப் பார்த்து, பாடல் எழுதிய வாலி, தன் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாராம்.

அப்போது, ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டு காதில் ஒலிக்க, தன்னுடைய தற்கொலை முடிவை மாத்திக்கிட்டாராம் வாலி. JUST MISS.

கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?

-கே. தாமரை, விழுப்புரம்.

ஓ… கடவுளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்கா?

அதுவும் பெரியார் தொண்டன் முன்னால வர அளவுக்கு…

காலம் கெட்டு போச்சுங்க.

வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி?
-சுந்தரவடிவேலன். திருப்பூர்

வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை.

இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் மூட்டிய தீ திகு திகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது, அதில் ஒரு சுள்ளியை கூட எடுத்து போட்டவர் இல்லை வாஞ்சி.

ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல. வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது.

பார்ப்பன ஜாதி உயர்வுக்கும். அதை பாதுக்காக்கிற சனாதன தர்மத்திற்கும் எதிரானவர்களாக ஆங்கிலேயர்களை தவறாக புரிந்துகொண்டதால் ஏற்பட்ட கொலையும் தற்கொலையும் அது.

வெள்ளைக்காரர்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமையை கடைபிடிக்காமல் ராணுவம், சமையல் (மாட்டுக்கறியும் சமைப்பது) போன்ற தங்கள் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்தான், வாஞ்சிநாதன் போன்ற சனதனவாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கும், கோபத்திற்கும் காரணம்.

இதை நிரூபிப்பதுபோல், ஆஷை 17-6-1911  அன்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம், வாஞ்சியின் சனாதனத்திற்கு சாட்சியாக இருக்கிறது.
அதில்,

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்

எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது

அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.

இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்

கோ (பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு’ என்ற இந்த வரி, வாஞ்சிநாதனை சுதந்திர போராட்ட வீரனாக அல்ல, ஜாதி வெறியனாகத்தான் காட்டுகிறது.

வெள்ளைக்காரனை திட்டுவதற்குக்கூட, தாழ்த்தப்பட்டவரை (பஞ்சமன்) இழிவான குறியிடாக பயன்படுத்துகிற, புத்திக்குப் பேர்தான், விடுதலை உணர்வா? தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியர்கள் இல்லையா?

காந்தியை கோட்சே என்ன காரணத்திற்காக கொன்றானோ, அதுபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான் ஆஷை வாஞ்சிநாதன் கொன்றான்.

நல்ல ஏற்ற இறக்கத்தோடு, அழுத்தம் கொடுத்து வசனம் பேசுவதில் சிவாஜிக்கு நிகர் அவர்தான். அவருக்குப் பிறகு இன்றைக்கு அப்படி வசனம் பேசுவதில் கில்லாடி என்று யாரை சொல்லுவீர்கள்?

-மீனாட்சி

இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனை.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

http://ebook.thangamonline.com/july2011/

தொடர்புடையவை:

காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

சந்திரபாபு, பின்லேடன், ஜாதியா? வர்க்கமா? விக்ரம்,கே.வி. மகாதேவன்

பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்

சிவாஜி-கமல்-சேரன்-இளையராஜா-எம்.எஸ்.வி-ராகுல் காந்தி

பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து





ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

20 01 2012

தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை ஆதிக்க சாதிக்காரர்கள்,  ஏன் எதிர்க்கிறார்கள்?

-க. மாயாண்டி, மதுரை.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகள் நடக்கிறது.

மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்பதினால்தான் அதை சைவ ஜாதி அறிவாளிகள் எதிர்க்கிறார்கள்.

ஆனால், இவைகள் எல்லாவற்றையும்விட இந்த ஜல்லிக்கட்டில் ஈடுபடும் இளைஞர்கள் உடல்ரீதியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிரையும் இழக்கிறார்கள். ஆகவே, அது தடை செய்யப்படுவதில் தவறு இல்லை.

