காந்தி படுகொலையும் அப்பாவி பார்ப்பனஅகிம்சாமூர்த்திகளும்

10 02 2010

‘காந்தி படுகொலை நினைவுநாளை ஒட்டி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதை தனி தனியாக நான்கு பகுதிகளாக வெளியிட்டு இருந்தேன். முதலில் இருந்து சேர்ந்தார்போல் படிப்பதற்காக அதை முழுமையாக்கி ஒரே தலைப்பில் வெளியிட்டு இருக்கிறேன்.

ந்தக் கூட்டம் காந்தியை ஆதரிக்கிற கூட்டமல்ல. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள், காந்தியை ஆதரிக்க முடியாது. கூடாது.

அப்படின்னா இது என்ன கூட்டம்?

காந்தியை கொன்ன பார்ப்பன பயங்கரவாதிகளை கண்டிக்கிற கூட்டம். பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவிடம் சேத்துபட்டு போலிசார் கோட்சேவைபோல் நடந்துகொண்டதை கண்டிக்கிற கூட்டம். அப்படிதான் இதுநடந்துகிட்டு இருக்கு.

காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதிராக கருதி கொன்றார்கள் என்பதால்.  காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடுமையாக எதிர்த்த பெரியார்தான் காந்தி தேசம் என்று பெயர் வைக்கச் சொன்னார்.

காந்தி கொலைக்கு முன்னும்  பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சியின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு,  காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங்கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர்கள் அல்லது புரட்சிகர இளைஞர்கள் காநதியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்குரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத்தால் வெல்லமுடியாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.

ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், ‘கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.

பெரியார்-காந்தி சந்திப்பின்போது, ‘பிராமணர்கள் யாருமே சரியில்லை என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஒரே ஒரு பிராமணர் கூடவா சரியில்லை என்கிறீர்கள்’ என்று பெரியாரிடம் கேட்டார் காந்தி.

அதற்கு பெரியார், ‘எனக்கு ஒருத்தர்கூட நல்லவரா தெரியல’ என்றார்.

‘கோபால கிருஷ்ண கோகுலேகூடவா நல்லவர் இல்ல’ என்று திருப்பி கேட்கிறார் காநதி.

பெரியார், ‘உங்களைப் போன்ற மகாத்மாவிற்கே ஒரு பார்ப்பனர்தான் நல்லவராக தெரிகிறார்….’ என்று பதில் அளித்திருக்கிறார்.

அதுபோல், ‘தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலைக்கு இந்துமதம்தான் காரணம்’ என்று இந்து மதத்தை, வேதத்தை அம்பலப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும என்று அம்பேத்கர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து, காந்தி தனது அரிஜன் என்ற பத்திரிகையில், ‘இந்து மதத்தில் யாரோ சிலர் செய்த தவறுக்காக இந்து மதத்தையே குறை சொல்வது தவறு. இந்து மதத்திற்குள் இருந்துகொண்ட அதை திருத்தம செய்யவேண்டும்’ என்று அம்பேத்கருக்கு மறுப்பு எழுதுகிறார்.

அதற்கு பதில் எழுதும்போது அம்பேத்கர், “சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. எனது எதிராளி ஒரு ‘அனாமதேய ஆத்மா‘வாக இருந்திருந்தால், நானும் போனால் போகட்டும் என விட்டிருப்பேன். ஆனால், ‘மகாத்மாவே’ என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.” என்று காந்தியை கந்தலாக்கி தொங்க்கவிட்டிருப்பார் டாக்டர் அம்பேத்கர்.

பதில்களின் மூலமாகவே  அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு காந்தியிடம் இருந்து பதிலே இல்லை.

இப்படி பார்பபனர்களுக்கும், இந்து மதத்திற்கும் காவடி தூக்கிய காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

நந்தனாரும் வள்ளலாரும்

பெரியாரும் அம்பேத்கரும்

பார்ப்பனர்களுக்கு விசுவாசமுள்ளவராக இருந்த காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

இதற்கான முடிச்சு தமிழ்நாட்லதான் இருக்கு.

நந்தனாரை, வள்ளலாரை எதற்கு கொன்றார்களோ அதற்காகவேதான் காந்தியையும் கொன்றார்கள்.

இந்து மதத்திற்குள் இருந்துகொண்டே ஜாதிக்கு எதிராக பேசுவது, இந்து மதத்திற்குள் பார்ப்பனர்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை செய்ய முயற்சிப்பது, இந்து மதத்திற்குள் தனது உரிமையை கோருவது, இந்துமதத்திற்குள் பார்ப்பனியத்திற்கு எதிராக சமயநல்லிணக்கத்திற்கு முயற்சிப்பது இதுபோன்ற எந்த செயலையும் பார்ப்பனர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி தீவிரமாக இயங்குபவர்களை ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து சோரம் போக வைப்பார்கள். அதையும் மீறி முயற்சிப்பவர்களை கொலை செய்து விடுவார்கள்.

அப்படித்தான் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்த வள்ளலாரை ஜோதியில் கலந்தார்கள். சிவனை தரிசிக்க, சிவன் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பாடாய்படட நந்தனை கொளுத்தினார்கள்.

பெரியபுராணத்தில் வருகிற நந்தன் கதை அதைத்தான் உணர்த்தியது, எச்சரித்தது.

சமணம், புத்தம் சமயங்களால் வீழ்ச்சியுற்ற சைவசமயத்தை, பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்யவந்ததே பெரியபுராணம். அதனால்தான் அதில் வருகிற 63 நாயன்மார்கள் கதாபாத்திரங்களையும், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி அவர்களை முன்னுறுத்தி, சைவசமயத்திற்குள் அய்க்கியபடுத்தி எழுதப்பட்டது.

எல்லா ஜாதியைச் சேர்ந்த நாயன்மார்களுக்கும் காட்சி தரும்போது சிவன் பார்ப்பன உருவம் கொண்டுதான் காட்சி தந்திருக்கிறான். குயவருக்கு காட்சி தந்தால் குயவராகவோ, இயற்பகை நாயனார் என்கிற செட்டியாருக்கு காட்சி தரும்போது செட்டியாராகவோ கூட வரவில்லை. பார்பபன உருவம் கொண்டுதான் வந்திருக்கிறான். காட்சி தந்திருக்கிறான்.

கடவுள் பார்ப்பன உருவத்தில்தான் வருவானே தவிர சூத்திர உருவத்தில் வருவது அவனுக்கு இழுக்கு. பார்ப்பன உருவத்தில் வருவான், பன்னி அவதாரத்தில்கூட வருவான். ஆனால், சூத்திரர் உருவத்தில்வரமாட்டான். அது கடவுள் தன்மையின் புனிதத்திற்கு எதிரானது என்று உணர்த்துவதின் மூலம் பார்ப்பன மேன்மையை அதன் மூலமாக பார்ப்பன நலனை பாதுகாப்பது என்ற அழுத்தமான உள்ளர்த்ததோடு  எழுதப்பட்டது.

சூத்திரர்களுக்கு  எல்லாம் பார்ப்பன உருவத்தில் வந்து காட்சி தந்த சிவன், அப்படிக்கூட நந்தனார் என்கிற தாழ்த்தப்பட்டவருக்கு மட்டும் நேரில் வந்தும் காட்சி தரவில்லை. கனவிலும் வரவில்லை.

சைவசமயத்திற்கு ஆள் பிடிக்கும் பிரச்சார முயற்சியில்கூட, தாழ்த்தப்பட்டவரை அங்கீகரிக்கிற தன்மையில் இல்லாமல், ‘புனிதமாக அவமானப்படுத்துகிற’, அங்கேயும் தீண்டாமையை கடைப்பிடித்து, ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படி பிறஜாதி மக்களைபோல் இறைவனை வழிபட நினைப்பது கூடாது’ என்கிற கருத்தையும உள்ளடக்கிதான் நந்நனார் காதாபத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மற்ற ஜாதிக்காரர்களுக்கு காட்சி தந்த சிவன், நந்தனாருககு காட்சிதரவில்லை என்பது மட்டுமல்ல, நந்தனாரின் வேண்டுகோளுக்கு அவர் கனவில் வந்து பதில் சொல்லாமல், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் வந்து பதில் சொல்லியிருக்கிறான்.

தில்லைவாழ் அந்தணர்கள் அதான் தீட்சிதப் பார்ப்பனர்கள் நந்தனிடம், “சிவன் எங்கள் கனவில் வந்து சொன்னான். உன்மீது உள்ள தீண்டாமை என்கிற இழிவு நீங்கவேண்டுமானால், நெருப்பில் இறங்கி உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நெருப்பில் இறங்கி வெளியே வந்தால், நீ தூய்மையாகிவிடுவாய். உன்னை சிவன் ஏற்றுக்கொள்வான்.“ என்று சொல்லியிருக்கிறார்கள். நெருப்பில் இறங்குனப் பிறகு எங்க வெளியே வருவது? நந்தனின் கதையை இப்படித்தான் முடித்தார்கள் பார்ப்பனர்கள்.

ஆக, இந்துமதத்திற்குள் இருந்துகொண்டு, அல்லது இந்துமதத்தை ஒத்துக்கொண்டு பார்ப்பனியத்திற்கு எதிராக தன்னை அறியாமல் உண்மையான பக்தியோடு இயங்கினால்கூட கொலை செய்துவிடுவோம் என்பதாக எச்சரிப்பதுதான் நந்தன் கதை.

2000 ஆம் ஆண்டுகால வரலாற்றில், பார்ப்பனியத்தை இந்து மதத்திற்குள் இருந்துகொண்டு, ‘சிவன் நம் கடவுள், கண்ணன் நம் கடவுள்’ என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் யாரும் ஜெயித்ததில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் சைவசமயம் நம்முடையது. சிவன் நம்கடவுள் என்று முழங்கிய பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களின் கோமாளித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனியத்தின் இன்னொரு நுட்பமான வடிவமான சுயஜாதி பிரியத்திற்குள் சிக்கி மீண்டும் பார்ப்பனியத்திடமே சரணடைந்தது.

இந்தப் பார்ப்பன அல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களைப் போல் அல்லாமல், வள்ளலார் தனித்து இயங்கினார். அவரும் பார்ப்பனியக் கடவுளின் ஆதரவு நிலையில் இருந்து பார்ப்பனியத்தை எதிர்த்தார். அவருக்கும் சிவலோக பதவியைத்தான் தந்தார்கள் பார்ப்பனர்கள்.

அகம் வேறு, பிரம்மம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல், பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்.  இதை புரிந்துகொண்டு பார்ப்பனியத்தோடு துண்டாக கோடு கிழித்து எதிர்நிலையில் நின்றவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர், ‘பார்ப்பனியம்தான் வேதம். வேதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் போராடியதால்தான் ஜெயித்தார்.

2500 ஆண்டுகள் தாண்டி புத்தருக்கு பிறகு, ‘பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் நின்று பார்ப்பனியத்தோடு மோதிய பெரியாரும், அம்பேத்கராலும்தான் பார்ப்பனியத்தின் தோலுரிக்க முடிந்தது.

‘யார் ரவுடி?’கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார்,

உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது காந்தி, இந்துமதத்திற்குள் இஸ்லாமிய ஆதரவு நிலையை கடைப்பிடித்தார். இது பார்ப்பனர்களின் கோபத்தை தூண்டுவதாக இருந்தது. அதற்குதான் காந்திக்கு ‘செக்ட்ச்’ போட்டார்கள் பார்ப்பனர்கள்.

இதை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், காந்தி கொலைவழக்கில் கைதாகி, கோர்ட்டை தன்னுடைய பிரச்சார மேடையாக பயன்படுத்திய கோட்சேவின் கோர்ட் பேச்சே சாட்சி.

“பிரிவினைக்கு பிறகு காந்தி பாகிஸ்தானுக்கு 50 கோடிரூபாய் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். அதைக்கூட பொறுத்துக்கொண்டோம். ஆனால், இந்துக்கோயில்களில் பிரார்த்தனையின்போது, இஸ்லாமிய பாங்கு ஓசை ஒலிக்கச் செய்தார். அதை மன்னிக்கவே முடியாது. அதனால்தான் கொன்றேன்” என்றான் கோட்சே. இதை அவன் தெருவில் சொல்லவில்லை. தன்னை குற்றவாளியாக நிறுத்திய கோர்ட்டில் துணிச்சலோடு பேசிய பேச்சு.

சாந்த சொரூபிகளாக அப்பாவியாக காட்சி தருகிற பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டின் காரணமாக  உயர்கல்வியில், வேலை வாய்ப்புகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆபத்து வரும்போதும், கோயில்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களால், பார்ப்பனர்களின் ‘புனித’த் தன்மைக்கு பாதிப்பு வரும்போது, கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். பார்ப்பனியத்தின் ரவுடித்தனத்தை அப்போது நன்கு உணரலாம்.

ஒருத்தர் அந்த ஏரியாவுலேயே பெரிய ரவுடியா இருப்பாரு, அவர பாத்தாலே பார்ப்பனர்களில் இருந்து எல்லா ஜாதிமக்களும் பயந்து ஓடி ஒளிந்துகொள்வார்கள். அவரு எங்கவேணுன்னாலும் போவாரு, என்ன வேணுன்னாலும் கேக்கமலே எடுத்துப்பாரு, யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. கேட்டா வெட்டுதான்.

எலலாத்துக்கும் துணிஞ்ச ரவுடியை கோயில் கர்ப்பகிரகத்திற்குள் நேராஉள்ளபோய், ரவுடித்தனத்தோடு இல்ல, பக்தியோடகூட சாமிய தொட்டு கும்பிட சொல்லுங்களேன் பாக்கலாம். அப்போதெரியும் உண்மையான ரவுடி யாருன்னு? அப்போ வெட்டு ரவுடிக்கு விழும். வெட்டுனது சாந்தசொரூபிகளான பார்ப்பனர்களாக இருப்பாங்க.

இந்தியாவின் மாபெரும் தலைவராக இருந்தார் காந்தி. அவர் அளவிற்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றத் தலைவர்கள் அவருக்கு முன்பும்  யாருமில்லை. பின்பும் யாருமில்லை. பிரிட்டிஷ் அதிகாரத்தின் உச்சியில் இருந்த மவுண்பேட்டன் போன்ற வெள்ளைக்காரன் கூட காந்தியை பார்த்தால், எழுந்து நின்னு கூம்பி்ட்டான். ஆனால்,  இந்த செல்வாக்கு எல்லாம், இந்துக் கோயிலுனுல் செல்லாது. அங்கே காந்தி கைகட்டி ஒரு முட்டாள் பார்ப்பான் முன்னால் நிக்கனும். அதைமீறி நடந்தால் சாகனும். அப்படித்தான் சாகடிக்கபட்டார் காந்தி.

இந்துக் கோயிலுனுள், இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்ததால், என்ன புனிதம் கெட்டுபோய்விட்டது? புனிதம் கெட்டுப்போய்விட்டது என்று தீர்மானிப்பதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? காந்தியும் இந்துதான். அதுவும் இந்துமதத்தையும் ராமனையும் தன் கண்களாக கருதியவர்தான் காந்தி. அவருக்கு தெரியாத இந்துமதப் புனிதமா?

‘இஸ்லாமிய பாங்கு ஒலித்ததால் இந்துமத புனிதம் கெட்டுபோய் விடடது’ என்கிற உண்மையான இந்துவின் மத உணர்வில் இருந்துதான் காந்தியை பார்ப்பனர்கள் கொன்றார்களா? அப்படியானால், அதுஏன் பார்ப்பனர்களை தவிர மற்ற ஜாதி இந்துக்களுககு தவறாக தெரியவில்லை.?

சரி. அப்படியானால் இந்துக் கடவுள்களை போற்றி, சமஸ்கிருதத்தை தவிர தமிழ் போன்ற மற்ற மக்கள் மொழிகளில் அர்ச்சனை செய்ய ஏன் மறுக்கிறார்கள்?

சிவனை போற்றிபாடுகிற தேவாரம், திருவாசகத்தை கோயிலுனுள் பாடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? திருவாசகமும், தேவராமும் என்ன அரபு மொழியில் அல்லாவை பற்றிய பாடல்களா?

பார்ப்பன நலனேயே பிரதானமாக கொண்டதாக அல்லது பார்ப்பன ஆதரவாக இருந்தாலும் தேவாரத்தையும், திருவாசகத்தையும் கருவறை அர்ச்சனைபாடலாக பாட பார்ப்பனர்கள் ஏன் மறுக்கிறார்கள்? அவைகள் தமிழில் இருப்பதாலா?

உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால், ஜெயேந்திரன் கொலை செய்தபோதும், காமகளியாட்டத்தில் ஈடுபட்டபோதும், காஞ்சிபுரத்தில் ஒரு பார்ப்பனர் கோயில் கருவறையை, ‘கரு’ உண்டாக்கும் அறையாக மாற்றியபோதும் பார்ப்பனர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? வீதியில் இறங்கி போராடவில்லை. இந்து மத புனிதத்தின்படியே ஒரு பார்ப்பனரல்லாதவர் கருவறைக்குள் நுழைவதைவிட புனிதக்கேடு இல்லையா இது? இல்லை அதுதான் உண்மையான புனிதமோ?

“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான வேதமும் அதன் தொடர்ச்சியான இந்துமதமும் எந்த மாறுதலுக்கும் உள்ளாக்கப்பட முடியாதது. கூடாது” என்று பார்ப்பனர்கள் சொல்வது உண்மைதானா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் டாக்டர் அம்பேத்கரிடம்தான் போகவேண்டும்.  அவரிடம்தான் பார்ப்பனியத்தின், வேதங்களின், புராணங்களின், ஆகமங்களின், இதிகாசங்களின் மிக நுட்பமான மர்ம முடிச்சுகளை அவி்ழ்த்து அம்பலப்படுத்துவதற்கான ‘மந்திரம்’ இருக்கிறது.

பனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்!

பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!

கோயில்களில், இந்து மதத்திற்குள் தங்களுக்கான ஆதிக்கத்திற்கு, லாபத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் பார்ப்பனர்கள் கொலைகூட செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைதான் காந்தி கொலை நிரூபித்திருக்கிறது.

தனக்கு இணையாக அல்லது தன்னை எதிர்த்து ஒரு பெரிய தலைவர் உருவாவதை காந்தி எப்போதும் விரும்பியதில்லை. அது கட்சிக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய பகத்சிங் போன்ற புரட்சியாளர்களிடம் மட்டுமல்ல, ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளின் உதவியை நாடிய சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களிடமும் கூட எதிராக அல்லது அலட்சிமாகத்தான் நடந்துகொண்டார் காந்தி.  டாக்டர் அம்பேத்கருடனான அவரின் மோதல்களில், அவருடைய இந்து கண்ணோட்டம் மிக பெரிய அளவில் பங்காற்றினாலும், ‘தன்னை மீறி, தன்னை நேரடியாக எதிர்த்து ஒரு தலைவர் உருவாகக்கூடாது’ என்கிற காந்தியின் உளவியலும் சம பங்கில் வினையாற்றியிருக்கிறது.

அவர் என்ன நினைக்குறாரோ, அதைத்தான் மற்றவர்கள் செய்யவேண்டும். அல்லது தன்விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது என்கிற சத்தியாகிரக சர்வாதிகாரியாகத்தான் காந்தி இந்திய அரசியலை நடத்தியிருக்கிறார். 1946 ல் இருந்து அவரின் செல்வாக்கு காங்கிரசுக்குள்ளேயே சரிய ஆரம்பித்தது. அவர் கட்சியில் இருந்த நேரு, பட்டேல் போன்றவர்களே அவர் பேச்சை உதாசீனப்படுத்தினார்கள். அவர் விருப்பத்திற்கு மாறாகவே அவரின் அரசியல் அவரை சுற்றி, சுற்றி சுழன்றது. தன் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கோமாளித்தனங்களை செய்தார் காந்தி.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை எதிர்த்தார். ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்தது. பிறகு பிரிந்த பாகிஸ்தானுக்கு 50 கோடி ரூபாய் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். அதை நிராகரித்தார் வல்லபாய் பட்டேல். இந்து-முஸ்லீம் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. காந்தியை எதிர்த்த காங்கிரஸ் தலைமை பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கிறது என்பதாலயே அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தார். அதன் மூலமாக நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.

இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரித்த பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன் முனைப்பு அரசியலின் விளைவாக அவரை அறியாமல் முளைத்த முற்போக்கு கிளை அது. பார்ப்பனிய பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கு சரியான செயல் திட்டம் இல்லாமல், இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது போன்ற கோமாளித்தனங்களை செய்தார். அதில் அவர் நோக்கம் இந்துமதத்தை அவமானப்படுத்தவேண்டும் என்பதல்ல.  இந்துமதத்தை அவமானப்படுத்தும், பலவீனப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மனம் அறிந்து செய்ததில்லை காந்தி.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல’ என்று டாக்டர் அம்பேத்கர் ஆதாரத்துடன் நிரூபித்தபோது, ‘ஹரிஜன்’ என்ற பச்சையான இந்து பெயர் வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ஒற்றைச் சொல்லாகவே ‘ஹரிஜன்’ இந்துச் சொல்லை அவர்கள் மீது திணித்து, மீண்டும் இந்துமதத்திற்குள் அடைத்தார். இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ‘ஹரிஜன்’ என்ற சொல் செல்வாக்கு செலுத்திய அளவிற்கு வேறு எந்த சொல்லும் செலுத்தவில்லை. ஜாதி இந்துக்களும் அந்தச் சொல்லையே தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பதற்கு பயன்படுத்தினர். பயன்படுத்துகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாற்றத்தை தடுக்க பெரும் முயற்சி எடுத்த இந்து பார்ப்பன மற்றும் ஆரியசமாஜ்களால் செய்யமுடியாததை காந்தி என்கிற தனிமனிதர் செய்தார்.

“காந்தியிசம் என்பது இந்துயிசத்திற்கும் இந்துயிசத்தின் வறட்டு சூத்திரங்களுக்கும் ஒரு தத்துவ முறையிலான நியாயப்படுத்துதலே” என்பார் அண்ணல் அம்பேத்கர். அந்தக் காந்திதான் இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்தார். அந்தக் காந்தியைத் தான் இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் கொன்றனர்.

உண்மையில், இந்துக்கோயிலில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது இஸ்லாத்தை அவமானப்படுத்துகிற செயல். பாங்கு ஒலிப்பது என்பதே தொழுகைக்கு அழைப்பதுதான். இந்துக்கோயிலினுள் பாங்கு ஒலித்தால் முஸ்லிம்களை அங்குவந்து தொழுகை நடத்த அழைப்பது போன்றதுதான்.

‘உருவவழிபாடு, இறைவனுக்கு இணைவைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது’ என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. காந்தியின் இந்துக்கோயில் பாங்கு ஒலி, இஸ்லாத்திற்கு எதிரானதுதான். உண்மையில் தங்கள் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று முஸ்லீம்கள் தான் காந்திமீது வீரோதம் கொண்டிருக்கவேண்டும்.

இஸ்லாத்தை அவமானப்படுத்துவது காந்தியின் நோக்கம் அல்ல. பிரச்சினையை தீர்ப்பதற்கும், ‘இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான்’ என்று காந்தி நிறுவுகிறார் என்று காந்தியை இஸ்லாமியர்கள் நம்பினார்கள். சாதாரண இந்து நம்பிக்கை கொண்ட மக்களும் காந்தியின் செயல் நம் மதத்திற்கு எதிரானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். இந்து பார்ப்பன அறிவாளிகள் தான் இதை எதிராக நினைத்தார்கள். மதப் புனிதம் கெட்டுப்போய்விடுகிறது என்று பொய்சொன்னார்கள்.

உண்மையில் காந்தியின் கொலை இந்து மதப்புனிதத்திற்காக அல்ல. இந்துக்கோயில்களில் பார்ப்பனிய மேன்மையை காலப்போக்கில் காலி செய்துவிடும் என்பதால்தான். இயல்பாகவே பார்ப்பனர்களைத் தவிர மற்ற இந்துக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களான மசூதி, தர்கா போன்ற இடங்களில் அங்கு இருக்கும் இஸ்லாமிய மதப்பெரியவரிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஒரு இந்து சாமியாரிடம் காட்டும் பக்தியோடும், நம்பிக்கையோடுமே நடந்து கொள்வார்கள்.

இதுபோன்ற மனநிலை கொண்ட ‘இந்து’ மக்களிடம், காந்தியின் ‘இந்துக்கோயில் பாங்கு ஒலி’  நடவடிக்கை பார்ப்பனிய மேன்மையை தகர்ப்பதாக தீவிர இந்து பார்ப்பனர்கள் உணர்ந்ததாலேதான், காந்தி கொலையை அவர்களின் பிரதிநிதியாக இருந்து கோட்சே செய்தான்.

“இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது.  இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.” என்று காந்தியை கொன்ற கோட்சே கோர்ட்டில் சொன்னான். இதுதான் இந்து பார்ப்பன மனது.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார்:

“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”

டாக்டர் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி. காந்தி கொலையை பார்ப்பன கும்பல்தான் செய்தது என்று வரலாற்று சம்பவத்தை நாம் சொன்னால், உடனே நம்மீது பாய்ந்து புடுங்குகிற பார்ப்பனர்கள், காந்தி கொலையை, கோட்சேவை கண்டிப்பத்தில்லை. மாறாக நம்மைதான் கடும் வெறுப்புக் கொண்டு புடுங்குகிறார்கள். விட்டால் கோட்சேவை போல் கொலைகாரனாகவும் மாறுவார்கள்போல.

‘இந்து மதம் புனிதமானது. எந்த மாற்றமும் அதில் செய்யமுடியாதது. மசூதியில் பகவத்கீதையை பாடினால் சும்மா இருப்பாங்களா? காந்தியால் இந்துமதப் புனிதம் கெட்டுபோனது. அதனால்தான் கோட்சே கொன்றார்’ என்று வாதிடுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகள். அப்படியா? இந்து மதம் புனிதமானதா? எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாததா?

இந்தவாதம் பச்சை பொய் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது” என்கிறார்.

புத்தரின் எழுச்சியால் தோல்வியுற்ற பார்ப்பனர்கள், தங்களின் வேதக் கடவுள்களை கும்பிடுவதை கைவிட்டார்கள். புத்தரின் இயக்கத்தால் வேதக் கடவுள்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்று போனதே அதற்கு காரணம். அதனால்தான் தங்களால் உயர்வாக பேசப்பட்ட கடவுள்களை குறித்தே மிக கேவலமான கதைகளை அவர்களே பரப்பினார்கள். ‘பிரம்மா தன் மகளுடன் உறவு கொண்டார்’ என்றும் ‘இந்திரன் பெண் பித்தன். பிறர் மனைவியை அதுவும் மரியாதைக்குரிய ரிஷி பத்தினிகளோடு கள்ளஉறவு வைத்திருந்தான்’ என்றும் எழுதி தங்களின் கடவுளை கைவிடுதற்கான காரணத்தை உண்டாக்கினார்கள் என்ற உண்மையை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.

“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரம்மாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.

பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”

இந்து மதத்திற்கு புனிதம் என்று ஒன்று கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள்.  மாறாது என்கிற வார்த்தையை தவிர மற்றவை மாறிப்போகும் என்கிற மார்க்கிய விஞ்ஞானத்திற்கு பொருத்தமாக ஏகப்பட்ட மாற்றங்களை இந்து மதம் செய்திருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஆக, இந்து மத புனிதத்திற்காக அல்ல காந்தி கொலை. பார்ப்பன மேலாதிக்கத்தை பாதுக்காப்பதற்கே.

காந்தியின் துரோகம் தெரியவேண்டும் என்றால், அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்க வேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதம் புரியவேணடு்ம் என்றால், காந்தியின் கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்.

காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்.

காந்தியை கொலைசெய்த பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்.

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறுத்தியதை கண்டித்தும்’ பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.

மேடையில் பேசியசெய்திகளோடு, புதிய செய்திகளையும் சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.





பனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!

8 02 2010

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2

‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய் - 3

பகுதி -4

கோயில்களில், இந்து மதத்திற்குள் தங்களுக்கான ஆதிக்கத்திற்கு, லாபத்திற்கு ஆபத்து வருகிறது என்றால் பார்ப்பனர்கள் கொலைகூட செய்ய தயங்கமாட்டார்கள் என்பதைதான் காந்தி கொலை நிரூபித்திருக்கிறது.

தனக்கு இணையாக அல்லது தன்னை எதிர்த்து ஒரு பெரிய தலைவர் உருவாவதை காந்தி எப்போதும் விரும்பியதில்லை. அது கட்சிக்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய பகத்சிங் போன்ற புரட்சியாளர்களிடம் மட்டுமல்ல, ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளின் உதவியை நாடிய சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களிடமும் கூட எதிராக அல்லது அலட்சிமாகத்தான் நடந்துகொண்டார் காந்தி.  டாக்டர் அம்பேத்கருடனான அவரின் மோதல்களில், அவருடைய இந்து கண்ணோட்டம் மிக பெரிய அளவில் பங்காற்றினாலும், ‘தன்னை மீறி, தன்னை நேரடியாக எதிர்த்து ஒரு தலைவர் உருவாகக்கூடாது’ என்கிற காந்தியின் உளவியலும் சம பங்கில் வினையாற்றியிருக்கிறது.

அவர் என்ன நினைக்குறாரோ, அதைத்தான் மற்றவர்கள் செய்யவேண்டும். அல்லது தன்விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கக்கூடாது என்கிற சத்தியாகிரக சர்வாதிகாரியாகத்தான் காந்தி இந்திய அரசியலை நடத்தியிருக்கிறார். 1946 ல் இருந்து அவரின் செல்வாக்கு காங்கிரசுக்குள்ளேயே சரிய ஆரம்பித்தது. அவர் கட்சியில் இருந்த நேரு, பட்டேல் போன்றவர்களே அவர் பேச்சை உதாசீனப்படுத்தினார்கள். அவர் விருப்பத்திற்கு மாறாகவே அவரின் அரசியல் அவரை சுற்றி, சுற்றி சுழன்றது. தன் செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கோமாளித்தனங்களை செய்தார் காந்தி.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை எதிர்த்தார். ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்தது. பிறகு பிரிந்த பாகிஸ்தானுக்கு 50 கோடி ரூபாய் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். அதை நிராகரித்தார் வல்லபாய் பட்டேல். இந்து-முஸ்லீம் கலவரம் கட்டுக்கடங்காமல் போனது. காந்தியை எதிர்த்த காங்கிரஸ் தலைமை பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கிறது என்பதாலயே அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தார். அதன் மூலமாக நேரு, வல்லபாய் படேல் போன்றவர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.

இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரித்த பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன் முனைப்பு அரசியலின் விளைவாக அவரை அறியாமல் முளைத்த முற்போக்கு கிளை அது. பார்ப்பனிய பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கு சரியான செயல் திட்டம் இல்லாமல், இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது போன்ற கோமாளித்தனங்களை செய்தார். அதில் அவர் நோக்கம் இந்துமதத்தை அவமானப்படுத்தவேண்டும் என்பதல்ல.  இந்துமதத்தை அவமானப்படுத்தும், பலவீனப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மனம் அறிந்து செய்ததில்லை காந்தி.

‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல’ என்று டாக்டர் அம்பேத்கர் ஆதாரத்துடன் நிரூபித்தபோது, ‘ஹரிஜன்’ என்ற பச்சையான இந்து பெயர் வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற ஒற்றைச் சொல்லாகவே ‘ஹரிஜன்’ இந்துச் சொல்லை அவர்கள் மீது திணித்து, மீண்டும் இந்துமதத்திற்குள் அடைத்தார். இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ‘ஹரிஜன்’ என்ற சொல் செல்வாக்கு செலுத்திய அளவிற்கு வேறு எந்த சொல்லும் செலுத்தவில்லை. ஜாதி இந்துக்களும் அந்தச் சொல்லையே தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பதற்கு பயன்படுத்தினர். பயன்படுத்துகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாற்றத்தை தடுக்க பெரும் முயற்சி எடுத்த இந்து பார்ப்பன மற்றும் ஆரியசமாஜ்களால் செய்யமுடியாததை காந்தி என்கிற தனிமனிதர் செய்தார்.

“காந்தியிசம் என்பது இந்துயிசத்திற்கும் இந்துயிசத்தின் வறட்டு சூத்திரங்களுக்கும் ஒரு தத்துவ முறையிலான நியாயப்படுத்துதலே” என்பார் அண்ணல் அம்பேத்கர்.

அந்தக் காந்திதான் இந்துக் கோயில்களில் இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்தார். அந்தக் காந்தியைத் தான் இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் கொன்றனர்.

உண்மையில், இந்துக்கோயிலில் இஸ்லாமிய பாங்கு ஒலிப்பது இஸ்லாத்தை அவமானப்படுத்துகிற செயல். பாங்கு ஒலிப்பது என்பதே தொழுகைக்கு அழைப்பதுதான். இந்துக்கோயிலினுள் பாங்கு ஒலித்தால் முஸ்லிம்களை அங்குவந்து தொழுகை நடத்த அழைப்பது போன்றதுதான்.

‘உருவவழிபாடு, இறைவனுக்கு இணைவைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது’ என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. காந்தியின் இந்துக்கோயில் பாங்கு ஒலி, இஸ்லாத்திற்கு எதிரானதுதான். உண்மையில் தங்கள் மதநம்பிக்கைக்கு எதிரானது என்று முஸ்லீம்கள் தான் காந்திமீது வீரோதம் கொண்டிருக்கவேண்டும்.

இஸ்லாத்தை அவமானப்படுத்துவது காந்தியின் நோக்கம் அல்ல. பிரச்சினையை தீர்ப்பதற்கும், ‘இஸ்லாமியர்கள் இந்தியர்கள் தான்’ என்று காந்தி நிறுவுகிறார் என்று காந்தியை இஸ்லாமியர்கள் நம்பினார்கள். சாதாரண இந்து நம்பிக்கை கொண்ட மக்களும் காந்தியின் செயல் நம் மதத்திற்கு எதிரானது அல்ல என்று புரிந்துகொண்டார்கள். இந்து பார்ப்பன அறிவாளிகள் தான் இதை எதிராக நினைத்தார்கள். மதப் புனிதம் கெட்டுப்போய்விடுகிறது என்று பொய்சொன்னார்கள்.

உண்மையில் காந்தியின் கொலை இந்து மதப்புனிதத்திற்காக அல்ல. இந்துக்கோயில்களில் பார்ப்பனிய மேன்மையை காலப்போக்கில் காலி செய்துவிடும் என்பதால்தான். இயல்பாகவே பார்ப்பனர்களைத் தவிர மற்ற இந்துக்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களான மசூதி, தர்கா போன்ற இடங்களில் அங்கு இருக்கும் இஸ்லாமிய மதப்பெரியவரிடம் மந்திரித்து தாயத்து கட்டிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஒரு இந்து சாமியாரிடம் காட்டும் பக்தியோடும், நம்பிக்கையோடுமே நடந்து கொள்வார்கள்.

இதுபோன்ற மனநிலை கொண்ட ‘இந்து’ மக்களிடம், காந்தியின் ‘இந்துக்கோயில் பாங்கு ஒலி’  நடவடிக்கை பார்ப்பனிய மேன்மையை தகர்ப்பதாக தீவிர இந்து பார்ப்பனர்கள் உணர்ந்ததாலேதான், காந்தி கொலையை அவர்களின் பிரதிநிதியாக இருந்து கோட்சே செய்தான்.

“இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது.  இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.” என்று காந்தியை கொன்ற கோட்சே கோர்ட்டில் சொன்னான். இதுதான் இந்து பார்ப்பன மனது.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார்:

“ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.”

டாக்டர் அம்பேத்கர் சொன்னது எவ்வளவு சரி. காந்தி கொலையை பார்ப்பன கும்பல்தான் செய்தது என்று வரலாற்று சம்பவத்தை நாம் சொன்னால், உடனே நம்மீது பாய்ந்து புடுங்குகிற பார்ப்பனர்கள், காந்தி கொலையை, கோட்சேவை கண்டிப்பத்தில்லை. மாறாக நம்மைதான் கடும் வெறுப்புக் கொண்டு புடுங்குகிறார்கள். விட்டால் கோட்சேவை போல் கொலைகாரனாகவும் மாறுவார்கள்போல.

‘இந்து மதம் புனிதமானது. எந்த மாற்றமும் அதில் செய்யமுடியாதது. மசூதியில் பகவத்கீதையை பாடினால் சும்மா இருப்பாங்களா? காந்தியால் இந்துமதப் புனிதம் கெட்டுபோனது. அதனால்தான் கோட்சே கொன்றார்’ என்று வாதிடுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகள். அப்படியா? இந்து மதம் புனிதமானதா? எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாததா?

இந்தவாதம் பச்சை பொய் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து. பல அய்ரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது” என்கிறார்.

புத்தரின் எழுச்சியால் தோல்வியுற்ற பார்ப்பனர்கள், தங்களின் வேதக் கடவுள்களை கும்பிடுவதை கைவிட்டார்கள். புத்தரின் இயக்கத்தால் வேதக் கடவுள்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்று போனதே அதற்கு காரணம். அதனால்தான் தங்களால் உயர்வாக பேசப்பட்ட கடவுள்களை குறித்தே மிக கேவலமான கதைகளை அவர்களே பரப்பினார்கள். ‘பிரம்மா தன் மகளுடன் உறவு கொண்டார்’ என்றும் ‘இந்திரன் பெண் பித்தன். பிறர் மனைவியை அதுவும் மரியாதைக்குரிய ரிஷி பத்தினிகளோடு கள்ளஉறவு வைத்திருந்தான்’ என்றும் எழுதி தங்களின் கடவுளை கைவிடுதற்கான காரணத்தை உண்டாக்கினார்கள் என்ற உண்மையை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.

“எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரம்மா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை (பிராமணர்களை) ஒருவர் கேட்கலாம். அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணைனையும் பிரம்மாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தை குறிப்பிடலாம்.

பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லீம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்.”

இந்து மதத்திற்கு புனிதம் என்று ஒன்று கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள்.  மாறாது என்கிற வார்த்தையை தவிர மற்றவை மாறிப்போகும் என்கிற மார்க்கிய விஞ்ஞானத்திற்கு பொருத்தமாக ஏகப்பட்ட மாற்றங்களை இந்து மதம் செய்திருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

ஆக, இந்து மத புனிதத்திற்காக அல்ல காந்தி கொலை. பார்ப்பன மேலாதிக்கத்தை பாதுக்காப்பதற்கே.

காந்தியின் துரோகம் தெரியவேண்டும் என்றால், அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்க வேண்டும்.

பார்ப்பன பயங்கரவாதம் புரியவேணடு்ம் என்றால், காந்தியின் கொலையின் ஊடாக பார்க்க வேண்டும்.

காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்.

காந்தியை கொலைசெய்த பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்.

வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறுத்தியதை கண்டித்தும்’ பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.

மேடையில் பேசியசெய்திகளோடு, புதிய செய்திகளையும் சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.

தொடர்புடையவை:

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2

‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய் - 3





‘யார் ரவுடி?’ கர்ப்பகிரகத்திற்குள் கால் வைத்துப்பார், உயர்கல்வியில் ஒதுக்கீடு கேட்டுப்பார்-உணர்ந்துகொள்வாய்

3 02 2010

‘ஆயிரம் கால் மண்டபம்’-ஒவ்வொரு தூண்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது மர்மக் கத்தி

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2

பகுதி – 3

ந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது காந்தி, இந்துமதத்திற்குள் இஸ்லாமிய ஆதரவு நிலையை கடைப்பிடித்தார். இது பார்ப்பனர்களின் கோபத்தை தூண்டுவதாக இருந்தது. அதற்குதான் காந்திக்கு ‘செக்ட்ச்’ போட்டார்கள் பார்ப்பனர்கள்.

இதை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், காந்தி கொலைவழக்கில் கைதாகி, கோர்ட்டை தன்னுடைய பிரச்சார மேடையாக பயன்படுத்திய கோட்சேவின் கோர்ட் பேச்சே சாட்சி.

பிரிவினைக்கு பிறகு காந்தி பாகிஸ்தானுக்கு 50 கோடிரூபாய் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். அதைக்கூட பொறுத்துக்கொண்டோம். ஆனால், இந்துக்கோயில்களில் பிரார்த்தனையின்போது, இஸ்லாமிய பாங்கு ஓசை ஒலிக்கச் செய்தார். அதை மன்னிக்கவே முடியாது. அதனால்தான் கொன்றேன்என்றான் கோட்சே. இதை அவன் தெருவில் சொல்லவில்லை. தன்னை குற்றவாளியாக நிறுத்திய கோர்ட்டில் துணிச்சலோடு பேசிய பேச்சு.

சாந்த சொரூபிகளாக அப்பாவியாக காட்சி தருகிற பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டின் காரணமாக  உயர்கல்வியில், வேலை வாய்ப்புகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆபத்து வரும்போதும், கோயில்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களால், பார்ப்பனர்களின் ‘புனித’த் தன்மைக்கு பாதிப்பு வரும்போது, கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். பார்ப்பனியத்தின் ரவுடித்தனத்தை அப்போது நன்கு உணரலாம்.

ஒருத்தர் அந்த ஏரியாவுலேயே பெரிய ரவுடியா இருப்பாரு, அவர பாத்தாலே பார்ப்பனர்களில் இருந்து எல்லா ஜாதிமக்களும் பயந்து ஓடி ஒளிந்துகொள்வார்கள். அவரு எங்கவேணுன்னாலும் போவாரு, என்ன வேணுன்னாலும் கேக்கமலே எடுத்துப்பாரு, யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. கேட்டா வெட்டுதான்.

எலலாத்துக்கும் துணிஞ்ச ரவுடியை கோயில் கர்ப்பகிரகத்திற்குள் நேராஉள்ளபோய், ரவுடித்தனத்தோடு இல்ல, பக்தியோடகூட சாமிய தொட்டு கும்பிட சொல்லுங்களேன் பாக்கலாம். அப்போதெரியும் உண்மையான ரவுடி யாருன்னு? அப்போ வெட்டு ரவுடிக்கு விழும். வெட்டுனது சாந்தசொரூபிகளான பார்ப்பனர்களாக இருப்பாங்க.

இந்தியாவின் மாபெரும் தலைவராக இருந்தார் காந்தி. அவர் அளவிற்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றத் தலைவர்கள் அவருக்கு முன்பும்  யாருமில்லை. பின்பும் யாருமில்லை. பிரிட்டிஷ் அதிகாரத்தின் உச்சியில் இருந்த மவுண்பேட்டன் போன்ற வெள்ளைக்காரன் கூட காந்தியை பார்த்தால், எழுந்து நின்னு கூம்பி்ட்டான். ஆனால்,  இந்த செல்வாக்கு எல்லாம், இந்துக் கோயிலுனுல் செல்லாது. அங்கே காந்தி கைகட்டி ஒரு முட்டாள் பார்ப்பான் முன்னால் நிக்கனும். அதைமீறி நடந்தால் சாகனும். அப்படித்தான் சாகடிக்கபட்டார் காந்தி.

இந்துக் கோயிலுனுள், இஸ்லாமிய பாங்கு ஒலிக்கச் செய்ததால், என்ன புனிதம் கெட்டுபோய்விட்டது? புனிதம் கெட்டுப்போய்விட்டது என்று தீர்மானிப்பதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது? காந்தியும் இந்துதான். அதுவும் இந்துமதத்தையும் ராமனையும் தன் கண்களாக கருதியவர்தான் காந்தி. அவருக்கு தெரியாத இந்துமதப் புனிதமா?

‘இஸ்லாமிய பாங்கு ஒலித்ததால் இந்துமத புனிதம் கெட்டுபோய் விடடது’ என்கிற உண்மையான இந்துவின் மத உணர்வில் இருந்துதான் காந்தியை பார்ப்பனர்கள் கொன்றார்களா? அப்படியானால், அதுஏன் பார்ப்பனர்களை தவிர மற்ற ஜாதி இந்துக்களுககு தவறாக தெரியவில்லை.?

சரி. அப்படியானால் இந்துக் கடவுள்களை போற்றி, சமஸ்கிருதத்தை தவிர தமிழ் போன்ற மற்ற மக்கள் மொழிகளில் அர்ச்சனை செய்ய ஏன் மறுக்கிறார்கள்?

சிவனை போற்றிபாடுகிற தேவாரம், திருவாசகத்தை கோயிலுனுள் பாடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? திருவாசகமும், தேவராமும் என்ன அரபு மொழியில் அல்லாவை பற்றிய பாடல்களா?

பார்ப்பன நலனேயே பிரதானமாக கொண்டதாக அல்லது பார்ப்பன ஆதரவாக இருந்தாலும் தேவாரத்தையும், திருவாசகத்தையும் கருவறை அர்ச்சனைபாடலாக பாட பார்ப்பனர்கள் ஏன் மறுக்கிறார்கள்?

உண்மையில் இந்துமதத்திற்கு புனிதம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால், ஜெயேந்திரன் கொலை செய்தபோதும், காமகளியாட்டத்தில் ஈடுபட்டபோதும், காஞ்சிபுரத்தில் ஒரு பார்ப்பனர் கோயில் கருவறையை, ‘கரு’ உண்டாக்கும் அறையாக மாற்றியபோதும் பார்ப்பனர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? வீதியில் இறங்கி போராடவில்லை. இந்து மத புனிதத்தின்படியே ஒரு பார்ப்பனரல்லாதவர் கருவறைக்குள் நுழைவதைவிட புனிதக்கேடு இல்லையா இது?

“பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான வேதமும் அதன் தொடர்ச்சியான இந்துமதமும் எந்த மாறுதலுக்கும் உள்ளாக்கப்பட முடியாதது. கூடாது” என்று பார்ப்பனர்கள் சொல்வது உண்மைதானா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் டாக்டர் அம்பேத்கரிடம்தான் போகவேண்டும்.  அவரிடம்தான் பார்ப்பனியத்தின், வேதத்தின், புராணங்களின், இதிகாசங்களின் மிக நுட்பமான மர்ம முடிச்சுகளை அவி்ழ்த்து அம்பலப்படுத்துவதற்கான ‘மந்திரம்’ இருக்கிறது.

-தொடரும்

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு.

மேடையில் பேசியசெய்திகளோடு, தொடர்புடைய சில செய்திகளையும்  சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும் -2





நந்தனாரும் வள்ளலாரும்-பெரியாரும் அம்பேத்கரும்

28 01 2010

கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களோடு, சிறப்புரை ஆற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன்

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு:

காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்? 1

பகுதி-2

பார்ப்பனர்களுக்கு விசுவாசமுள்ளவராக இருந்த காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

இதற்கான முடிச்சு தமிழ்நாட்லதான் இருக்கு.

நந்தனாரை, வள்ளலாரை எதற்கு கொன்றார்களோ அதற்காகவேதான் காந்தியையும் கொன்றார்கள்.

இந்து மதத்திற்குள் இருந்துகொண்டே ஜாதிக்கு எதிராக பேசுவது, இந்து மதத்திற்குள் பார்ப்பனர்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை செய்ய முயற்சிப்பது, இந்து மதத்திற்குள் தனது உரிமையை கோருவது, இந்துமதத்திற்குள் பார்ப்பனியத்திற்கு எதிராக சமயநல்லிணக்கத்திற்கு முயற்சிப்பது இதுபோன்ற எந்த செயலையும் பார்ப்பனர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி தீவிரமாக இயங்குபவர்களை ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து சோரம் போக வைப்பார்கள். அதையும் மீறி முயற்சிப்பவர்களை கொலை செய்து விடுவார்கள்.

அப்படித்தான் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்த வள்ளலாரை ஜோதியில் கலந்தார்கள். சிவனை தரிசிக்க, சிவன் தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பாடாய்படட நந்தனை கொளுத்தினார்கள்.

பெரியபுராணத்தில் வருகிற நந்தன் கதை அதைத்தான் உணர்த்தியது, எச்சரித்தது.

சமணம், புத்தம் சமயங்களால் வீழ்ச்சியுற்ற சைவசமயத்தை, பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்யவந்ததே பெரியபுராணம். அதனால்தான் அதில் வருகிற 63 நாயன்மார்கள் கதாபாத்திரங்களையும், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி அவர்களை முன்னுறுத்தி, சைவசமயத்திற்குள் அய்க்கியபடுத்தி எழுதப்பட்டது.

எல்லா ஜாதியைச் சேர்ந்த நாயன்மார்களுக்கும் காட்சி தரும்போது சிவன் பார்ப்பன உருவம் கொண்டுதான் காட்சி தந்திருக்கிறான். குயவருக்கு காட்சி தந்தால் குயவராகவோ, இயற்பகை நாயனார் என்கிற செட்டியாருக்கு காட்சி தரும்போது செட்டியாராகவோ கூட வரவில்லை. பார்பபன உருவம் கொண்டுதான் வந்திருக்கிறான். காட்சி தந்திருக்கிறான்.

கடவுள் பார்ப்பன உருவத்தில்தான் வருவானே தவிர சூத்திர உருவத்தில் வருவது அவனுக்கு இழுக்கு. பார்ப்பன உருவத்தில் வருவான், பன்னி அவதாரத்தில்கூட வருவான் ஆனால், சூத்திரர் உருவத்தில்வரமாட்டான். அது கடவுள் தன்மையின் புனிதத்திற்கு எதிரானது என்று உணர்த்துவதின் மூலம் பார்ப்பன மேன்மையை அதன் மூலமாக பார்ப்பன நலனை பாதுகாப்பது என்ற அழுத்தமான உள்ளர்த்ததோடு  எழுதப்பட்டது.

சூத்திரர்களுக்கு  எல்லாம் பார்ப்பன உருவத்தில் வந்து காட்சி தந்த சிவன், அப்படிக்கூட நந்தனார் என்கிற தாழ்த்தப்பட்டவருக்கு மட்டும் நேரில் வந்தும் காட்சி தரவில்லை. கனவிலும் வரவில்லை.

சைவசமயத்திற்கு ஆள் பிடிக்கும் பிரச்சார முயற்சியில்கூட, தாழ்த்தப்பட்டவரை அங்கீகரிக்கிற தன்மையில் இல்லாமல், ‘புனிதமாக அவமானப்படுத்துகிற’, அங்கேயும் தீண்டாமையை கடைப்பிடித்து, ‘தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படி பிறஜாதி மக்களைபோல் இறைவனை வழிபட நினைப்பது கூடாது’ என்கிற கருத்தையும உள்ளடக்கிதான் நந்நனார் காதாபத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மற்ற ஜாதிக்காரர்களுக்கு காட்சி தந்த சிவன், நந்தனாருககு காட்சிதரவில்லை என்பது மட்டுமல்ல, நந்தனாரின் வேண்டுகோளுக்கு அவர் கனவில் வந்து பதில் சொல்லாமல், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் வந்து பதில் சொல்லியிருக்கிறான்.