மற்றப்படி, தமிழர்களின் ‘வீர’ விளையாட்டு, என்று சொல்லப்படுகிற ஜல்லிக்கட்டில், எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை என்பது இவை எல்லாவற்றையும்விட மோசமானது.

காரணம், ஒரு ஜாதி இந்துவின் மாட்டை, தாழ்த்தப்பட்டவர் அடக்கிவிட்டால், அதை அவமானமாக கருதுவார்கள், ஜாதி இந்துக்கள்.

ஏனென்றால், ‘தாழ்த்தப்பட்ட மக்களைவிடவும் தங்கள் மாடுகள் மேன்மையானது’ என்கிற எண்ணம் ஒவ்வொரு ஜாதி இந்துக்குள்ளும் இருக்கிறது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு





கொலவெறி பாடலில் யாரை சொல்கிறார்; சூப்பர் ஸ்டாரையா உலக நாயகனையா?

18 01 2012

‘கொலைவெறி’ பாடல் பற்றி, ஏன் எழுதவில்லை?

-வெ. பாலாஜி, சென்னை.

ஏன் எழுதணும்? அப்படிங்கறதனாலதான் எழுதல.

‘ஏன் இந்த கொலவெறி?’ நடிகர் வடிவேலுவால் புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை அவரிடம் இருந்து திருடி, ‘வொய் திஸ் கொலைவெறி’யாக மாற்றி இருக்கிறார்கள்.

யாரு வேண்டுமானாலும் எளிதில் பாடிவிட முடிகிற, பேசுவது போன்றே அமைந்த பாடல். பொறுப்பற்று. ஊதாரித்தனமாக இருப்பதை நியாயப்படுத்துகிற வார்த்தைகள். ஆங்கிலம் தெரியாதவர் எப்படி ஆங்கில வார்த்தைகளை கொச்சையான முறையில், பயன்படுத்துவாரோ அதுபோன்ற மொழி நடை.

இந்த நடை இந்தியா முழுக்க பெரும்பான்மையானவர்களால், பேசப்படுகிற, புரிந்துகொள்ளப்படுகிற நடை. இவைகளால்தான் அந்த பாடல் ‘இந்திய தேசிய பாடலாக’ நாடு முழுவதும் பிரபலமாகியிருக்கிறது.

எல்லா மதக்காரர்களும் தாங்கள் வணங்குகிற கடவுள் பற்றிய பக்திப் பாடல்களில் தரக் குறைவான, பொறுப்பற்ற வார்த்தைகள் வந்தால், கெலைவெறி கொள்கிற அளவிற்கு மாறிவிடுவார்கள்.

இப்படி, தங்கள் இறை நம்பிக்கையில் ஒழுக்கமானவர்களாக, நேர்மையானவர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், சமூகம் சார்ந்து வியாபாரம், அரசியல், சினிமா, பத்திரிகை, திரை இசை என்று வருகிறபோது அதில் எவ்வளவு சீர்கேடுகள் இருந்தாலும், அதை பொறுத்துக்கொள்கிறார்கள், விரும்புகிறார்கள். பல நேரங்களில் அந்த சீர்கேடுகளை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள், என்பதை நிரூபிக்கிறது இந்தப் பாடல்.

பிரதமர் மன்மோகன் சிங் நடிகர் தனுசுக்கு கொடுத்த விருந்தின் மூலம் அந்த முறையை அங்கீகரித்திருக்கிறார். இனி, இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கன மன’ வையும் தனுஷை வைத்து, இதுபோன்றே பாட வைக்கப்பாரோ!.

குறிப்பு:

‘சூப்பர் ஸ்டாரின் மருமகன், உலக நாயகனின் மருமகனாக மாறுகிற முயற்சிகளில் இருக்கிறார்’ என்று வருகிற பத்திரிகை செய்திகளைப் பார்த்தால், தனுஷ் மீது ரஜினிதான் ‘கொலவெறி’யில் இருப்பார் போல.