தில்லைவாழ் அந்தணர்கள் அதான் தீட்சிதப் பார்ப்பனர்கள் நந்தனிடம், “சிவன் எங்கள் கனவில் வந்து சொன்னான். உன்மீது உள்ள தீண்டாமை என்கிற இழிவு நீங்கவேண்டுமானால், நெருப்பில் இறங்கி உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி நெருப்பில் இறங்கி வெளியே வந்தால், நீ தூய்மையாகிவிடுவாய். உன்னை சிவன் ஏற்றுக்கொள்வான்.“ என்று சொல்லியிருக்கிறார்கள். நெருப்பில் இறங்குனப் பிறகு எங்க வெளியே வருவது? நந்தனின் கதையை இப்படித்தான் முடித்தார்கள் பார்ப்பனர்கள்.

ஆக, இந்துமதத்திற்குள் இருந்துகொண்டு, அல்லது இந்துமதத்தை ஒத்துக்கொண்டு பார்ப்பனியத்திற்கு எதிராக தன்னை அறியாமல் உண்மையான பக்தியோடு இயங்கினால்கூட கொலை செய்துவிடுவோம் என்பதாக எச்சரிப்பதுதான் நந்தன் கதை.

2000 ஆம் ஆண்டுகால வரலாற்றில், பார்ப்பனியத்தை இந்து மதத்திற்குள் இருந்துகொண்டு, ‘சிவன் நம் கடவுள், கண்ணன் நம் கடவுள்’ என்று சொல்லிக்கொண்டு, பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் யாரும் ஜெயித்ததில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் சைவசமயம் நம்முடையது. சிவன் நம்கடவுள் என்று முழங்கிய பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களின் கோமாளித்தனமான பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனியத்தின் இன்னொரு நுட்பமான வடிவமான சுயஜாதி பிரியத்திற்குள் சிக்கி மீண்டும் பார்ப்பனியத்திடமே சரணடைந்தது.

இந்தப் பார்ப்பன அல்லாத ‘உயர்’ஜாதிக்காரர்களைப் போல் அல்லாமல், வள்ளலார் தனித்து இயங்கினார். அவரும் பார்ப்பனியக் கடவுளின் ஆதரவு நிலையில் இருந்து பார்ப்பனியத்தை எதிர்த்தார். அவருக்கும் சிவலோக பதவியைத்தான் தந்தார்கள் பார்ப்பனர்கள்.

அகம் வேறு, பிரம்மம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல், பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்.  இதை புரிந்துகொண்டு பார்ப்பனியத்தோடு துண்டாக கோடு கிழித்து எதிர்நிலையில் நின்றவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர், ‘பார்ப்பனியம்தான் வேதம். வேதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் போராடியதால்தான் ஜெயித்தார்.

2500 ஆண்டுகள் தாண்டி புத்தருக்கு பிறகு, ‘பார்ப்பனியம்தான் இந்துமதம். இந்துமதம்தான் பார்ப்பனியம்’ என்று எதிர்நிலையில் நின்று பார்ப்பனியத்தோடு மோதிய பெரியாரும், அம்பேத்கராலும்தான் பார்ப்பனியத்தின் தோலுரிக்க முடிந்தது.

-தொடரும்.

மேடையில் பேசியசெய்திகளோடு, கொஞ்சம் புதிய செய்திகளை சேர்த்து வெளி்யிட்டு இருக்கிறேன்.





காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

25 01 2010

நான், தஓவி செய்யாளன், பா. ராசன்

23-1-2010 அன்று சென்னை செனாய்நகரில் ‘காந்தி படுகொலை நினைவுநாளும், பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவை சேத்துப்பட்டு போலிசார் பொய் வழக்குப்போட்டு துன்புறத்தியதை கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த தெருமுனை கூட்டத்தில் நான் பேசியதின் தொகுப்பு:

ந்தக் கூட்டம் காந்தியை ஆதரிக்கிற கூட்டமல்ல. அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள், காந்தியை ஆதரிக்க முடியாது. கூடாது.

அப்படின்னா இது என்ன கூட்டம்?

காந்தியை கொன்ன பார்ப்பன பயங்கரவாதிகளை கண்டிக்கிற கூட்டம். பெரியார் திராவிடர் கழகத் தோழர் வேலுவிடம் சேத்துபட்டு போலிசார் கோட்சேவைபோல் நடந்துகொண்டதை கண்டிக்கிற கூட்டம். அப்படிதான் இதுநடந்துகிட்டு இருக்கு.

காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதிராக கருதி கொன்றார்கள் என்பதால்.  காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடுமையாக எதிர்த்த பெரியார்தான் காந்தி தேசம் என்று பெயர் வைக்கச் சொன்னார்.

காந்தி கொலைக்கு முன்னும்  பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சியின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு,  காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங்கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர்கள் அல்லது புரட்சிகர இளைஞர்கள் காநதியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்குரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத்தால் வெல்லமுடியாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.

ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், ‘கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.

பெரியார்-காந்தி சந்திப்பின்போது, ‘பிராமணர்கள் யாருமே சரியில்லை என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஒரே ஒரு பிராமணர் கூடவா சரியில்லை என்கிறீர்கள்’ என்று பெரியாரிடம் கேட்டார் காந்தி.

அதற்கு பெரியார், ‘எனக்கு ஒருத்தர்கூட நல்லவரா தெரியல’ என்றார்.

‘கோபால கிருஷ்ண கோகுலேகூடவா நல்லவர் இல்ல’ என்று திருப்பி கேட்கிறார் காநதி.

பெரியார், ‘உங்களைப் போன்ற மகாத்மாவிற்கே ஒரு பார்ப்பனர்தான் நல்லவராக தெரிகிறார்….’ என்று பதில் அளித்திருக்கிறார்.

அதுபோல், ‘தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலைக்கு இந்துமதம்தான் காரணம்’ என்று இந்து மதத்தை, வேதத்தை அம்பலப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும என்று அம்பேத்கர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து, காந்தி தனது அரிஜன் என்ற பத்திரிகையில், ‘இந்து மதத்தில் யாரோ சிலர் செய்த தவறுக்காக இந்து மதத்தையே குறை சொல்வது தவறு. இந்து மதததிற்குள் இருந்துகொண்ட அதை திருத்தம செய்யவேண்டும்’ என்று அம்பேத்கருக்கு மறுப்பு எழுதுகிறார்.

அதற்கு பதில் எழுதும்போது அம்பேத்கர், ‘“சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. எனது எதிராளி ஒரு ‘அனாமதேய ஆத்மா‘வாக இருந்திருந்தால், நானும் போனால் போகட்டும் என விட்டிருப்பேன். ஆனால், ‘மகாத்மாவே’ என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.” என்று காந்தியை கந்தலாக்கி தொங்க்கவிட்டிருப்பார் டாக்டர் அம்பேத்கர்.

பதில்களின் மூலமாகவே  அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு காந்தியிடம் இருந்து பதிலே இல்லை.

இப்படி பார்பபனர்களுககும், இந்து மதத்திற்கும் காவடி தூக்கிய காந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்?

-தொடரும்





காந்தி படுகொலை நினைவுநாள் கூட்டம்

23 01 2010





‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

21 01 2010

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில். போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா?

-ஜான்சன், களியக்காவிளை.

போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் குறைந்தபட்ச , தற்காலிக பாதுகாப்பையே தருகின்றன.

‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. அதை குடிப்பதினால் உடல் நலத்திற்கு தீங்கு’ என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் தன்னுடைய சக்தி வாய்ந்த விளம்பரத்தினால், ‘கோக் குடிப்பது நவீன நாகரிகத்தின் அடையாளம்’ என்று மீண்டும் மீண்டும் மக்களை குடிக்க வைக்கிறது.

கோக்கில் போலி வந்தால் அது மக்களை பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து காப்பாற்றுகிறது.பன்னாட்டு நிறுவனத்தின் கொள்ளையையும் குறைக்கிறது.

கோக்கைப் போலவே மக்களுக்கு கெடுதலை செய்கின்ற ‘சிவாஜி’ போன்ற படங்களை மக்கள் பார்க்க ஆசைப்பட்டால், ஒரு டிக்கெட் 1000 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே திருட்டு வீசிடியில் பார்த்தால் ஒரு குடும்பமே 50 ரூபாயில் படம் பார்த்துவிடுவார்கள்.

குறைந்த பட்சம் ஏவிஎம் செட்டியார்கள், ரஜினிகாந்த் இவர்களின் கூட்டுக் கொள்ளையில் இருந்து மக்களை திருட்டு விசிடி போன்ற போலிகள்தானே பாதுகாக்கிறது.

சமூக விழிப்புணர்வு 2007 ஆகஸ்ட் மாத இதழுக்காக எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புடைய கட்டுரை:

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

புத்தகம் பெற:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்

எண்.15, எழுத்துக்காரன் தெரு

திருவொற்றியூர்

சென்னை-600 019.

பேச: 9444 337384





மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

19 01 2010

mrs doubtfire படத்தில் பெண் வேடத்தில் ராபின் வில்லியம்ஸ். அவ்வை சண்முகியின் அசல்.

திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. திருட்டு வி.சி.டிக்கு தருகிற பணம் மக்கள் அவர்கள் தலையில் அவர்களே போட்டுக் கொள்கிற குண்டு.” என்று சகலகலா வல்லவன் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

‘உலகநாயகனுக்கு மக்கள் மீது அப்படி என்ன அன்பு?’ என்று கேட்பதைவிடவும், ‘முஸ்லிம்கள் மீது அப்படி என்ன வெறுப்பு?’ என்று கேட்பது சரியாக இருக்கும்.

ஜக்குபாய் வி.சி.டி. விவகாரத்தில் கைதானவர்களில் ஒருவர் இஸ்லாமியர் என்பதால், இப்படி ஒரு கைகுண்டை வீச முயற்சி்த்திருக்கிறார், குமுதம் ஞாநியின் மனம் கவர்ந்த காதல் மன்னன். இதற்கு முன் இவரின் சொந்த தயாரிப்பான ‘ஹேராம்’ பட வி.சி.டி. விவகாரத்தின் போதுகூட இஸ்லாமிய பெயர் கொண்ட ஒருவரோடு பர்மா பஜார் ரோட்டில் இறங்கி டூப்போடாமல் சண்டைபோட்டார், ஹாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடும் ‘நம்’ நடிகர்.

ஜக்குபாய் வி.சி.டி. விவகாரத்தின் போதும் அந்த இஸ்லாமிய பெயர் கொண்டவர் ஞாபகம் வந்ததோ என்னவோ, இந்தக் கைகுண்டை வாயில் கடித்து துப்பி, வீச முயற்சித்திருக்கிறார். ஆனால், கடிக்கும்போதே அவர் வாயிலேயே வெடித்திருக்கிறது அந்த வாய்குண்டு.

உண்மையில் புதுப்பட வி.சி.டி என்பது கமல்ஹாசன் தலையில் விழுகிற குண்டு. அதை அப்படி நேரடியாக சொன்னால் எடுப்பாக இருக்காது என்பதால், இப்படி ‘உன்னைப்போல் ஒருவன்’ பாணியில் இஸ்லாமியர்களிடம் இருந்து இந்துக்களை பாதுகாக்கும் அக்கறையில் ஏற்றி சொல்லியிருக்கிறார், இந்தியன் தாத்தா கமல்ஹாசன்.

இந்திய நாட்டை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், இந்திய ராணுவ வீரர்கள், எல்லையை பாதுகாப்பதைவிட்டு இந்த வில்லையை (வி.சி.டி) தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைப்பார் போலும் இன்டலக்சுவல் நடிகர். அப்படி வைத்தால் அதையும் நிறைவேற்றி வைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார் தமிழக முதல்வர். காரணம், கமல்ஹாசன் மற்றும் தமிழ் சினிமா மீது உள்ள அக்கறையினால் அல்ல. கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி போன்ற தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் தாத்தா என்கிற முறையில்.

(ஒக்கேனேக்கல் பிரச்சினையின்போது நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்த மேடையில் வட்டாள் நாகராஜ் போன்றவர்களை, சத்தியராஜ் மிக கடுமையான வார்த்தைகளால் பேசியபோது ‘நாம் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது. அடிதடி வன்முறை தீர்வல்ல’ என்று விளக்கிய, கண்டித்த இந்த அகிம்சாமூர்த்தி சாகேத்ராமன், அதற்கு முன் ஹேராம்  வி.சி.டி.க்காக தெருவில் இறங்கி நாகரீகமாக சண்டைபோட்டார்.

‘பொது பிரச்சினை என்றால், காந்தி மாதிரி அகிம்சையா நடந்துக்கனும். சொந்த பிரச்சினை என்றால், கோட்சே மாதிரி கொலைகாரனா கூட மாறலாம்’ என்கிற பார்ப்பனிய தத்துவத்தோடு இதை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம்)

‘இந்த திருட்டு வி.சி.டி.யால் லைட்மேன் போன்ற பல தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.’ என்று கவலைகொள்கின்றனர் இன்னும் சில நடிகர்கள். பக்கத்து இலைக்கு பாயாசம் என்கிற பாணியிலான அக்கறையில், எப்போதுமே சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அதிகம் லாபம் அடைகிற அல்லது பாதிக்கப்படுகிற வசதியானவர்களால்தான் இந்த வசனம் வாசிக்கப்படுகிறது.

நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக பெரிய அளவில் சீரழித்த, லாட்டரி சீட்டை தடை செய்தபோது, அதன் மூலமாக கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள்கூட இப்படி ஆஸ்கர் நாயகன் கமல்ஹாசன் அண்டு கம்பெனி பாணியில்தான்  வசனம் பேசினார்கள்.

‘இந்த லாட்டரி சீட்டை தடை செஞ்சா அதன் மூலமாக பாதிக்கப்படப்போறது, ஊனமுற்றவர்களும், பார்வையற்றவர்களும்தான். அவர்கள்தான் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு அதன் மூலமான வருமானத்தில் வாழ்கிறார்கள்’ என்று ஊனமுற்றவர்களை முன்நிறுத்தி, போராடினார்கள் லாட்டரி சீட்டின் மூலமாக பெரும் கொள்ளை அடித்த அதிபர்கள்.

புதுப்பட வி.சி.டி.யினால், சினிமா எடுக்கறதே நின்னுபோயிடுமாம். நின்னுபோன நிக்கட்டுமே அதனால் என்ன இப்போ?

உழைப்பை மூலதனமாக வைத்து பிழைக்கிற சினிமாவில் இருக்கிற கூலி தொழிலாளர்கள், அந்த உழைப்பை எங்கே போய் செய்தாலும் பிழைத்துக் கொள்வார்கள். (என்ன பொல்லாத சம்பளம் கொடுக்குறாங்க?)

ஆனால், ஊதாரி வாழ்க்கையில் ஊறிப்போன, கொள்ளை அடிக்கிற இந்தக் கும்பல் இதுபோன்ற ஒரு சொகுசான ‘தொழிலை’ திரும்ப உருவாக்கிக்கொள்வது கடினம். இந்த உல்லாசத்துக்கு ஆபத்து வந்துடுமோன்னுதான், ‘ஆடு நனையுதேன்னு அழுகிறது இந்த ஓநாய்கள்.’

இந்த தேசபக்தி கமல்ஹாசன், இவ்வளவு அக்கறையா, நேர்மையா, கோபமா வி.சி.டி பத்தி பேசுறாரே,  இவருடைய உன்னைப் போல் ஒருவன் படத்தை, நான் சென்னை அம்பத்தூர் தியேட்டர் ஒன்னுல 80 ரூபா கொடுத்து பார்த்தேன். தியேட்டர்காரன் கொடுத்த டிக்கெட்டுல 10 பைசான்னு கூட பிரிண்ட் பண்ணல. வெறும் வெள்ளை பேப்பர்ல ஏதோ எழுதி கொடுத்தான். இந்த இந்தியன் தாத்தாக்களுக்கு இத எதிர்த்து கோபம் வருமா? ஹேராம் வி.சி.டி.க்கு ரோட்டுல இறங்கி சண்டைபோட்டவர், இதற்கு எதிராக போடுவாரா?

இது சட்டவிரோதம் இல்லியா? இப்படி சட்டவிரோதமாக சம்பாதிக்கிற பணம்தான் மாலேகான் குண்டு வெடிப்புக்கு பயன்படுதுன்னு சொன்னா ஒத்துப்பாரா மாலனின் மனம் கவர்ந்த மகாநடிகன்.

இந்த சட்டவிரோத விற்பனையை மையமாக வைத்துதானே கோடிக்கணக்குல கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. இந்த மோசடி டிக்கெட் விற்பனையை மூலதனமாக வைத்துதானே பிரம்மாண்டமான தயாரிப்பில் படம் எடுக்கலாம்ன்னு முடிவாகுது.

எது மக்கள் தலையில் போடுகிற குண்டு? இதுவா? புதுப்பட வி.சி.டியா?

உண்மையில் தீவிரமாக சினிமா பார்ப்பவர்களுக்கு புதுப்பட வி.சி.டி ஒரு புதையல். இன்றைய அத்தியாவாசிய பொருட்களின் விலையேற்ற சூழலில், ஒரு நபருக்கு 80 ரூபா கொடுத்து பார்ப்பதைவிட, ஒரு குடும்பத்திற்கு 40 ரூபா கொடுத்து பார்ப்பது சிக்கனம் மட்டுமல்ல, அதுதான் அவர்களுக்கு சாத்தியம்.

தன்னோட படத்தை ஒருவர் பிரதி எடுத்து வி.சி.டியா விற்கிறார் என்று தெரிந்தஉடன் அவருடன் ரோட்டில் இறங்கி சண்டைபோடுகிறாரே நாயகன். இத்தனைக்கும் அது பணம் பிரச்சினை மட்டும்தான். அந்த வி.சி.டி.யில் தயாரிப்பு அல்லது கதை என்று தன்  பெயரை போட்டுக்கொள்வதில்லை வி.சி.டி.காரர்கள்.

ஆனால், அடுத்தவன் படைப்பை அவன் அனுமதியில்லாமல், ஒருவன் அவன் பெயரில் எடுத்து அதன் மூலமாக கோடிகோடியாக சம்பாதித்து, பேரும், புகழும் வாங்குகிறார்களே அவர்களோடு சண்டையி்ட்டு கட்டி புரளவேண்டும் என்றால், ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிற நமது இயக்குநர்களோடும், நடிகர்களோடும் கோடம்பாக்கத்து தெருக்களில் காலம் முழுவதும் ஹாலிவுட் மற்றும் வெளிநாட்டுக்காரர்கள் கட்டி உருண்டுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

ராபின் வில்லியம்ஸ் நடித்த, உலகப் புகழ்பெற்ற திரைப்படமான ‘mrs doubtfire’ என்ற ஹாலிவுட் படத்தை காப்பியடித்து பச்சையாக ‘அவ்வை சண்முகி’ என்று எடுத்த கமல்ஹாசனோடு, ராபின் வில்லியமஸ் ஆழ்வார்பேட்டை தெருவில் சண்டை செய்து கட்டி உருண்டு இருக்கவேண்டும். யார் போய் சொல்றது ராபின் வில்லியம்ஸ்கிட்ட.

உலக சினமாவை டப்பாவில் போட்டு குலுக்கி எடுக்குற மதன் போய் வில்லியம்ஸ்கிட்ட சொல்லுவாரா? அவர் கமல்ஹாசனிடம்தான் சொல்லுவார்:

“ராபின் வில்லியம்ஸ் நடிச்ச புதுப்பட சி.டி ஒன்னு இருக்கு பாக்குறீங்களா?”ன்னு.

‘‘எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சம்பளம் தரலாம்’’என்று உலகத் தமிழர்களின் ஓரே துயரம் திருட்டு வி.சி.டிதான் என்பதுபோல், மிகத் தீவிரமாக கொதித்திருக்கிறார் சேரன்.

சேரன் சொன்னதையே கொஞ்சம் திருப்பிப்போட்டு பார்ப்போம்.  இதே யோசனையை, வெளிநாட்டு சினிமாக்காரர்கள் சொன்னால், எப்படி சொல்லியிருப்பார்கள்:

இந்தியாவில எங்காவது திருட்டுத்தனமாக நம்ம படத்தை காப்பியடிச்சு தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த திரையுலகம் சார்பாக மாநிலத்திற்கு 100 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்து லட்சம் வரைக்கும் சம்பளம் தரலாம்

இது உண்மையில் நடைமுறைக்கு வந்தா, எவ்வளவு பெரிய மனுசங்க எல்லாம் அடிவாங்குவாங்க…அதுவும் கடுமையா அடிபடற பெரிய மனுசங்க எல்லாம் இருக்காங்க…. நினைச்சாலே நமக்கு பயமா இருக்கு.

‘ஒரு சினிமாவை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்? கடன வாங்கி, ராத்திரி பகலா, கண்முழுச்சி பாடுபட்டு, சிரமப்பட்டு எடுக்குறோம். அதபோய் திருட்டு வி.சி.டி. போடுறானுங்களே?’ என்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட துயரத்தை விடவும், இதுபெரிய துயரம் என்பதுபோல் மிகவும் மனம் ஒடிந்துபோகிறார்கள் சினிமாக்காரர்கள்.

கஷ்டப்படுறதுனாலேயே ஒரு விசயம் நியாயம் ஆகிவிடுமா?

அப்படி பார்த்தால், பெரும் பணக்காரர்கள்தான் சினிமா எடுக்க வருகிறார்கள். பெரும்பான்மையான சினிமாக்கள், கருப்பு பணத்துலதான் தயாராகிறது. நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் கொடுக்கப்படுகிற சம்பளம் வெளிப்படையாக இல்லைங்கறதே அதற்கு சாட்சி.

ஆனால், புதுப்படத்தை வி.சி.டி.யில் கொண்டுவருகிறவர்கள், தன் பொண்டாட்டி தாலிய அடகு வைச்சோ இல்ல 10 வட்டிக்கு பணம் வாங்கியோ கொண்டுவருகிறவர்கள்போல்தான் தெரிகிறார்கள். போலிசுக்கு பயந்து, மாட்டுனா குண்டர் சட்டத்துல் கைதாகி… பல வருடங்கள் உள்ள இருக்க வேண்டிய சூழல் வேற…

ஒப்பிட்டளவில் பாத்தா, சினிமாக்காரர்களைவிடவும், புதுப்பட வி.சி.டிபோடுகிறவர்கள்தான் அதிக பிரச்சினைகளை, சிரமங்களை சந்திக்கிறதா தெரியுது. சிரமம் மட்டும்தான் ஒரு விசயத்திற்கான உரிமைய தீர்மானிக்கிறது என்றால், அப்போ புதுப்பட வி.சி.டி.காரங்க சிரமத்தை ஒத்துக்கிட்டு அமைதியாக இருக்கவேண்டியதுதானே? எதுககு ஒப்பாரி.

சரி, அதெல்லாம் இருக்கட்டும்.

இந்த மாமேதைகள் எடுக்கிற படங்கள், பல நேரங்களில், திருட்டு வி.சி.டிகளில் கூட சரியா ஓட மாட்டேங்குது. அந்தப் படத்தோட தயாரிப்பாளர் மட்டுமல்ல. அதை திருட்டு வி.சி.டி போட்டவர்கள்கூட நஷ்டம் தாங்காம நடுத்தெருவுக்கு வந்துடுறதா சொல்றாங்க.

இதுயார் தப்பு? இதுக்கு யார் பொறுப்பு?





பொங்கல் தமிழர் திருநாளா? அப்படியா? பரவாயில்லையே!

14 01 2010


mattu-vandi.jpg

சென்னை லயோலா கல்லூரி, மாணவர் பேரவையால் நடத்தப்பட்ட ‘விழி’ என்ற மாத இதழுக்காக 2007 ஆம் ஆண்டு கடைசியில் எழுதியது. இரண்டாண்டுகளுககு முன் பிரசுரிததை மீண்டும் பிரசுரிக்கிறேன்.

***

யிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.

என்ன காரணம்?

முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம்.

உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்?

தீபாவளி கொண்டாடப்படுவதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியை தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாக  கொண்டாடுவதற்கு, மத ரீதியாக பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.

சரி. இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு?

பார்ப்பனியம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்கு தரமால், தீபாவளிக்கு தரப்படுகிறது.

தீபாவளி விசேஷமாக கொண்டாடப்படுவதின் 100 சதவீத காரணம் இதுதான்.
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனசை’ குறிவைத்து தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளி கொண்டாட்டத்திற்கு’ மக்களை தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சரி, அதுக்கு என்ன செய்யிறது?

தீபாவளிக்கு இருக்கிற மவுசை குறைத்து அதை பொங்கலுக்கு கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்கு தருகிற ‘போனசை’ நிறுத்தி, அதை பொங்கலுக்கு  மாற்றவேண்டும்.

மாற்றினால்?

“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்” என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சை தமிழனாக மாறி பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளை கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.

அப்புறம் என்ன ஆகும்?

வழக்கம் போல தாழ்த்தப்பட்ட மக்களை தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாக கொண்டாடப்படும்.

என்னங்க இது புது கதையா இருக்கு? தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா? எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.

jalli.jpg

நீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா? தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிகட்டில் – மாட்டை அடக்குற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா?

‘மாட்டுபொங்கல்’ என்று ஒரு நாளை தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா?

பார்பபனர்களை திட்டுன சந்தோஷபடுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பார்ப்பனரா மாறிடிறீங்க? என்னங்க நியாயம் இது?

-வே. மதிமாறன்

‘விழி’ மாத இதழுக்காக 2007 எழுதியது.





புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

9 01 2010

பெரியாரின் பூ மாலையும் போர்வாளும்

-வே. மதிமாறன்

விலை ரூ. 15

பெரியார் கொள்கைகளில், எம்.ஆர். ராதா-என்.எஸ்.கே வின் பங்களிப்பு.

எம்.ஆர். ராதாவையும், கே.பி. சுந்தராம்பாளையும் ஒன்றாக கருதுகிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு கண்டனம்

நூலிலிருந்து…..

பொதுவாக பார்ப்பன ஜாதிவெறி, தமிழர்களுக்கு தீமையையே செய்திருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பார்ப்பனியம் தமிழர்களுக்கு நன்மையை செய்தது.

ஆம். அது தந்தை பெரியார் என்கிற மகத்தான தலைவனை தமிழர்களுக்குத் தந்தது.

***

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி

-வே.மதிமாறன்

http://mathimaran.files.wordpress.com/2007/09/book2.jpg?w=343&h=530

“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”

“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.”

***

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்

பாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு

-கி.பார்த்திபராஜா

தம்பி நான் ஏது செய்வேணடா?

பாரதி பற்றி பாரதிபுத்திரன்

இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்

-ந.இரவீந்திரன்

***

பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்

-மருதையன்

-வே.மதிமாறன்

http://mathimaran.files.wordpress.com/2007/09/book3.jpg?w=335&h=530

பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.

“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.

“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.

“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.

-மருதையன்

மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.

அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.

நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.

-வே.மதிமாறன்

***

வே. மதிமாறன் பதில்கள் நூல் அறிமுக விழா உரைகள்

விலை: 35

தமிழேந்தி

விடுதலை ராசேந்திரன்

பெரியார்தாசன்

கௌத்தூர் மணி

மருதையன்

இவர்கள் பேசிய பேச்சுகள் அடங்கிய எம்.பி 3

***

வே. மதிமாறன் பதில்கள்

…..அதற்கு விழிப்புணர்வு ஆசிரியர், காமராஜ், “கேள்வி பதில் பக்கத்தை ஆரம்பிக்கலாம். அதை நீங்களே எழுதுங்கள்” என்றார்.

“நான் எழுதுவதை விட, மிக பிரபலமான எழுத்தாளர்கள் யாரையாவது எழுத வையுங்கள். அது பத்திரிகைக்கு விளம்பரமாகும்” என்றேன். ஆனால் அவர் என்னையே எழுதும்படிக் கட்டாயப்படுத்தினார்.

‘சோ, சுஜாதா, மதன், சுந்தர ராமசாமி, ஞாநி’ இவர்களாலேயே கேள்விகளுக்குப் பதில்கள் எழுதமுடியும்போது, என்னால் முடியாதா என்ன?’ என்று துணிந்து ஒத்துக் கொண்டேன். ‘விழிப்புணர்’வில் ஆரம்பித்து ‘சமூக விழிப்புணர்வு’ வரை மொத்தம் ஆறு இதழ்களில் பதில்கள் எழுதினேன்.

என் பதில்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மாரக்ஸ், பெரியார், அம்பேத்கர் பற்றியும் கலை, இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த ஞானம் உடையவர்களில் இருந்து இவைகள் பற்றி எதுவும் தெரியாத நபர்கள் வரை பதில்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்தது.

அந்த கவனம் – பாராட்டுதலாக, கோபமாக, எரிச்சலாக, பொறாமையாக பல்வேறு வடிவங்களில் `அவதாரம்` எடுத்தது.

நமது பதில்களின் தாக்கத்தால், ‘பத்தவைச்சிட்டியே பரட்ட’ என்கிற பாணியில் புதிதாக சில பத்திரிகைகளிளும் ‘கேள்வி பதில்’ பகுதியைத் துவங்கின.

சில எழுத்தாளர்களும் ஆர்வ மிகுதியால் நமது பாணியை பின்பற்றி, கேள்விக்கு பதில்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வாழ்த்துகள். இப்படி ஒரு அலையை உருவாக்கியதற்காகக் தோழர் கு. காமராஜுக்கு நன்றி சொல்லவேண்டும்.

முன்னுரையில் வே. மதிமாறன்…

பக்கங்கள் 88. விலை ரூ. 35.

அங்குசம் வெளியீடு

***

நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை

-வே. மதிமாறன்

விலை ரூ. 60

டாக்டர் அம்பேத்கரின் இந்துமத, பார்ப்பனிய எதிர்ப்பு வீச்சின் விஸ்வரூபம்.

நூலிலிருந்து…..

ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் போராடிய போராளியைப் புரிந்துகொள்ளுங்கள் தலித் அல்லாதவர்களே.

***

சென்னை புத்தகக் காட்சியில் கடை எண் 11 பீப்ள்ல் வாட்ச், கடை எண் 64–65 கீழைக்காற்று, கடை எண் 221 புதுப்புனல், கடை எண்  240 – 241 விழிகள், கடை எண் 271 கருப்பு பிரதிகள், கடைஎண் 457 தாய்மண், கடை எண் 460 அலைகள் கடைகளில் கிடைக்கும்.

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்

எண்.15, எழுத்துக்காரன் தெரு

திருவொற்றியூர்

சென்னை-600 019.

பேச; 9444 337384