அதுசரி. பாடலுக்கு இடையில் தனுஷ், “மாமாநோட்ஸ் எடுத்துக்கோஅப்படியே கையில ஸ்னாக்ஸ் எடுத்துக்கோ..” என்று யாரை சொல்கிறார்?

சூப்பர் ஸ்டாரையா? உலக நாயகனையா?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்





காந்தியம்; காந்தியிடமே இல்லை..

14 01 2012

காந்தியைப் பற்றிய உங்கள் நூலில்; காந்தியை பெரியார், அம்பேத்கர் பார்வையில் அணுகி, அந்த மூன்று கேள்விகளை கேட்டிருக்கிறீர்களா?

-கனல்

காந்தியை, காந்தியப் பார்வையிலேயே கேட்டிருக்கிறேன்.

தொடர்புடையவை:

மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

காந்தி – நண்பரா துரோகியா?

காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்..

*

புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, கருப்பு பிரதிகள்,  தடாகம், புலம், முரண்” கடைகளில் கிடைக்கும்.

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384





காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்..

13 01 2012

உங்களது கேள்விகளை தெரிந்து கொள்ளலாமா?

-R.Puratchimani  

ரொம்ப அதிகமில்லை ஜென்டில்மேன். மூணே கேள்விகள்தான்.

*

 ‘காந்தி – நண்பரா துரோகியா?’ புத்தகத்திலிருந்து….

தன் பொதுவாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் கருப்பர்-வெள்ளையர் இனப் பிரச்சினையில் இருந்தே துவங்கியதாக காந்தியே குறிப்பிடுகிறார்.

அதற்கு ஆதாரமாக ரயிலில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை சாட்சியாக்குகிறார்.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் ‘மாரிட்ஷ்பர்க்’ ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல; ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்று காந்தியின் எழுத்துக்களில் இருந்தே நான் நிரூபித்திருக்கிறேன்.

அது சம்பந்தமாக நான் எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, அதன் பிறகு காந்தியை ஆதரிக்கட்டும், பரிந்துரைக்கட்டும் அறிவாளிகள்.

மாறாக, பாரதி பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பதுங்கி கொண்டதைப் போல் செய்வார்களேயானால்…

*

புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, கருப்பு பிரதிகள், அலைகள், தடாகம், புலம், முரண்” கடைகளில் கிடைக்கும்.

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையது:

மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

காந்தி – நண்பரா துரோகியா?





காந்தி – நண்பரா துரோகியா?

12 01 2012

காந்தியை சாட்சியாக வைத்தே,காந்தியின் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறேன்.

இரண்டில் ஒன்று முடிவு காண வேண்டும்.

ஒன்று என் கேள்விகளுக்குரிய பதில்களைச் சொல்லி, என்னை காந்தியவாதியாக மாற்ற வேண்டும்.

முடியவில்லை என்றால், அவர்கள் காந்தியை விட்டொழிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்து தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இவைகளோடு காந்தியத்தையும் கலந்து பேசுபவர்களில் இருந்து, கதை எழுதும் காந்திய இலக்கியவாதிகள், காங்கிரஸ்காரர்கள் உட்பட,

கதர் காந்தியவாதிகள் முதல், கார்ப்பரேட் காந்தியவாதிகள் வரை சகலவிதமான காந்தியவாதிகளுக்கும் இதை சவாலாக சொல்கிறேன்.

ஆட்டத்திற்கு நான் ரெடி.

 நீங்க ரெடியா?

*

புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, கருப்பு பிரதிகள், அலைகள், தடாகம், புலம், முரண்” கடைகளில் கிடைக்கும்.

தொடர்புக்கு

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையது:

மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..





மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

11 01 2012

புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, கருப்பு பிரதிகள், அலைகள், தடாகம், புலம், முரண்” கடைகளில் கிடைக்கும்.

தொடர்புக்கு:

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384








Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers